skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

டிவிட்டரில்

Labels

சினிமா (20) அறிவியல் (12) சமூகம் (12) அரசியல் (6) பொதுவானவை (6) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) சென்னை (2) மத‌ம் (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) விகடன் (1)

ஆண்ட்ராய்ட்-ல்...

சின்ன வீடு

  • எ.பி.பா's
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி - எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய ப...
    1 year ago

ஃபாலோ மீ...

பழைய சோறு

  • ►  2012 (2)
    • ►  November (1)
    • ►  March (1)
  • ►  2011 (4)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  February (1)
  • ►  2010 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2009 (5)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (1)
  • ►  2008 (7)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2006 (22)
    • ►  December (2)
    • ►  September (3)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2005 (12)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (4)
  • ▼  2004 (8)
    • ▼  November (1)
      • திரு. கலாமிற்கு ஒரு கடிதம்.
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
  • ►  2003 (1)
    • ►  June (1)
There was an error in this gadget

Visits


View My Stats

Facebook Badge

சீனு Cheenu

Create your badge

Popular Posts

  • சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக
    "உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...
  • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...
  • The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!
    வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...

விழுதுகள்

Tuesday, November 30, 2004

திரு. கலாமிற்கு ஒரு கடிதம்.




மாண்புமிகு மூத்த குடிமகனாருக்கு,
இந்த தேசத்தின் கடைக்குடிமகன் மணதில் வேதனை தாங்கி விழையும் மடல்.
இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்களா அல்லது உங்கள் காரியதரிசி மட்டுமே படிப்பார்களா என தெரியாது. ஆனாலும் ஒரு நம்பிக்கையுடன் தான் வரைகிறேன்.
நாங்கள் தமிழ் நாட்டில் உள்ள ஒரு சிரு நகரமான வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர்கள். எனக்குத் தெரிந்த சகோதரி பருகூரில் உள்ள ஒரு கல்லூரில் படித்து வந்தாள் (இறந்த காலம்!!!). அவள் பெயர் சங்கீதா. அவள் குடும்பத்தில் அவள் மட்டுமே படிக்கும் பெண். அவள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவள் கல்லூரியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ரத்ததான முகாம் நடந்தது. அந்த முகாமில் ரத்தம் எடித்தது கிருட்டினகிரி அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். சமுதாயத்திற்கு தன்னால் ஆன ஒரு சிரு உதவியாகத்தான் அவளும் அந்த ரத்ததான முகாமில் தன் உடம்பில் இருந்து ரத்தம் கொடுத்தாள். ரத்தம் எடுத்தவர்கள் அவர்களுடைய பக்கம் பாதுகாப்பிற்காக எல்லா கோப்புகளிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். ரத்தம் கொடுக்கும் பொழுது அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் (Low Blood Pressure) இருந்திருக்கிறது. ரத்தம் கொடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய சில சோதனைகளை செய்தார்களா என தெரியவில்லை. ஆனால் அவள் தனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறியிருக்கிறாள்.
பிறகு அவள் மிகவும் சோர்வாகவே கானப்பட்டாள். இது நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு, அதாவது சென்ற வாரத்தில் ஒரு முறை மயங்கி விழுந்தாள். அவளை மருத்துவமைக்கு கொண்டு சென்ற பொழுது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறினார்கள். வேறு வழியில்லாமல், அவர்களின் ஆபத்பாந்தவனான அரசு மருத்துவமைக்கு சென்று சேர்த்தநர். அதுவும் எந்த அரசு மருத்துவமனையில் என்றால், எல்லா வ்சதிகளும், எல்லா சாதனங்களும் இருப்பதாக கூறிக்கொள்ளும் சென்னை அரசு மருத்துவமனையில். அங்கு சென்று சேர்த்ததும் அவளை ஒரு அவசர நோயாளியைப் போல பாவிக்காமல் எதோ ஒரு சாதாரன நோயாளியைப் போல பாவித்தனர். நான் குறிப்பிடுவது அவர்கள் கொடுத்த மரியாதையை அல்ல. அவர்கள் அதை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிந்ததால் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் அங்கே ஒரு உயிர் துடிப்பதை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அவர்களின் மனம் மருத்துப்போன ஒன்று. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று சங்கீதாவின் தாயார் கேட்டார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் என்னவென்றால் அவசர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள நோயாளிகளை பார்ப்பது நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் கொடுக்கும் என்பதால். அவர்கள் இந்த காரணத்தை சொல்லித்தான் சங்கீதாவின் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அங்கே கண்ட காட்சி...அங்கு இருக்கும் Ward Boy மற்றும் செவிலியர்கள் அந்த நோயாளிகள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு போடும் கூச்சலினால் நோயாளிகளுக்கு உருவாகும் சிரமம் சங்கீதாவின் தாயார் சென்று பார்ப்பதினால் உருவாகாது என்பது என் தாழ்மையான கருத்து.
