அறிவியல் என்பது ஒரு பிரச்சினைக்கு தீர்வு சொல்லப்படும் சாத்தியம். அறிவியலில் Invention மற்றும் Discovery ஆகியவை சேறும். ஒரு பொருளை கண்டுபிடிப்பது Discovery. உதா, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் (இப்பொழுது இதுவே சர்ச்சை ஆகியுள்ளது). Invention என்பது உருவாக்குவது. உதா, மார்கோனி வானொலியை உருவாக்கினார். அறிவியல் மிகுந்த வரவேற்பை பெற்றது Invention-களினால். ஆனால், பிரச்சினையே Invention-ல் தான்.
என்னை கேட்டால் அறிவியலின் ஒரே ஒரு சாதனை, மனிதனின் சராசரி வயதை 40-ல் இருந்து 60-ஆக உயர்த்தியது தான். இங்கே நான் அந்த 20 வருட extra வாழ்க்கையின் side effects-ஐ சேர்க்கவில்லை. அறிவியல் இரண்டு வழிகளில் உருவானது (அட! சூரியனுக்கே டார்ச்-ஆ?).
1) மனிதன் என்றைக்கு இயற்கையைப் பார்த்து பயப்பட ஆரம்பித்தானோ, அப்பொழுதும்,
2) தான் அறிந்ததை குறிப்பெழுதி வைக்கப் பழக்கப்பட்ட பின்னரும்.
அறிஞர்கள் தாங்கள் அறிந்ததை குறிப்பெடுக்க, அவருக்கு பின்னால் வந்தவர்கள் அந்த குறிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றார்கள். உதா, முதலில் பூமி தான் இந்த பிரபஞ்சத்தின் மையப் பகுதி என்றும், மற்ற கிரகங்கள் பூமியைச் சுற்றி வருகிறது என்று அறிஸ்ட்டாடில் நம்பினார். பின்னர் வந்த டோலுமி (Ptolemy)-யும் இதையே கொண்டு அறிஸ்ட்டாடிலின் கருத்தை விஸ்தரித்தார். அதன் பின்னர் வந்த நிக்கொலஸ் காப்பர்னிசொஸ் (Nicholas Copernicus) சூரியன் நடுவில் இருப்பதாகவும், மற்ற கிரகங்கள், பூமியையும் சேர்த்து, சூரியனை வட்ட வடிவ சுற்றுப் பாதையில் சுற்றி வருவதாகவும் கூறினார். அதன் பின்னர், ஜொஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler) அந்த சுற்றுப் பாதை வட்டம் அல்ல என்றும் நீள் வட்டப் பாதை என்றும் பரிந்துரைத்தார். ஆக, ஒரு விஷயம் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அறிஸ்ட்டாடில் கனித்தது தவறு தான். ஆனால், அந்த தவறு தான் டோலுமி கண்டுபிடிக்க வித்தாக இருந்தது.
மேலே, நான் சொன்னவை Discovery வகையை சாரும். இவர்கள் கண்டுபிடித்தது யாவும் எந்த side effects-ம் இல்லாதது. அதாவது, உடலினாலும் உள்ளத்தினாலும். ஆனால் இந்த invention இருக்கிறதே, அதுவும் முக்கியமாக வேதியியல் உருவாக்கங்கள்...இவை தான் இந்த பூஉலகின் முழு முதற் எதிரி. வேதியியல் உருவாக்கங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் தவிர்க்கவே முடியாத ஒன்று, இந்த side effects. அது சிறிய அணுவில் ஆரம்பித்து (micro), ஒரு சிறு மாத்திரையில் ஆரம்பித்து, கண்டுபிடிக்கப்பட்ட யாவும்.
அணுவைப் பிளந்தால் பின் விளைவுகள் நமக்கு ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி ஆகிய நகரத்தின் அழிவிலிருந்தும், அதன் side effect-களில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதே அணுப்பிளவை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம் இல்லையா? என்று கேள்வி எழலாம். ஐயா! மின்சாரமும் ஒரு Invention தானே. அதை உபயோகப்படுதினால் வரும் side effect, வெப்பம். சரி இருக்கட்டும். மின்சாரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்றே வைத்துக்கொள்வோம். அதனால், மின்சாரத்தை தயாரிக்க அணு உலைகளை ஏற்படுத்தலாம் என்று வைத்துக் கொள்வோம். அணு உலைகளுக்கு முக்கியத் தேவை யுரேனியம். இது மிக அடர்த்தியான ஒரு உலோகம். இது பாறைகளிலும், பூமியின் மேற்பரப்பிலும், ஏன் கடல் நீரிலும் பரந்து இருக்கிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த யுரேனியமமானது லேசாக கதிரியக்கம் கொண்டது. இது ஒரு டன் எடைக்கு 0.1 வாட் சக்தியை தருகிறது. இந்த சக்தியானது பூமியின் மையப்பகுதியை உஷ்னப்படுத்த போதுமானது.
