Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 13, 2016

Saving Mr. Banks (2013)

சென்னைக்கு வந்த புதிதில், (2004 சுனாமிக்கு 2 நாளுக்கு பிறகு) திருவல்லிக்கேனியில் தங்கியிருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் ஒரு எட்டு பர்மா பஜாருக்கு சென்று, டிவிடி கலெக்‌ஷன் வாங்கி வந்து படம் பார்ப்பேன். ஆரம்ப காலகட்டத்தில் எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாது. அட்டைப்படம் பிடித்திருக்கிறதா, எத்தனை ஆஸ்கர் வாங்கியிருக்கிறது - இவையே முக்கியமாக பட்டது. அப்பொழுது வாங்கிய டிவிடிக்களில் இரண்டு படங்கள் சவுண்ட் ஆஃப் ம்யூசிக் (Sound of Music aka சாந்தி நிலையம்) மற்றும் மேரி பாப்பின்ஸ் (Mary Poppins). இரண்டுமே ம்யூசிகல் சப்ஜெக்ட். நம்ம ஊர் படங்கள் மாதிரி இடையில் பாடல்கள் வரும். இரண்டில், சவுண்ட் ஆஃப் ம்யூசிக் பற்றி என் அம்மா சொல்லியிருந்ததால் அதை பார்த்தேன். முதல் முறை பார்க்கும் போது SoM அவ்வளவா பிடிக்கலை (Gone with the Wind-ம்). அதனால், மேரி பாப்பின்ஸை இன்று வரை ஏனோ பார்க்கவில்லை. ஆனால், அதன் அட்டைப்படம் இன்றளவிலும் நினைவில் இருக்கிறது.


மேரி பாப்பின்ஸ் 1964-ல் வந்த ஒரு பேன்டஸி படம். மேரி பாப்பின்ஸ் P.L.ட்ராவர்ஸ் எழுதிய குழதைகளுக்கான 8 புத்தகங்களில் ஒரு கதாபாத்திரம் (ஹாரி பாட்டர் போல). மேரி பாப்பின்ஸ் என்பவர் ஒரு .குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் ஒரு nanny. குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை சாதுர்யமாக தீர்க்கும் ஒரு மேஜிகல் நேனி. (எத்தனை பழைய தமிழ் படங்களில் பார்த்திருப்போம்). அவரை பற்றின கதை தான் புத்தகங்கள். அந்த கதை புத்தகங்களின் படமாக்கமே மேரி பாப்பின்ஸ்.

சரி! சேவிங் மி. பேங்க்ஸ்-க்கும் மேரி பாப்பின்ஸ்-க்கும் என்ன சம்பந்தம்? ஒன்றே ஒன்று தான். மேரி பாப்பின்ஸ் புத்தகத்தை திரைப்படமாக்கும் முன் இருந்த போராட்டம் தான் இந்த படம்.

வால்ட் டிஸ்னியை தெரியும் தானே? மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். அவர் தன் மகளுக்கு அவள் சிறு வயதில் ஒரு வாக்களிக்கிறார். அதன்படி அவளுக்கு மிகவும் பிடித்த மேரி பாப்பின்ஸ் நாவலை அதன் உரிமையாளரிடம் வாங்கி, படமாக்க முயற்சிக்கிறார். அதனால் அந்த நாவலை எழுதிய பமீலா ட்ராவர்ஸ் (Pamela "P. L." Travers)-ஐ, ம்ஹூம்...மிஸஸ்.ட்ராவர்ஸ் (இப்படி கூப்பிட்டா தான் அவருக்கு பிடிக்குமாம்) அனுக அவர் ஏதோ காரணத்தால் தவிர்க்கிறார். டிஸ்னி...ம்ஹூம்...வால்ட் (இப்படி கூப்பிட்டா தான் இவருக்கு பிடிக்குமாம்) முயற்சித்துகொண்டே இருக்கிறார்...20 வருடங்களாக. ஒவ்வொரு வருடமும் முயற்சி செய்வார் வால்ட். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டார் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். காரணம்? ஒரே ஒரு பயம். எங்கே அவரின் அந்த பேவரைட் நாவலை சினிமா கெடுத்துவிடும் என்ற பயம் ட்ராவர்ஸுக்கு. அந்த நாவல் அத்தனை பொக்கிஷம்.

கதை நடப்பது 1961-ல். கூடவே 1902-ல் நடக்கும் கதையும் பேரலலாக காட்டப்படுகிறது. அது ட்ராவர்ஸின் குழந்தை பருவம். அது பிறகு பார்ப்போம். ஆக, படத்தில் மூன்று கதைகள்.

1961-க்கு. ட்ராவர்ஸ் ஒரு வகையில் தனிமை விரும்பி. சிங்கிள். கொஞ்சம் சிடு சிடு. கடைசி வரை பிடி கொடுக்காமல் நழுவுகிறார். 1961-ல் அம்மனிக்கு கொஞ்சம் பணக்கஷ்டம். அதனால், நாவல் உரிமையை தர அரைமனதாக ஒத்துக்கொள்கிறார், முக்கியமாக, நிறைய கண்டிஷன்களுடன். கண்டிஷன்கள் பனால் ஆனாலும் அவருக்கு திருப்தி தானே.

கதை டிஸ்கஷனுக்காக (உரிமை இன்னும் கொடுக்கவில்லை) இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் ட்ராவர்ஸ் திரைக்கதையில் எல்லாவற்றையும் நிராகரிக்கிறார், மாற்றுகிறார். டிஸ்கஷன் ஆரம்பத்தில், திரைக்கதையின் முதல் பக்கத்தில் வரும் தலைப்பில் இருக்கும் அட்ரஸ் "17 Cherry Tree Lane, London" என்பதை "Number 17" என்று மாற்றுவதிலாகட்டும், படத்தில் எங்குமே சிகப்பு வண்ணம் இருக்கக்கூடாது என்ற கண்டிஷன்கள் ஆகட்டும். இதையெல்லாம் மாற்றுகிறார். கூடவே கதையில் பென்குயின்கள் ஆடும் இடங்களும் டிஸ்னி...Oops, வால்ட் கார்ட்டூன்களாக போடலாம் என்ற முடிவை 'கூடாது' என்கிறார். படத்தில் பாடல்கள் கூடாது என்கிறார். அதை வெறும் recitation-கள் என்று சம்மதிக்க வைக்கிறார்கள். தாங்களுக்கு இடையில் நடைபெறுவதை ரிக்கார்ட் செய்ய சொல்கிறாள் ட்ராவர்ஸ். (படத்தின் முடிவில் அந்த உரையாடல் இடம்பெறுகிறது). இப்படி ஒவ்வொரு நாளும் அத்தனை பேருக்கும் பெரும் போராட்டமாக கழிகிறது.

கண்டிஷன்களில் ஒன்னொன்று, வால்ட் அந்த மேரி பாப்பின்ஸ் கதாபாத்திரத்துக்கு மீசை வேண்டும் என்கிறார், ட்ராவர்ஸ் கூடாது என்கிறார். காரணம்.......? வர்ர்ர்ரும்...

அவரை மாற்ற, அவர் விருப்பத்துக்கு மாறாக, டிஸ்னி லேன்டுக்கு கூட்டிப்போகிறார் வால்ட். அங்கிருக்கும் Merry go Round-ல் பயணம் செய்ய வைக்கிறார். அப்புறம் அன்று அங்கேயே கழிகிறது. பின் மறுநாள் முதல் அவரிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது, பாடலுக்கு தாளம் போடுகிறார், ஆட்டம் ஆடுகிறார். எல்லோரும் ஒரு வழியாக செட்டாகும் நேரத்தில்...

ஒரு நாள் பென்குவின்கள் கார்ட்டூன்களாக காட்ட ஏற்கனவே வேலைகள் நடப்பதை அறிந்து கொண்டு, கோபித்துக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார். 'ட்ராவர்ஸ்' என்பது அவர் பெயர் இல்லை என்றும் தெரிந்துகொள்ளும் வால்ட், அடுத்த ப்ளைட்டை பிடித்து ட்ராவர்ஸ் வீட்டுக்கு செல்கிறார். ஆச்சர்யம்+அதிர்ச்சியுடன் வரவேற்கும் ட்ராவர்ஸிடம் மெல்ல பேசுகிறார்.

வால்ட்டுக்கும் மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கும் இடையில் நடைபெறும் அந்த 5 நிமிட உரையாடல் அவர்களுக்கு இடையில் இருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை தெரிவிக்கிறது. அது தன் பால்ய கால நிகழ்வுகள். அந்த நினைவுகளை கசப்புடன் கடந்து போகாமல் பிடித்துக் தொங்கிக் கொண்டிருக்கும் ட்ராவர்ஸ், தன் கசப்பான நினைவுகளை கடந்து சென்று கலை வழியாக மக்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை கொடுக்க நினைக்கும் வால்ட். இதுவே இருவருக்கும் உள்ள ஒற்றுமை/வேற்றுமை. நாவலை என்னிடம் நம்பி கொடு, நான் நாவலை கெடுக்க மாட்டேன் என்கிறார் வால்ட். ஒரு வழியாக ஒத்துக் கொள்கிறாள் ட்ராவர்ஸ்.