மேலும் அந்த பெண்ணுக்கு CT Scan எடுக்க 4 நாட்கள் ஆனது. அதற்கு காரணமாக சொல்லப்பட்டது அங்குள்ள கணினி Busy-ஆக இருந்ததினால். மேலும் என்ன நோய் என்று கேட்டதற்கு அவர்கள் சொல்ல பதில், "அது உங்களுக்கு புரியாது. ஆனால் அது ஒரு கொடுமையான நோய்" என்று. படிக்காதவர்களான அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்ற இருமாப்பு. ஆனால் கடைசி வரை அந்த பெண்ணுக்கு என்ன நோய் என்பதே தெரியவில்லை. இப்பொழுதும் தான். சங்கீதாவின் சகோதரன் அங்கு சென்ற பிறகு அவன் என்ன நடக்கிறது என்று கேட்கவும் (அதுவும் அவன் ஆங்கிலத்தில் சத்தம் போட்டதும்) அவர்கள் அவளை ஓரு ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ஆனால் அவையாயும் மிக தாமதமான செயல் என்பது கடந்த சனிக்கிழமை மதியம் தான் உணர முடிந்தது. அவள் உயிர் பிரிந்தது. பிறகு அவர்களின் அடுத்த போராட்டம் தொடங்கியது. அந்த போராட்டம் சங்கீதாவின் உடலை பெருவதற்கு. அவள் உடலை பெருவதற்கு அவர்கள் பட்டபாடு சுமார் ஆறு அரை மணி நேரம். பிறகு எல்லா சம்பிரதாயங்களையும் முடித்த பிறகு (அதாவது லஞ்சம்) ஒருவழியாக திருப்பத்தூருக்கு வந்து அவள் அடக்கம் "மட்டுமே" நல்ல விதமாக முடிந்தது.
சங்கீதா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன தெரியுமா? "பாஸ்கர் அண்ணா வந்தா என்னை இந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேறு ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகச் சொல்லுங்க. எனக்கு பயமா இருக்கு". ஆனால் சென்னையில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமையில் என்ன நடந்தது தெரியுமா? ரத்த சுதிகரிப்பு (Dialysis) செய்ய வந்த ஒரு நோயாளி, அங்குள்ள ஒரு ஊழியரின் அஜாக்கிரத்தையினால் ரத்த குழாயினுள் ஒரு Air Bubble சென்று அந்த நோயாளி இறந்து விட்டார். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் அதை மறைத்துவிட்டது. இது எனக்கு அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொன்னது.
என் கேள்வி ! இந்த தேசத்தின் குடிமகன்/ள் ஒரு நற்காரியம் செய்ய துனிவது ஒரு பெருங்குற்றமா? மனித ரத்தம் என்பது உருவாக்க முடியாதது. அதனால் தான் அதற்கு இவ்வளவு விளம்பரங்கள் செய்து ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் (எங்கள்) சந்தேகம் இந்த அரசாங்கங்கள் தங்களின் ரத்த தேவைக்காக மக்களிடம் பொய் சொல்கிறதா? என்பது தான். ஏன் என்றால் அந்த மருத்துவமையில், மருத்துவர்கள் இன்னொரு மருத்துவர்கள் செய்யும் தவறை மறைக்கிறாகள். இது கண்கூடாக தெரிகிறது. ஒரு நோயாளிகளின் நோயையோ அல்லது எந்த நோயினால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
இந்த இறப்பு சொல்லும் பாடம் என்னவென்றால், அன்று சங்கீதாவின் இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களிடம் (சுமார் 100 பேர்களிடம்) சொல்லப்பட்டது...ரத்த தானத்தை எதிர்த்து. இதை நாங்கள் ஒரு குழுவாக செய்ய முடிவெடுத்துள்ளோம். காரணம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சங்கீதா இருக்கிறாள் என்பதால். இந்த அரசாங்கம் என்ன தான் செய்ய முடியும். அந்த பெண்ணிற்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்காது என்பது தெரியும். ஏனென்றால் எங்களுக்கு நம்பிக்கையாய் இருந்த ஒரே தூணான நீதித்துரையின் மேல் எங்கள் நம்பிக்கை வேகமாக குரைகிறது. அதுவும் போபால் விஷவாயிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இப்பொழுதான் நிவாரணமாக கிடைத்திருக்கிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்டதற்கு சமம். அட்டைபூச்சிகளாக ரத்தம் எடுத்த அந்த மருத்துவமனிகுழுயும் அவர்கள் பக்க நியாயத்திற்கு வேண்டியவனவற்றை கையெழுத்தாக வாங்கிவிட்டர்கள். ஆக கடைசியாக எந்த பக்கமுன் அடி வாங்குவது இந்த நாட்டின் கடைக்குடிமகனான நாங்கள் தான் (எங்கள் நோக்கம் நல்லவையாக இருந்தாலும்!!!). எங்களுக்கு செல்ல வேறு நாதியில்லை. ஆதலால் உங்களிடம் சொல்கிறோம்.
இந்த ஒரு சங்கீதா இறந்தாலும் பரவாயில்லை. நாங்கள் அவள் விதி முடிந்துவிட்டதாகவே எங்களை நாங்கள் சமாதானப்டுத்தி கொள்கிறோம். ஆனால் இந்த தேசத்தில் உள்ள மற்ற சங்கீதாக்களை எப்படி காப்பாற்றப்போகிறோம்???
"காட்சி கெளியன் கடிஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்"

காட்சிக்கு எளிமையும், கடிஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

ஆனால், எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பதைப்போல, இந்த நிகழ்ச்சி மற்ற சங்கீதாக்களை பற்றியும் எங்களை யோசிக்க வைத்தது. இந்த கடித்தத்தில் ஏதாவது எழுத்துப் பிழை இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
பி.கு. இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதுவதற்கு காரணம், மற்றவற்கு இது பத்தோடு பதினொன்று தான்.
வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!!


Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 11/30/2004 01:32:00 PM 1 கும்மாங்குத்துகள்...
வகைகள் சமூகம்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Related Posts with Thumbnails

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்