மண்ணில், நிலப்பரப்பில் காந்தத் துகள்கள் இருக்கும். அவற்றுக்கு சக்தி ஒன்றும் இருக்காது. ஆனால், அவற்றை கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒரு சிறு காந்த உருண்டையாக சேர்த்தால், அந்த காந்த உருண்டைக்கு சக்தி வந்து மற்ற சிறிய இரும்பு பொருட்களை ஈர்க்கும் சக்தி வந்துவிடும். அதே போலத்தான், இந்த யுரேனியம் விஷயத்திலும் நடக்கிறது. பரந்து இருக்கும் யுரேனியத்தை ஒரே இடத்தில் சேர்த்தால் அதன் கதிரியக்கம் அதிகரிக்கும். அணுக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சரி! மிக மிக அதிகபட்ச பாதுகாப்பு இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். உற்பத்தியில் உழைக்கும் மனிதர்கள் அதன் கதிரியக்கத்தில் பாதிப்படைகிறார்கள். ஆக, பாதிப்பில்லாமல், side effect இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
அணுவை விடுங்கள். நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். ம்..ம்..இன்று எல்லோர் வீடுகளிலும் இருக்கும் குளிர்சாதனப்பெட்டி, அல்லது மோட்டர் வாகனங்கள். Mechanical energy is converted into heat energy. இவை 60 - 95 சதவிகித கார்பன் மொனோக்ஸைடை (CO) வெளியேற்றுகின்றன. இது ஓசோனை ஓட்டை போடுவதற்கு போதுமானது. உலகிலேயே அதிகமாக ஓட்டை உள்ள இடம், ஆஸ்திரேலியாவின் மேலே இருக்கும் ஒசோன் படலம் தான். இத்தனைக்கும் உலகின் மிக குறைந்த அளவு மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு.
பெட்ரோலில் ஓடும் வாகனங்களினால் தானே இந்தப் பிரச்சினை எல்லாம். சூரிய ஒளியில் இயங்கும் வாகனம் வந்தால் சரியாகிவிடும் என்கிறீர்களா? அதன் side effect இப்பொழுது தெரியாது. அதை உபயோகப்படுத்த ஆரம்பித்து 10-20 வருடங்களுக்கு பிறகு தெரியும்.
அவ்வளவு ஏன்? மருத்துவரை அனுகினால் அவர் ஒரு பருந்துப் பட்டியலே தருவார். அது பெரும்பாலும் ஒரு மருந்தின் side effect-ஐ மற்றொரு மருந்தால் முறியடிக்க. உதா, ஒரு சில மாத்திரைகள் சாப்பிட்டால் வயிற்றில் புண் (ulcer) உண்டாகும். அதனால், அதை முறியடிக்க Zinetac என்னும் மத்திரையை பரிந்துரைப்பார்கள். இப்படியே அந்த prescription நீளும்.
இவற்றிகு தீர்வு? மனிதன் வேதியல் என்னும் புலியின் வாலைப் பிடித்துக் கொண்டான். அதனால், Global Warming என்னும் கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டே இருக்கிறது. புலி வாலை விடுவது அவனுக்கு ஆபத்தாக முடியும். இப்பொழுது உலகில் வெப்ப எரிவாயுக்கள் வெளியேருவதை ஒருவேளை நிறுத்தினாலும் கூட, இந்த Global Warming உண்டாக்கும் அழிவில் இருந்து தப்ப முடியாது. உதா, ஆர்டிக் உறைபனிக் கடல் "Point of No Return" எனப்படும் திரும்பப் பழைய நிலைக்கு வர முடியாதபடி உருகிக் கொண்டிருக்கிறது. கிரீன்லாந்டின் மாபெரும் பனி அடுக்குகள் உருகத் தொடங்குகிறது. இவை உருக ஆரம்பித்தால் கடல் நீர்மட்டம் 20 அடிகள் உயர்ந்தாலும், பேரழிவு நிச்சயம்.
இந்த தலைப்பினை இப்போதைக்கு சுருக்கமாக எழுதினாலும் கூட முற்றுப் பெறாது. ஆனாலும் 20 வருட extra வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை ரொம்பவே அதிகம்.





0 இலைகள்:
Post a Comment