1902-ல், என்ன நடக்கிறது அவளோட பால்யத்தில்? தந்தை ட்ராவர்ஸ் ராபர்ட் கோஃப் (Travers Robert Goff) பேங்க் மானேஜர் (Mr. Banks). ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் செல்லும் ட்ராவர்ஸ் (தந்தை) பெருங்குடிக்கு ஆளாகிறார். வேலை பறிபோகிறது. குடும்பத்தில் பிரச்சினை. ஆனால் தன் மகள் ஹெலன்-க்கு பாசமுள்ள தந்தை. ஹெலன் - மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். அவளை பொருத்த அளவில் அவள் தந்தை தான் ரோல் மாடல். அவளை உருவாக்குகிறார். அவள் செய்யும் கற்பனைகளை ஊக்குவிக்கிறார். தந்தை-மகள் கதை ஒரு தனி ட்ராக் போல. ஹெலனை தன் கற்பனையின் ஊடே வாழப்பழக்குகிறார்.

அவருக்கு வேலை பறிபோகும் நிலை வருகிறது, ஆனால் அன்று ஹெலன் பேங்குக்கு வருவதால், அவள் மனதை நோகடிக்காமல் இருக்க வங்கி ஓனரின் தயவால் அதுவும் காப்பாற்றப்படுகிறது. ஒன்னொரு முறை, நிறைய குடித்து விட்டு ஒரு மேடையில் இருந்து இறங்கும் போது விழுந்து இடுப்பு ஒடிந்து படுத்த படுக்கையாகிறார் ட்ராவர்ஸ். கூடவே டிபி. ஆனால், குடி வேண்டும். மகள் தந்தைக்காக அம்மா மார்கெரெட்டுக்கு தெரியாமல் குடிக்க உதவுகிறாள். வெறுப்புற்ற மார்கெரெட் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள்.

இப்படி நிறைய குழப்பங்கள்.

அப்பொழுது வீட்டுக்கு வரும் aunt எல்லி (Ellie) அவள் தந்தையை காப்பாற்றிவிடுவதாக் கூறுகிறாள். அவள் கையில் ஒரு குடை, குடையில் கைப்பிடியில் கிளியில் தலை பொறித்த உருவம், மறு கையில் ஒரு சிறிய தடி, பை நிறைய மருந்துகள் (இது தான் அந்த மேரி பாப்பின்ஸ் கதாபாத்திரம்). எல்லி தன் தந்தையை காப்பாற்றி, குடும்பத்தை காப்பாற்றும் ஒரு மேஜிக்கல் ஆன்டி என்று நம்புகிறாள் ஹெலென். ஆனால், யதார்த்தம் வேறானது இல்லையா? எல்லியாலும் அவள் தந்தையை காப்பாற்ற முடிவதில்லை. குழந்தை ஹெலனின் 7 வயதில் இறந்து போகிறார் ட்ராவர்ஸ். இந்த ஏமாற்றத்தை தாங்க முடிவதில்லை அவளால்.

இப்பொழுது தெரிந்திருக்குமே, ஏன் ட்ராவர்ஸுக்கு மேரி பாப்பின்ஸ் அவ்வளவு இஷ்டம்னு. எல்லியை மாடலாக வைத்து அவள் உருவாக்கிய கதாபாத்திரமே மேரி பாப்பின்ஸ். மேரி பாப்பின்ஸ் கதையில் அவள் வானத்தில் இருந்து வரும் தேவதை. அவள் கதாபாத்திரத்தை எல்லியை போல வடித்திருக்கிறாள் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். மேரி பாப்பின்ஸில் வரும் ஜார்ஜ் மேங்க் (George Banks) அவள் தந்தை. தன்னுடன் இவ்வளவு நெருக்கமான கதாபாத்திரங்களை வால்ட் சிதைத்துவிடுமோ என்ற பயமே அவளை தடுக்கிறது.

வால்ட் ட்ராவர்ஸிடம் பேசும் போது ஒன்றை கூறுகிறான். தன் தந்தை ஒரு தினசரி பத்திரிக்கை போடுபவர் என்றும், தினமும் 1000 காப்பிகள் காலையும் மாலையும், யாரையும் சம்பளத்துக்கு வைக்காமல், தன்னையும் தன் சகோதரனையும் வேலை வாங்கியதையும் சொல்கிறார். இடையில் பள்ளிக்கு செல்லவேண்டும். இதையெல்லாம் தினசரி செய்து முடித்து இரவு தூங்க நேரமாகும். அந்த காலகட்டம் வால்ட்டுக்கு ஒரு கொடுமையான காலமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலைமை வேறு. பழைய கதையையே நினைத்து இருக்க முடியாது; கதையை முடிக்க வேண்டும். ஹெலனை உங்களிடமிருந்து விடுவித்து என்னிடம் தாருங்கள், அவளுக்கும் மிஸ்டர்.பேங்க்ஸுக்கும் happy ending கொடுப்பதாக கூறிகிறார். மிஸஸ்.ட்ராவர்ஸ் கடைசியில் ஒத்துக் கொண்டு கையெழுத்து போடுகிறார்.

ஆக, இந்த இடைவெளியே இது நாள் வரை இருவரையும் தங்கள் நிலைப்பாட்டில் நிறுத்துகிறது.

இங்கே தான் அந்த மீசை விஷயம் தெரிகிறது. வால்ட் மீசை வைத்திருப்பவர். அவர் தந்தையும் அப்படியே (இல்லையா?). அதான், அந்த கதாபாத்திரத்துக்கு மீசை வைக்கிறார். ட்ராவர்ஸுக்கோ அவள் தந்தை மீசை இல்லாதவர். கொடுமைக்காரர் இல்லை. அவர் மிகவும் நல்லவர், பாசமானவர். அதனால், அந்த கதாபாத்திரம் (மறுபடியும்) சாகடிக்கப்படுவது பிடிக்கவில்லை.

கடைசியில் மிஸ்டர்.பேங்க்ஸுக்கு படத்தில் மீசை இருக்கா இல்லையா? படம் பாருங்கள்...

படத்தின் இயக்கம் அற்புதம் என்பேன். ஒவ்வொரு கேரக்டர் செலக்ஷனும் அருமை. தந்தையாக நடித்திருக்கும் கோலின் பேரல் (Colin Farrell), தாய் மார்கெரெட்டாக ரூத் வில்சன் (Ruth Wilson), அந்த சிறுமி ஹெலன். கொஞ்ச நேரமே வரும் ஆன்ட் எல்லி.

இது 1902.

1961-க்கு வந்தால், மிஸர்ஸ்.ட்ராவர்ஸாக எம்மா தாம்ஸன் (Emma Thompson) - ஏதோ சில படங்களில் பார்த்ததாக நினைவு. பெரிய்யா அப்பாட்டக்கர்...சாரி. அம்மாடக்கர் போல. வால்ட் டிஸ்னியாக டாம் ஹேங்க்ஸ். இவருக்காக தான் இந்த படத்தை பார்க்கவே நினைத்தேன். ஆனா, எம்மா தாம்சன் அசால்ட்டா ஓவர் டேக் செஞ்சுட்டார். டாம் கேங்க்ஸ், டிஸ்னி கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் துருத்தல் என்றே சொல்வேன். ஆனால், அந்த குறையை பெருமளவு மறைக்கிறார். இதில் ட்ராவர்ஸ் தான் ஹீரோ. அதற்கு பிறகு தான் வால்ட் கதாபாத்திரம்.

படத்தில் முதல் 20 நிமிடங்கள் எம்மாவின் குணதிசயத்தை காட்டுகிறது. அமெரிக்கா வந்த பிறகு எதையும் பட்டும் படாமலும் இருக்கும் ட்ராவர்ஸ், அவரின் தனிமை, பொம்மைகளை வெறுப்பது (பின் அதையே கட்டிப்பிடித்து தூங்குவது) என்று அவள் கேடக்டரை நம்முள் விதைக்க செய்கிறது.

