பணம் இன்றைய வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சியால் இன்று NRI-களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. மேலை நாட்டு கலாச்சாரம், சுதந்திரம் மற்றும் முக்கியமாக சம்பளம் ஆகியவற்றின் தாக்கத்தினால் இந்தியாவிற்கு திரும்புகிறவர்களும் குறைவு. வெளிநாட்டில் உள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கு சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை விசித்திரமானது. இங்கு இருந்ததைப் போல வாழ முடியாது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்பதே தெரியாது. அவர்களை பார்த்தார்களா என்பதும் தெரியாது. இருந்தால் அங்குள்ள இந்தியர்கள் ஒரு கூட்டமாக இருக்கலாம். இந்தியாவில் இருக்கும் தங்கள் குடும்பத்திற்காக பலவற்றை தியாகம் செய்கின்றனர். (Of course, அவர்கள் வாழ்க்கையை நான் வாழாததால் இங்கு நான் எழுதியிருப்பவை தவறாகவோ அல்லது பொய்யாகவோ தோன்றலாம்...).
அடுத்து, திருமணம் என்று வரும்பொழுது அவர்கள் போடும் நிபந்தனைகள் தான் விசித்திரங்களுக்குள்ளாகிறது. தனக்கு இணையாக தங்கள் better half-ம் இருக்கவேண்டும் என எண்ணுகின்றனர். அதாவது இவர் ஒரு engineer-ஆக இருந்தால் அவர் மனைவியும் engineer-ஆகவோ அல்லது அதற்கு இணையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தவறில்லை தான். ஆனால், உதாரணத்திற்கு மனைவி ஒரு B.E. அல்லது MCA என்று வைத்துக் கொள்வோம். அங்கே செல்லும் அவர்கள் வேலைக்குச் செல்வார்களா? இந்த நிலையில், அவர்கள் படித்தது விழலுக்கு இறைத்த நீராகத்தானே போகிறது. அதற்காக பெண்கள் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், இவர்கள் படிப்பும், திறமையும் வீணாகத்தானே போகிறது. அப்படியானால், இங்கிருந்து வெளிநாட்டிற்கு மருமகளாகப் போவதற்கு B.E.-யும், M.C.A-வும் ஒரு தகுதியா (qualification) என்ன?
இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. பெற்றோர்கள் தங்கள் மகள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற இடம் அமெரிக்கா போன்ற வெளிநாடுதான் சிறந்தது என நம்புகிறார்கள். அல்லது, ஒருவேளை இப்படி இருக்கலாமோ? அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்க்கை நடத்துவது மிகவும் costly-ஆனது. அதனால் தானோ என்னவோ, அங்கு சென்றதும் இந்தியப் பெண்னை திருமணம் புரிகின்றனரோ? யாமரியோம் பராபரமே...





0 இலைகள்:
Post a Comment