இறக்கும் தருவாயில் தந்தை பழம் வாங்க சொல்கிறார். அதை வாங்கி வருவதற்கு முன் இறக்கிறார். அதனால், பழங்களையே அவள் வெறுக்கிறாள். இதெல்லாம் முதல் 20 நிமிடங்களில். ஒரு கட்டத்தில் தனிமை வாட்டுகிறாது. தான் எடுத்தெரிந்து பேசும் குணமே தன்னிடம் யாரையும் நெருங்கவிடுவதில்லை என்று தெரிந்தும் அப்படியே இருக்கிறாள். ஒரு வகையில், இந்த கேரக்டர், Gone with the Wind ஸ்கார்லட் ஓ'ஹாரா போலவே. அதில் சிறு வயதில் சுட்டித்தனமாக flirting டைப்பாக இருந்தாலும் வாழ்க்கை தரும் வலி அவளை ஒரு சீரியஸ் ஆள் ஆக்குகிறது, இங்கும் அவ்வாறே. ட்ராவர்ஸ் போன்றவர்களின் கதாபாத்திரம் நம்மூரிலும் நிறைய உண்டு. வாழ்க்கை தரும் வலி நிறைய பேரை 'உம்மனாமூஞ்சிகள்' ஆக்குகிறது. குழந்தைகளின் உலகத்தை குழந்தை தன்மையை சிதைக்கிறது.

படத்தில் (நிஜத்தில் அல்லாத) ஒரு கார் ட்ரைவர் கதாபாத்திரம் வருகிறது. முதலில் முகம் கொடுத்து பேசாமல், கடைசியில் அவரிடம் நட்பாக பேசி நண்பராவது வரை மிஸஸ்.ட்ராவர்ஸின் மனமாற்றத்தை காட்டவே அவர் கதாபாத்திரம் போல.

இதில் (உண்மையில்), திரையுலகின் கருப்பு பக்கங்களை அறியாத மிஸர்ஸ்.ட்ராவர்ஸை வால்ட் ஏமாற்றியிருக்கிறார், முக்கியமாக அந்த ('ராஜா சின்ன ரோஜா' டைப்) அனிமேஷன் விஷயத்தில். மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கு அனிமேஷனும், முக்கியமாக வால்ட் மீதி வெறுப்பு. அவரின் அனிமேஷன் படங்களை கண்டாலே அலெர்ஜி. அதனால், கண்டிப்பாக அனிமேஷன் கூடவே கூடாது என்கிறார். வால்ட்டுக்கு அது தான் வாழ்க்கையே. அவர் படங்களை பார்க்க வருகிறவர்கள் அனிமேஷனை விரும்புவார்கள். அதில்லாமல் எப்படி? படத்தின் திரைக்கதை மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் ஒப்புதல் தந்து கையெழுத்து இட்டால் மட்டுமே நடக்கும். ஆனால், அனிமேஷன் என்பது எடிட்டிங் வேலையாச்சே. கையெழுத்து திரைக்கதைக்கு மட்டும் தான். எடிட்டிங்கிற்கு கிடையாது. (அது ராமனுக்குத்தானே; நான் முருகனாயிற்றே).

இந்த ட்ரிக் மிஸர்ஸ்.ட்ராவர்ஸுக்கு தெரியாததால், அனிமேஷன் இருக்காது என்று நம்பி கையெழுத்திடுகிறார். கடைசியில் ப்ரீமியர் ஷோவில் படத்தை பார்த்து கோபத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ். பின் சீட்டில் இருந்து வால்ட் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் தோளை தட்டி ஆறுதல் கூற, "உங்கள் அனிமேஷன் சகிக்கலை, அதான் அழறேன்" என்று சொல்ல, வால்ட் ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாருங்க...ஆசம் ஆசம்.

பிரீமியர் ஷோ முடிந்து வால்ட்டிடம் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ், "அனிமேஷனை எப்பொழுது கட் செய்வீங்க?" ("When do we start cutting it?) என்று அப்பாவியாய் மிஸர்ஸ்.ட்ராவர்ஸ் கேட்க, வால்ட் அதற்கு "Pamela, that ship has sailed" என்கிறார். அத்தோடு உன் சங்காத்தமே வேண்டாம்னு, வேற எந்த கதையையும் டிஸ்னிக்கு கொடுக்கவேயில்லை மிஸர்ஸ்.ட்ராவர்ஸ்.

இந்த படம் பார்த்த பிறகு மேரி பாப்பின்ஸை பார்த்தேன். குழந்தைகளுக்கான கதை. பாடல்களுடன். மறுபடியும் இதை பார்த்தால் பல விஷயங்கள் விளங்கும்.

படம் மொத்தத்தில் - ஆசம் ஆசம்.

Wednesday, December 23, 2015

உத்தம வில்லன் (2015)

நேத்து தான் பார்த்தேன். படம் நல்லாருக்கு.


மனோரஞ்சன் சாகப்போறவன். அதனால் கடைசியா ஒரு காமெடி படம் எடுக்க முடிவு செய்கிறான். பர்சனலா சோகம் என்றாலும், கடைசி படம் காமெடியே இருக்கனும்ங்கிற அந்த contra தான் படம் முழுவதும். நிஜத்தில் சாகப்போனாலும், கதையில் ம்ருத்யுஞ்சன்.

டைட்டில்ல ஆரம்பிச்சு பல இடங்கள்ல அந்த contra பார்க்க முடிஞ்சது. சோகம்-காமெடி-சோகம்-காமெடி என்ற வரிசை படம் முழுவதும். நிஜத்தில் இறப்பதும், ஸ்க்ரீனில் ம்ருத்யுஞ்சனாக நிலைப்பதும். நம்மால ஜெயிக்க முடியாததை கனவில் கொண்டுவருவதில்லையா?

கமல் படங்களில் சொன்னது நடக்கிறது என்ற ஒரு 'வஸ்து' உலவுகிறது. சுனாமி மாதிரி. இந்த படத்துக்கப்புறம் கேபி போயிட்டார். ஆனால், "டேய் என்னடா சொல்ற?"-னு குரல் கம்மி பேசுவதில் இருந்து, மனுஷன் நல்லாத்தான் செய்திருக்கார். சில இடங்களில் அவர் வசனமே நாஸ்டால்ஜிக்கா இருந்தது. உதா, நாகேஷின் சில வசனங்கள் "Long long ago, so long ago, no body could say how long ago.

'இளவேனில் இது வைகாசி மாதம்' பூஜா குமாருக்கு நல்ல ரோல் (கடைசியில 'யா அல்லா'-ங்கிறார்). ஆன்ட்ரியாவுக்கு (நிஜ) கிஸ் வேற (கவனிச்சீங்களா)? ஆனாலும், ஒரு நடிகன் 2-3 சைட் வெச்சிருக்கிறது பேஷன் போல. ஒவ்வொரு 7 வருஷத்துக்கும் நம் உடல் மறுபிறவி எடுக்கிற மாதிரி, பிறவிக்கு ஒன்னா? அதைப்பத்தின எந்த கழிவிறக்கமும் இல்லாத...............கூப்பிடுங்கடா அந்த மாதர் சங்கத்தை.

படத்தின் பெரிய குறை: சோகம்+காமெடி மிக்ஸில் காமெடி மிஸ் ஆவது. சிரிப்பே வரவில்லை. குழந்தைகளுக்கான பேன்டஸி கதையை பெரியவர்களுக்கு கொடுத்தது போலிருந்தது. வசனம் கமல் போல. வழக்கமான போர் அடிக்கும் வசனங்கள் (சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்க சொல்). இன்னொரு குறை, பின்னனி இசை. சதா இம்சிக்கிறது. சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் ஆரம்ப கால ரஹ்மான் படங்கள் போல காதை அடைக்கிறது.

வழக்கம் போல இரணிய வதத்துக்கு பதில் நரசிம்ம வதம், 'ஹரி ஹரி சொரி சொரி'-னு நரசிம்மரே சொறிஞ்சு சாகிறதுனு குசும்புக்கு குறைச்சல் இல்ல.

மறந்திட்டேனே, அன்பே சிவம் படத்துக்கு இயக்கம் சுந்தர்.சி மாதிரி, இந்த படத்துக்கு ரமேஷ் அர்விந்தாம்

இன்னும் 5 வருஷம் கழிச்சு வந்திருந்தா ஓடியிருக்கும், குணா போல.

Monday, August 04, 2014

ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்?


சென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..

.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.

படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.

வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.

"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.

அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.

சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (10 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.

இன்னொருத்தர் வெளியூர் போல. இருக்குற மொத்த டிக்கெட்டையும் வாங்கிவிட்டிருந்தார். சுமார் 20-25 பேர். ஆங்காங்கே சிதறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் 50+

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.

இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.

ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.

இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.

1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.

2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.

இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?

நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?


Monday, February 24, 2014

Amadeus (1984)-ம் மொசார்ட்டும்...

அமேடியஸும் மொசார்ட்டும்: ரெண்டு பேரும் வேற வேற இல்ல. மொசார்ட்டோட மிடில் நேம் தான் அமேடியஸ். முழுப்பெயர் Wolfgang Amadeus Mozart. 1984-ல் வெளிவந்த அமேடியஸ் (Amadeus) படத்தை பற்றி ஏற்கனவே இங்கே இருந்தாலும், இது எனக்காக மற்றும் உங்களுக்காக.


எப்டி? எப்டி?? எப்டி இதை பார்த்தேன்???

10 வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதுசில், திருவல்லிக்கேணியில் இருந்தேன். போர் அடிக்கும் போதெல்லாம் பர்மா பஜார் பக்கம் போய் சிடி/டிவிடிக்களை பார்வையிடுவது வழக்கம். ஹாலிவுட் படங்களை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால், ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் காரணமாக இருக்கும் டிவிடிக்களை பார்வையிட்டு, தேர்ந்தெடுத்து வாங்குவது உண்டு. எப்படி தேர்ந்தெடுப்பேன்? சிம்பிள். அட்டைப்படம், படத்தின் பெயர், பின்னால் இருக்கும் 4 வரி கதை, ஆஸ்கர் அவார்டுகள், நடிக/நடிகைகள் இத்யாதி. குறைந்தபட்சம் இவற்றில் ஏதேனும் ஒன்று என்னை கவர வேண்டும். அவ்வளவு தான் நம்ம சினிமா அறிவு (நாமெல்லாம் கழைகூத்தாடிங்க முன்னாடி உக்காந்து கை தட்டிக்கிட்டு இருந்த கும்பல் தானே!).

இந்த படம் கூட 11 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு 8 அவார்டுகள் வாங்கியது, 'சிறந்த படம்' உட்பட. ஆஸ்கருன்னாலே அந்த படம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கனும்னு நெனப்பு வேற? அதை உடைக்கிறதுக்கு கூட நிறைய பட(ம்) வேண்டியிருந்தது.

டிவிடி வாங்கினாலும், இதுவரை ஏனோ பார்த்ததில்லை. டிவிடி கவர் கூட பிரிக்கப்படவில்லை. காரணம், அட்டைப்படம் என்னவோ மொக்கையா ஏதோ சொல்லுற மாதிரி ஒரு ஃப்பீலிங்கு. போர் அடிக்கும் பயோகிராபி வகையரா (வயாக்ரா இல்ல). காந்திய பத்தின பயோகிராபி கூட கொஞ்சம் போர் தான். ஆனால், இயக்குநரின் கையில் தான் சுவை இருக்கிறது என்பேன். எனக்கு தெரிந்த சில இன்ட்ரெஸ்டிங் பயோகிராபிக்கள்: Catch Me If You Can (ஸ்பீல்பெர்க்), சமீபத்தில் வந்த The Wolf of Wall Street (மார்ட்டின் ஸ்கார்சசி).

அப்புறம், Wiki இந்த படத்தை (ஐரோப்பிய) இசை சம்பந்தப்பட்டதுங்குது. நமக்கு ஐரோப்பிய இசையும், அந்த 'ஆ...ஊ...'-னு கத்துற(!), தலையில விதவிதமா விக் வெச்சிருக்குற மனுஷங்க பாடுற(?) ஓபரா-க்கள்னாலே அலெர்ஜியும் கூட.

பொட்டிக்கடை...

ஏன்டா எல்லாரும் விக்கு மண்டைகளா அலையிறாங்களேனு தேடிப்பாத்தா, அது செம காமெடி. அந்த கால அரசர் ஒருத்தர் மண்டை வழுக்கைங்கிறதுக்காக, தன் இமேஜ் பில்டப்புக்குக்காக விக் வெச்சுக்க ஆரம்பிச்சிருக்கார் (நானெல்லாம் ஜென்டில்மேன். நோ விக்). அதை பாத்த அவரோட அரிஸ்ட்ரோக்ரேட் குடிமக்கள் அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலா ஃபாலோ பன்னியிருக்காங்க. விக்கு வெச்சிருக்கிறவன்லாம் பணக்காரன், அப்பாடக்கருங்கிற மாதிரி (நம்மூருல பீட்ஸாவும் பர்கரும் சாப்டா ஒரு கெத்துங்கிற மாதிரி). இது அப்படியே பரவிடுச்சு.

அது போக, அந்த காலத்துல ஐரோப்பிய தட்ப வெட்ப சூழ்நிலைகளாலும், நிறைய பால்வினை சம்பந்தப்பட்ட நோய்களாலும் நிறைய முடி உதிர்தல் பிரச்சினை இருந்திருக்கு. அதை மறைக்கிறதுக்காகவும், ஒரே மாதிரி தெரியிறதுக்காகவும் இந்த விக்குகள் உபயோகப்பட்டிருக்கு. அதான் ஃபுல்லா விக்கு மண்டைகள். வித விதமா, கலர் கலரா...

ஆல், விக்கு மண்டைஸ்... :)
ஒரு நாள். அந்த ஒரு நாள். இந்த பக்கத்துக்கு போன போது, மறுபடியும் இந்த அமேடியஸ்-ங்குற பேர் கண்ணுலபட்டது. Bruce Almighty-ல வர்ற சைன் போர்டுகள் மாதிரி எங்க போனாலும் சுத்தி சுத்தி என்னவோ சொல்லுது போலனு நெனச்சு Wiki-க்கு போனபோது தான் அது மொசார்ட் கதைன்னே தெரியவந்தது. அங்கே விமரிசனம் இருந்தாலும், சும்மா படத்தோட பாஸிடிவ் சைட் பற்றி மட்டும் படிச்சுட்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

மொசார்ட் யாரு? அவர் அப்பாட்டக்கருங்கிறதனால அவரோட பேரை கேள்விப்பட்டிருப்பீங்க. கேள்விப்படலைன்னா கூட அவரோட இசையை கேட்டிருப்பீங்க, உங்களுக்கு தெரியாமலே. ரொம்ப பரிச்சயமானதுன்னா டைட்டான் வாட்ச் விளம்பரத்தில் ஒரு இசைக்கோர்வை வருமே. அது மொசார்ட்டோடது.

கீழ 6:51-லருந்து டைட்டான் ம்யூஸிக்...



டைட்டான் சும்மா ட்ரைலர். ட்ரைலர் கூட இல்ல. டீஸர். ஆனா மனுஷன் செம செம செம ஜீனியஸ். அவர் ஜீனியஸ்னு நான் சொல்லி என்ன ஆகப்போகுது? நமக்கு நம்மூரு இசையே வெளங்காது. இதுல ஐரோப்பிய இசை என்னாத்த தெரியப்போகுது?

அவர ஜீனியஸ்னு சொல்றது அவரோட எதிரி(யா சொல்லப்படும்) அன்டோனியோ ஸல்லேரி (Antonio Salieri). இவரு யாரு? மொசார்ட் நம்பர் 1-ன்னா, இவரு நம்பர் 2. பிரச்சினையே அங்க தானே!!! இல்லையா?

கதை?

1823-ல் வாழ்வின் அந்திய காலத்தில் இருக்கும் ஸல்லேரியின் தற்கொலை முயற்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அவர் அந்த கால பாண்டி மடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தான் மொசார்ட்டை 1971-ல் கொலை செய்துவிட்டதாக புலம்புவதால் ஒரு பாதிரியார் அவரிடம் confession-க்காக வருகிறார். அவரிடம் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஸல்லேரி.
Antonio Salieri
ஸல்லேரி அர்ப்பனிப்பு உணர்வுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை வாழும் இசையமைப்பாளர். வியன்னாவின் இசை உலகில் தனக்கென மதிப்பும், செல்வச் செழிப்பும் உடையவர். அப்போதைய ரோமானிய பேரரசரின் அரசவை இசையமைப்பாளர். இசைக்காக பிரம்மச்சாரியாக வாழ்பவர். மிகவும் திறமைசாலி. அடிக்கடி ப்ரே பன்னுவார். ஸல்லேரியோட தந்தையின் மரணம் ஒரு வகையில் தனக்கு கடவுள் கொடுத்த பரிசு என்பார். காரணம், அவரோட தந்தைக்கு இவர் இசைத்துறையில் செல்வது விருப்பமில்லை.
மொசார்ட் (படத்தில்)
இந்த நேரத்தில் மொசார்ட் வியன்னாவுக்கு வருகிறார். அப்போதைக்கு ஜெர்மனியில் இருக்கும் வழக்கமான இசை மரபுகளை உடைத்தெரிபவர். அவர் வரவு ஸல்லேரிக்கு பொறாமையை வரவழைக்கிறது. மொசர்ட்டின் திறமையை அவருடனான முதல் சந்திப்பிலேயே அறிந்துகொள்கிறார் ஸல்லேரி. மொசார்ட்டை வரவேறக இவர் அவருக்காக ஒரு இசையை கோர்க்க, அதில் ஈர்க்கப்பட்டு ரோமானிய அரசரே வாசிக்கிறார். அதை ஒரே முறை கேட்ட மொசார்ட் பின் இசை குறிப்புகள் இல்லாமலேயே மீண்டும் அட்சரசுத்தமாக வாசித்து, பின் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து (அசால்டாக) அதை மேலும் மெருகேற்ற, அங்கிருக்கும் அனைவரும் பாராட்டுகிறார்கள்.

மொசார்ட் ஒரு ஒழுக்கமில்லாதவர். நிறைய குடிப்பார். ஒரு மாதிரி ஹை-பிட்ச்சில் சிரிப்பார். அப்படிப்பட்டவருக்கு எப்படி இத்தனை திறமைகள் என்று கடவுளிடம் முறையிடுகிறார் ஸல்லேரி. மொசார்ட் மூலம் கடவுள் தன்னை ஏளனம் செய்வதாக நினைக்கிறார். அவரால் தாங்க முடிவதில்லை. நடுவில் ஆஸ்திரிய (மொசார்ட்) இத்தாலி (ஸல்லேரி) மோதல் வேறு.

அரசரின் உறவினர் ஒருவருக்கு இசை சொல்லித்தர அரசை விருப்பம் தெரிவிக்க அதை தடுக்கிறார் ஸல்லேரி. அதற்கு ஸல்லேரி இன்டர்வியூ வைப்பது மொசார்ட்டுக்கு கவுரவப் பிரச்சினையாகிறது. மொசார்ட்டின் மனைவி Constanze மொசார்ட்டுக்கு தெரியாமல் ஸல்லேரியை பார்க்க வந்து தன் கணவருக்கு உதவுமாறு கேட்கிறாள். ஸல்லேரியோ அப்படி செய்வதற்கு அன்று இரவு அவள் தனியாக தன்னுடன் இருக்க வேண்டும் என்கிறார். அவளும் ஒத்துக் கொண்டு இரவில் அங்கு வர, ஸல்லேரி அவளை வேலைக்காரரின் முன் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

மொசார்ட் ஸல்லேரியிடம் பண உதவி வேண்டி வருகிறார். தான் ஒரு வேலையில் இருப்பதாகவும், அது முடிந்தால் மொத்த ஐரோப்பாவும் ஆச்சரியப்படும் என்கிறார். ஆனால், என்ன என்று சொல்ல மறுத்து விடுகிறார் மொசார்ட். இதை தெரிந்து கொள்ள ஒரு சம்பளமில்லாத வேலைக்காரியை மொசார்ட் வீட்டுக்கு அனுப்புகிறார் ஸல்லேரி. மொசார்டின் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மனைவி ஏற்றுக்கொள்கிறாள், மொசார்ட்டின் விசிறி யாரோ அனுப்பியிருக்கிறார் என்று. வேலைக்காரி மூலம் மொசார்ட் இசை கோர்வையில் ஈடுபட்டிருப்பது, அரசரால் தடை செய்யப்பட்ட The Marriage of Figaro நாடகம் என்று ஸல்லேரி கண்டுபிடித்து அரசரின் காதுகளுக்கு சென்று சேர வைக்கிறார். அரசர் மொசார்ட்டை விசாரிக்க, மொசார்ட் அரசரை சமாதானப்படுத்துகிறார். அந்த ஓபராவின் ப்ராக்டீஸுக்கு வந்து ஆச்சரியமூட்டுகிறார் அரசர்.

பிறகு, ஆஸ்திரிய-துருக்கி யுத்தத்தாலும், ஊதாரித்தனமாக செலவு செய்வதாலும் மொசார்ட்டுக்கு பணக்கஷ்டம். கடன் கேட்கிறார், கிடைப்பதில்லை. இருந்தும் தந்தையிடம் சொல்வதில்லை. நிறைய குடிக்கிறார். தந்தை இறந்துவிட, உடைந்து போகிறார் மொசார்ட்.

இதை தெரிந்து கொண்ட ஸல்லேரி, மொசார்ட்டை வெற்றி கொள்ள ஒரு திட்டம் போடுகிறார். மொசார்ட்டின் தந்தை ஒரு பார்ட்டியில் அனிந்த முகமூடி கொண்ட உடையை அணிந்து தான் யாரென்று சொல்லாமல் மொசார்ட் வீட்டுக்கு வருகிறார். வந்து, தனக்கு மொசார்ட் ஒரு இரங்கல் இசையை (Requiem Mass) எழுதித் தரவேண்டும் என்கிறார். அந்த உடையை பார்த்ததும் ஒருவாரு பயம் கொள்கிறார் மொசார்ட். மனைவியின் இம்சை வேறு. பின் பணத்திற்காக ஒத்துக்கொள்கிறார் மொசார்ட்.

இரங்கல் இசையை எழுத வைத்து அதை வாங்கி பின் மொசார்ட்டை கொலை செய்து, இரங்கல் இசை தான் மொசார்டுக்காக கோர்த்தது என்று சொல்லி, அந்த இரங்கல் இசையை அவருக்கே பாட வேண்டும் என்பது ஸல்லேரியின் திட்டம் (Requiem Mass for Wolfgang Mozart, composed by his devoted friend Antonio Salieri).

இதற்கிடையில் பணத்தேவைக்காக இன்னொரு இசைக்கோர்வையை எழுதிகிறார் மொசார்ட். மனைவியும் அவரை விட்டு பிரிகிறார். அந்த இசை நாடகம் வெற்றி பெருகிறது. ஆனால், மயக்கமடைந்து மேடையிலேயெ சரிந்து விழுகிறார். அவரை ஸல்லேரி மொசார்ட்டின் வீட்டுக்கே கூட்டி வருகிறார்.

அங்கே மொசார்டின் உடல் நிலை படு மோசமான நிலைக்கு செல்கிறது. அந்த இரவே அந்த இரங்கல் இசையை முடிக்க வைக்கிறார் ஸல்லேரி. மொசார்ட் சொல்ல சொல்ல இரவு முழுவதும் அவருக்காக பரவசத்துடன் எழுதுகிறார் ஸல்லேரி. முழுவதும் முடிக்க இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. மொழுது விடிகிறது. ஸல்லேரியை இது வரை தான் தவறாக புரிந்து கொண்டதாகவும், அதற்கு மன்னிக்க வேண்டும் என்கிறார் மொசார்ட். ஸல்லேரிக்கோ குற்ற உணர்வில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஸல்லேரியை ஓய்வு எடுக்க சொல்கிறார் மொசார்ட். ஸல்லேரியோ தான் களைப்படையவில்லை என்றும், தொடரலாம் என்கிறார். ஆனால், ஓய்வு மொசார்ட்டுக்கு தேவை. தான் சற்று நேரம் தூங்குவதாக சொல்கிறார் மொசார்ட். இருவரும் கொஞ்ச நேரம் கண் அயர்கிறார்கள். இதற்கிடையில், ஏதோ ஒன்றின் உந்துதலால் பிரிந்து சென்ற கர்ப்பினி மனைவியும் இரவோடு இரவாக தன் முதல் மகனுடன் ஊர் திரும்புகிறாள். அங்கே தன் கணவனையும் ஸல்லேரியையும் பார்க்கிறாள். ஸல்லேரியை பார்த்து கோபம் கொள்ளும் அவள், அவரை உடனே போக சொல்கிறாள். ஸல்லேரியோ அவர் கணவனுக்கு தான் தேவை என்கிறார். மொசார்ட் கண் விழிக்கிறார். மிகுந்த களைப்புடன் மனைவியை பார்க்கிறார். பின் அவள் ஸல்லேரியை விரட்ட முற்படுகிறாள். பணத்துக்காக மொசார்ட் கஷ்டப்பட்டது போதும் என்கிறாள்.

பேசிக் கொண்டு அவரின் இசைக்குறிப்பிகளை அலமாரியில் பூட்டிவிட்டு, பின் கணவனை திரும்பி பார்க்க அங்கே 35 வயதான மொசார்ட் படுக்கையில் இறந்து கிடக்கிறார்.

மொசார்ட்டின் கடைசி இசைக்கோர்வை உண்மையிலேயே அவர் உயிரைக் கொடுத்து இயற்றியது என்றால் மிகையாகாது.

அவர் உடல் அந்த கால மிடில் க்ளாஸ் வழக்கப்படி இறந்த பல உடல்களோடு புதைக்கப்படுகிறது. புதைக்கப்படுவதை காட்டுவதும் இல்லை. ஏற்கனவே 3-4 உடல்கள் குழிக்குள் இருக்க, இவரோட உடலையும் அந்த குழிக்குள் (literal-ஆ) 'போட', அதன் மீது துர்நாற்றம் அடிக்காமல் இருக்க பவுடர் தெளிக்கப்படுகிறது. குழி மூடப்பட்டுவது இல்லை. ஏனென்றால், இன்னும் சில இறந்த உடல்களுக்கு வெயிட்டிங்.

கடைசியில் ஸல்லேரி அந்த பாதிரியிடம் விடைபெற்று செல்லும் போது, பின்னனியில் மொசார்ட்டின் அந்த ஹை-பிட்ச் சிரிப்பொலி ஒலிப்பதோடு படம் முடிவடைகிறது.

ஏன் இந்த படம் ஸ்பெஷல்...?

காரணம். சொல்ல வந்ததை அசால்ட்டான திரைக்கதை மூலம் சொன்னது. மொசார்ட் ஜீனியஸ்னு யார் சொன்னா வெயிட்டா இருக்கும்? மொசார்ட்டேவா? அவர் இசையா? அவரோட குடும்பத்தினர்/தலைமுறைகளா? அவரோட நண்பர்களா? ம்ஹூம். முக்கியமா அவரோட எதிரி வாயால கேட்கும் போது தான்.

முதல் சீன். வயதான ஸல்லேரியோட சத்தம் கேட்டு அவரோட வேலையாட்கள் அவரோட அறைக்கதவை தட்டுகின்றனர். 'கதவை திறங்க. உங்களுக்கு பிடிச்ச இனிப்பு கொண்டுவந்திருக்கேன். யம்மி'-னு குழந்தைய கூப்பிடுற மாதிரி கூப்பிடுறாங்க. கதவு திறக்கப்படாமல் இருக்க, உள்ளிருந்து தொண்டை அறுபட்டு மூச்சு முட்டும் சத்தம் கேட்க, கதவை உடைத்து உள்ளே பார்த்தால், ஸல்லேர் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்தம் சூழ விழுந்து கிடக்கிறார்.

பின் அவர் மொசார்ட்டை பற்றி அந்த பாதிரிடம் ஆரம்பிக்கும் போது, ஒரு இசையை இசைத்து காட்டுவார். பாதிரிக்கு அது என்ன இசை என்று தெரியவில்லை. இன்னொன்று? அதுவும் தெரியவில்லை. பின், மூன்றாவது. அது தெரிகிறது. கூடவே பாதிரி பாடுகிறார். முதல் இரண்டும் ஸல்லேரியோடது. மூன்றாவது மொசார்டோடது. சட்டென்று நம் சட்டையை பிடித்து இழுக்கிறது திரைக்கதை.

முக்கியமாக, மிக மிக முக்கியமாக, ஒவ்வொரு இசையை பற்றியும் அதன் பெருமைகளை விவரிக்கும் போதும் ஸல்லேரியின் முகத்தில் இருக்கும் பரவசமும், எக்ஸ்பிரஷனும், அதை விவரிக்கும் பாங்கும் அந்த (நமக்கு அன்னியப்பட்ட) இசையை நமக்கே ஊட்டி விடுவது போல் இருக்கிறது. ஸல்லேரின் பரவசத்தில் நாமும் கலக்கிறோம் (கலக்கிறோம் என்ற வார்த்தை தான் இங்கே சரியாக இருக்கும்). கூடவே அவர் சொல்லும் இசை பின்னனியில் ஒலிப்பது நமக்கு புரிய வைக்கிறது. இது பரவசம் இல்லாமல் வேறென்ன? இந்த படத்துக்காக ஸல்லேரியாக நடித்திருக்கும் முர்றே ஆபிரகாம் (F. Murray Abraham)-க்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. கிடைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். மொசார்ட்டாக நடித்த டாம் ஹல்ஸ் (Tom Hulce)-க்கு கூட கிடைக்கவில்லை. அது தான் அந்த கேரக்டரின் பலம்.

படத்தில் அற்புதமான இடம், மொசார்ட்டோட மனைவி தன் கணவனின் இசை குறிப்புகளை ஸல்லேரியிடம் காண்பித்து, அவையாவும் ஒரிஜினல், மொசார்ட் கைப்பட எழுதியது என்கிறாள். அப்ப நகல்? மொசார்ட் நகல் ஏதும் எடுப்பதில்லை என்றும், இது ஒரே ஒரு காபி தான் என்கிறாள். ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்க, பின்னனியில் அந்த பக்கத்தில் உள்ள அதன் இசை ஒலிக்கிறது. ஒவ்வொன்றும் எந்த அடித்தல் திருத்தல் இல்லாமல், தோன்ற தோன்ற எழுதப்பட்டது. அந்த இசையை உணர்ந்து அனுபவித்து கண்கள் கலங்கி அழுகிறார். அந்த குறிப்புகள் அவர் கைகளில் இருந்து நழுவி விழுகிறது. அசந்து போகிறார். எப்பேற்பட்ட இசை!!! கோப்புகள் கீழே விழுந்ததை பார்த்த அவர் மனைவி கேட்பார், "நல்ல இல்லையா?". ஸல்லேரி திரும்பி பார்த்து, "It is miraculous" என்கிறார்.

Salieri: [Mozart’s sheet music] showed no corrections of any kind. Not one. He had simply written down music already finished in his head. Page after page of it as if he were just taking dictation. And music, finished as no music is ever finished. Displace one note and there would be diminishment. Displace one phrase and the structure would fall

படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இரண்டு. முதலாவது ஸல்லேர்ரியாக நடித்திருக்கும் முர்றே. இரண்டாவது, இந்த படத்தை புரிந்து கொள்ள உங்களுக்கு இசை ஞானமோ இல்லை ஐரோப்பிய இசையை பற்றின இன்ட்ரோவோ கூட தேவையில்லை என்பதே.

அதற்கு உதாரணம், ஸல்லேரி மொசார்ட்டின் இசைக்குறிப்பை பாதிரிக்கு விளக்கும் போது ஒரு நோட்ஸை (டெக்னிகல் வார்த்தைகள் தெரியவில்லை) சொல்லி, அதை முதலில் சும்மா ஆரம்பிக்கும். பின் அதே நோட்ஸை இன்னொரு வாத்தியத்தின் மூலம் கொஞ்சம் உயரும் என்றெல்லாம் சொல்லும் போது, (இசை பற்றி தெரியாத) ஆடியன்ஸான நமக்கு புரிய வைக்க பின்னனியில் அவர் என்ன சொல்கிறாரோ அந்த இசையை தவழ விடுவது...அற்புதம். ஸல்லேரி என்ன சொல்ல வருகிறார் என்பதை பார்ப்பவர்களுக்கு அப்படியே சேர்க்கிறார் இயக்குநர். இது தான் படத்தின் வெற்றியே.


Salieri: On the page it looked nothing. The beginning simple, almost comic. Just a pulse – bassoons and basset horns – like a rusty squeezebox. Then suddenly – high above it – an oboe, a single note, hanging there unwavering, till a clarinet took over and sweetened it into a phrase of such delight! This was no composition by a performing monkey! This was a music I’d never heard. Filled with such longing, such unfulfillable longing, it had me trembling. It seemed to me that I was hearing the very voice of God.

படத்தின் நீளம் 2 1/2 மணி நேரம். Director's cut 3 மணி நேரம். எங்கும் தொய்வே இல்லை. போரடிக்கவில்லை. ஒன்று வசனங்கள்/திருப்பங்கள், இல்லை இசை. கொஞ்சம் அரசியல். படம் முழுக்க இவையே வியாபித்திருக்கின்றன.

மொசார்ட் பற்றி...

மொசார்ட் aka Wolfgang Amadeus Mozart. இசையுலகின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். செய்த சாதனைகள் அப்படி. இன்றும் அவருடைய இசை எல்லைகள் தாண்டி ரசிக்கப்படுகிறது. அவரின் இசை பிரமிக்கத்தக்கவை. (ஐரோப்பிய இசையை பற்றி ஒரு எழவும் தெரியவில்லை என்றாலும், படத்தில் ஒலியின் எடிட்டிங் நமக்கே புரிய வைக்க முற்படுகிறது). தன் 5 வயது முதலே இசையமைக்க ஆரம்பித்தவர். பியானோவில் கைகள் அற்புதமாக இசைக்கின்றன (சும்மா வெளாடுதுங்கிறோமே, அப்படி).இசைக்குறிப்புகள் அவரிடமிருந்து அருவி போல பிரவாகமெடுத்து இறங்கும். மிகச்சிறந்த நியாபக சக்தி உடையவர். பெரும்பாலும் இசையை நோட்ஸ் எடுக்காமல், மூளைக்குள்ளேயே ஸ்டோர் செய்துக் கொள்பவர். நோட்ஸ் எடுக்கும் போதும் அடித்தல் திருத்தல் கூட இல்லாமல், ஏதோ பார்த்து எழுதுவது போல பிழையே இல்லாமல் எழுதுபவர். அவரின் ஒவ்வொரு இசைக்கோர்வையும் அதி அற்புதமானது. அந்த இசை உலகில் இருப்பவர்களுக்கே அதன் அருமை புரியும். ஸல்லேரி என்ன தான் பொறாமை கொண்டாலும், அவர் மொசார்ட்டின் இசையை எங்கும் விட்டுக்கொடுப்பதில்லை. மொசார்ட்டின் இசையில் லயிக்கிறார். ஒவ்வொரு நாடகத்தின் போதும் ஓபராவின் போதும் தவறாமல் கலந்து கொள்கிறார் ஸல்லேரி. மனம் திறந்து பாராட்டிக் கொள்கிறார்.

பொட்டிக்கடை...

கருந்தேள் சொல்வது...

தனது பதினைந்தாவது வயதில், ரோம் நகரத்தின் ஸிஸ்டைன் சேப்பலில் (மைக்கலாஞ்சலோ, நான்கு ஆண்டுகள் தொங்கிக்கொண்டே அதன் விதானத்தில் வரைந்த ஓவியங்கள், இன்றும் அப்படியே உள்ளன), வாடிகனின் இசையமைப்பாளராக இருந்த க்ரெகோரியோ அல்லெக்ரியின் ஒரு ஸிம்ஃபனியை ஒருமுறை கேட்க நேர்ந்த மோஸார்ட், அதனை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக எழுதி, அதில் இருந்த சிறிய இசைப் பிழைகளையும் சரி செய்து கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய ஸிம்ஃபனி. ஒரு சிறுவன் ஒரே முறைதான் அதனைக் கேட்க நேர்கிறது. கேட்ட உடனேயே அதனை கடகடவென்று அவன் எழுதிக்கொடுத்தால், எப்படி இருக்கும்? வாடிகன் நிர்வாகிகள், அரண்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

மொசார்ட்டின் வொர்க் ஸ்டைலே அற்புதமானது. உக்காந்து செதுக்குவது அவர் வேலையில்லை. மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது. மனது டிக்டேட் செய்கிறது, கை எழுதுகிறது. அவ்வளவு தான். எழுதியதை அழிக்க தேவையில்லை, மாற்ற வேண்டியதில்லை. இசை என்பது ஒரு பிரவாகமாக ஊற்றெடுக்கிறது. காலேஜ் படிக்கிற பையன் 2-ம் வாய்ப்பாடு சொல்ற மாதிரி, அதுவா வருது. ஸல்லேரியே கூட அசந்து போகிறார்.

இதை, என் பாஷையில் எனக்கு புரிந்தவரை இப்படி சொல்லலாம். உங்களிடம் ஒரு கனினி ஆணைத்தொடர்கள் (Program) 'C'-ல் எழுத சொல்கிறார்கள். முதலில் என்ன வேண்டுமோ அதை புரிந்து கொண்டு ஒரு அல்காரிதம் வரைந்து, பின் அதை code-ஆ மாற்றுவீர்கள். Code அடித்து அதன் compile செய்யும் போது நீங்கள் செய்த தவறுகள், லாஜிக் ஓட்டைகளை அடைப்பீர்கள். பின் தான் ஒரு ஆணைத் தொடர் முடிவடையும். ஆனால், மொசார்ட் சொல்வது/எழுதுவது எல்லாம் அந்த கடைசி ஸ்டேஜ் code மட்டுமே. மற்றதெல்லாம் அவர் மூளையிலேயே முடிந்து விடுகிறது, அதுவும் அவ்வளவு வேகமாக. அவுட்புட்டே ப்ரோக்ராமா வெளியவறது போல...

மொசார்ட் அவர் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், "You know that I immerse myself in music, so to speak—that I think about it all day long—that I like experimenting—studying—reflecting."

மொசார்ட்டின் மரணம் பற்றி...

பொதுவாக மொசார்ட்டின் மரணம் சந்தேகத்திற்கிடமானது. இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனாலும், ஒரு வதந்தி. ஸல்லேரி விஷம் வைத்து மொசார்ட்டை கொன்று விட்டதாக. ஸல்லேரியும் கொல்ல திட்டம் போடுவதாக அவரே இந்த படத்தில் சொல்கிறார். ஆனால், சொல்லும் போதே 'திட்டம் தீட்டுவதும், அதை இந்த கைகளால் நிறைவேற்றுவதும் வேறு வேறு' என்கிறார். அதாவது, கொல்ல நினைப்பது சுலபம். ஆனால், அதை நிறைவேற்ற 'தில்' வேண்டும் (It's very different when you have to do it, with your own hands). அதே சமயம், மொசார்ட் அவர் தந்தைக்கு எழுதிய சில கடிதத்தில் எப்படியெல்லாம் இத்தாலிகாரர்கள் இந்த ஆஸ்திரியகாரனின் வளர்ச்சிக்கு குறுக்கே வருகிறார்கள் என்றே குறிப்பிடுகிறார். ஸல்லேரி தனக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டுகிறார் என்கிறார் வேறொரு கடிதத்தில்.

ஆனால், பல சம்பவங்கள் மொசார்ட்டுக்கும் ஸல்லேரிக்கும் இடையிலான உறவு நட்புறவு கொண்டது என்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. இருவரும் சேர்ந்து செய்த வேலைகள் (revival of Figaro), ஒவ்வொரு முறையும் மொசார்ட்டின் இசையை கேட்கும் போதும் அதை பாராட்ட தவறாமை போன்றவை.

ஸல்லேரி இந்த படத்தில் தான் மொசார்ட்டை கொன்றதாக கூறினாலும், அவர் சொன்னது மொசார்ட்டின் தந்தை போன்று முகமூடி அனிந்து மொசார்ட்டுக்கு வேலை கொடுத்ததை பற்றியது. பணம் அதிகமாக கொடுத்தாலும், அந்த வேலைப்பளுவே மொசார்ட்டை கொன்றுவிட்டதாக உணர்கிறார் (என்றே நான் நினைக்கிறேன்). உடல் நிலை படுமோசமடைந்த நிலையிலும், 'அந்த முகமூடி தான் வந்தான்' என்றும், அவன் 'நாளைக்குள் இரங்கல் இசையை முடித்து கொடுத்தால் 100 காசுகள் கொடுப்பதாக' சொன்னதாகவும் ஸல்லேரி பொய் சொல்கிறார். அதனால் தான் அந்த நிலையிலும் மொசார்ட் இசைக்கோர்வைகளை எழுத முற்படுகிறார். ஸல்லேரி ஏன் அப்படி பொய் சொன்னார் என்று தெரியவில்லை. ஒருவேளை, அந்த நிலையில் மொசார்ட் எழுதினால் இன்னும் கச்சிதமாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ. (எனக்குத்) தெரியவில்லை.

அந்த காட்சியில் மொசார்ட் ஸல்லேரியை தன்க்கு உதவ முடியுமா என கேட்கிறார், மொசார்ட் நோட்ஸ் டிக்டேட் செய்ய செய்ய ஸல்லேரி எழுத எழுத, ஸல்லேரிக்கே அது புது அனுபவமாக இருக்கிறது. மொசார்ட் டிக்டேட் செய்யும் வேகத்துக்கு இவரால் ஈடு கொடுக்க முடியாமல், பின் லேட்டாக புரிந்து கொண்டு நோட்ஸை வேக வேகமாக எழுதும் அந்த காட்சி...செம. ஸல்லேரிக்கு மொசார்ட்டின் திறமையில் மற்றுமொரு தடவை லயிக்கிறார்.

இதில் மொசார்ட் என்ன சொல்கிறார், எப்படி ஸல்லேரி புரிந்து கொள்கிறார் என்றெல்லாம் நமக்கு தெரியாது. எல்லாம் இசை சம்பந்தப்பட்ட டெக்னிகல் வார்த்தைகள். ஆனால், இருவருக்குமான உறையாடலே நமக்கு அங்கு நிகழ்வதை புரியவைத்து விடுகிறது. இசை ஒரு பொழி போல, இயக்கமும் ஒரு மொழி தான்.

மொசார்ட் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்பதற்கான வேறு காரணங்கள் நிறைய உண்டு. சிறு வயது முதலே உடல் நிலை அடிக்கடி மோசமாவது உண்டு. அம்மை, நிமோனியா, தைபாய்டு, முடக்கு வாதம், டான்சில், சளி போன்றவை அடிக்கடி தாக்கும். அதே சமயம் அந்த இரங்கல் இசையை பற்றி மனைவியிடம் சொல்லும் போது அது அவர் தனக்கே இயற்றுவதாகவும், தான் விஷம் வைக்கப்பட்டதாக நம்புவதாகவும் கூறியிருக்கிறார். தான் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதே அவர் உடல் நிலையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. இல்லை, இந்த நினைப்பை விதைப்பது தான் ஸல்லேரியின் நோக்கமா?

பின்னாளில் உடலில் விஷம் இருப்பதற்கான் அறிகுறிகள் இல்லை என்று கூறினாலும், ஸல்லேரியும் இதை போன்ற குற்றச்சாட்டுகளால் மிகவும் சோர்வுற்றார். பிற்பாடு மொசார்ட் மரணம் பற்றி பலவித யூகங்களும் அறிவியல்பூர்வமான சோதனைகள் முடிவுகளும் வெளியிடப்பட்டன. இருந்தாலும், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றும் கூடவே பயணம் செய்தது.

நிறைவாக...

மிக அற்புதமான படம் இது. மொசர்ட்டை பற்றின படமானாலும், படத்தில் அனைவரையும் கவர்வது மொசார்ட் இல்லை. அவரோட இசையும், ஸல்லேரியும். Must watch. பாக்காதவங்க பாருங்க. பாத்தவங்க மறக்காம நான் சொன்னதெல்லாம் சரியான்னு சொல்லுங்க.

அம்புட்டுதேன்...

Tuesday, January 28, 2014

How to Steal a Million (1966)


இன்ட்ரோ:

ஆங்கிலப் படங்களை பார்க்கும் போது, எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று தான் கேட்கத்தோணும். இந்த படமும், சிம்பிளான ஒரு வரிக் கதை. அந்த கதைக்கேற்ற தலைப்பு, அந்த தலைப்புக்கேற்ற திரைக்கதை. அதற்கேற்ற நடிகர்கள். அதனால் தான் காலங்கள் கடந்தும் அந்த படைப்புகள் போற்றப்படுகின்றன.

தலைப்பே கதையை சொல்லிடுதே. ஒரு மில்லியன் டாலர் பணத்தை எப்படி திருடுவது என்பது கதை. ஆனால், அந்த பணம், தேவைக்காக திருடப்பட்டுவது இல்லை. சூழ்நிலை. கனக்கச்சிதமான சூழ்நிலை.

1966-ல் வந்த காமெடி படம். 'தானைத்தலைவி' ஆட்ரே ஹெப்பர்ன் (Audrey Hepburn) நடித்தது. ஆட்ரேவோட இன்னொரு படம் 'ரோமன் ஹாலிடே' (1953). இயக்கம் இதே டைரக்டர்.



அப்புறம் கூட ஹீரோவா பீட்டர் (Peter O'Toole), Hugh Griffith, Eli Wallach நடிச்சிருக்காங்க. பீட்டர் கூட பெரிய தல தான். Lawrance of Arabia ஹீரோ.

கதை:

நிக்கோல் போனே(ட்) (ஆட்ரே)-வின் தந்தை சார்லஸ் போனே(ட்) ஒரு மேட்டுக்குடி (Aristocrat), கலை பொக்கிஷங்களை சேகர்ரிப்பவர். தன் கலை பொக்கிஷங்களை அடிக்கடி ஏலம் விடுகிறார். (அந்த காலத்திலேயே) மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போகிறது, அவரின் சேகரிப்புகள். ஆனால், அவை அனைத்தும் ஒரிஜினல் இல்லை. ஒரிஜினலை காப்பி அடித்து தன் வீட்டில் மாட்டிவைத்து, அதற்கு மார்க்கெட் ஏற்றி, ஏலம் விடுகிறார். (ஒரு பெரிய திருப்பம் தரக்கூடிய விஷயத்தை, முதல் சீனிலேயே உடைத்தாகி விட்டது). அவர் பெண் இதைப்போன்று செய்வது தவறேன்று எச்சரிக்கிறார். அவருக்கு விருப்பமும் இல்லை. ஆனால், சார்லஸோ அதை பணத்துக்காக மட்டும் அல்லாது, தன் (காப்பியடிக்கும்) திறமைக்காக தொடர்கிறார். தன் வேலை மீதே அவருக்கு ஒரு பெருமிதம். உண்மையை போன்றே கச்சிதமாக செய்வதால், யாரும் சோதனை கூட செய்வது இல்லை.



அடுத்து, வீட்டில் ஒரு பளிங்கு சிலை இருக்கிறது. அது அவரோட தாத்தா அவரோட மனைவியை மாடலாக்கி செதுக்கியது. வைத்த பெயர் Cellini's Venus. Cellini என்பவர் இத்தாலியை சேர்ந்த சிலை வடிப்பவர். அவர் வடித்த சிலை என்பதாக ஒரு பொய்யான சிலையை செய்து, அதை அவர் தாத்தா வீட்டில் மாட்டி வைக்க, அது அந்த காலத்திலேயே ப்ரான்ஸ் முழுக்க பிரபலமானது. அதை ப்ரான்ஸ் அரசாங்கம் வரப்போகும் கண்காட்சிக்காக அதை காட்சிப்படுத்த வாங்கிக் கொண்டு போகிறார்கள், பயங்கர பாதுகாப்போடு. அதுவும் அந்த ம்யூஸியம் ஆள் காரில் உக்காந்து பத்திரமா இருக்கானு திரும்பி திரும்பி பார்த்துபோவார் :)

அதே இரவு அவள் வீட்டில் திருட வரும் திருடனை நிக்கோல் பிடிக்கிறார். கையில் தவறுதலாக சுட்டும் விடுகிறார். அவரே மருந்தும் வைத்து, அந்த திருடனின் வீடு வரை சென்று விட்டு விட்டு வருகிறார். அந்த திருட'ர்' தான் நம்ம ஹீரோ சைமன் (Peter O'Toole). பின் (ஹாலிவுட் வழக்கப்படியும்!!!) காதல் வருகிறது.

வந்தவன் திருட வரவில்லை. மாறாக, வீட்டில் இருக்கும் இன்னொரு ஓவியத்தில் இருந்து சில மாதிரிகளை சுரண்டி எடுத்து வருகிறார், சோதனை செய்ய. நிக்கோலுக்கு இது தெரிவதில்லை.

இதற்கிடையில், இன்னொரு aristocrat டேவிஸ் லீலான்ட் (Eli Wallach) நிக்கோலுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்கிறார், மேலே சொன்ன அந்த ஓவியத்தை மற்றும் சிலையை எப்பாடுபட்டாவது வாங்குவதற்கு நிக்கோல் ரெக்கமென்ட் செய்யவேண்டும் என்பதற்காக. இவர் ஒரு பயங்கர கலா ரசிகர். கலக்கியிருக்கிறார். காதல் கொள்கிறார், அந்த ஓவியத்தின் மீதும், நம்ம ஓவியத்தின் மீதும்.



அடுத்த நாள் ம்யூஸியம் ஆள் ஒருத்தர் வந்து அந்த சிலையை இன்ஸ்யூர் செய்ய வேண்டும் என்றும், சார்லஸ் செலவழிக்கவேண்டியதில்லை என்றும் கூறி சார்லஸிடம் கையெழுத்து வாங்குகிறார். அவரும் அவசரத்தில் கையெழுத்து போட்டுவிட, அப்புறம் தான் தெரிகிறது, 2 நாள் கழித்து அந்த சிலையை (பார்மாலிட்டிக்காக) சோதனை செய்ய ஆள் வருகிறார் என்று. சார்லஸுக்கு வேர்க்கிறது.

அவர் மாதிரிக்காக வைப்பதை சோதனை செய்யமாட்டார்கள் என்ற குருட்டு தைரியத்தில் சிலையை அவ்வப்போது கொடுக்கிறார். இப்பொழுது, இதை சோதனை செய்தால், இதுவரை அவர் ஏலம் விட்ட அனைத்து கலை பொக்கிஷங்களையும்(!) சோதனை செய்ய வேண்டிவரும். மாட்டிக் கொள்வார்.

நிக்கோல் சார்லஸுக்கு தெரியாமல், சைமனை அனுகி அந்த சிலையை திருட வேண்டும் என்கிறார். எதற்காக சிலையின் ஓனரே அதை திருடவேண்டும் என சைமன் கேட்க, நிக்கோல் அதை சொல்ல மறுக்கிறாள்.

இப்ப தெரிஞ்சிருக்குமே படத் தலைப்பின் ரகசியம்.

படம் பாதி முடிந்தது. மீதி பாதி அந்த சிலையை திருடுவதும், அதை டேவிஸுக்கே விற்பதும், சார்லஸ் திருந்தினாரா என்பதும் செம இன்ட்ரெஸ்டிங் திரைக்கதை. அவற்றை வெண்/மடிக்கணினி திரையில் காண்க...

பிறகு...

படம் செம ஹிட்டான படம். ஆட்ரே கலக்கியிருக்கும் இன்னொரு படம். அவரோட பெஸ்ட் லிஸ்ட்டில் கண்டிப்பாக வரும்.

படத்தில் மேட்டுக்குடி மக்கள் எப்படியெல்லாம் அல்பங்களாக இருக்கிறார்கள், தங்கள் pleasure-க்காக எந்த அளவுக்கெல்லாம் கீழிறங்குவார்கள் என்பதை காமெடியாக கலாய்த்திருக்கிறார் இயக்குநர் வில்லியம் வைலர் (William Wyler). இவர் இயக்கிய மற்ற படங்கள் Ben-Hur, Roman Holiday, The Best Years of Our Lives இன்னும் பலப்பல.

அந்த சிலை திருடப்பட்டதும் டேவிஸ் அந்த சிலையை போலீஸுக்கு முன்பாகவே கண்டுபிடித்து வாங்கிவிடவேண்டும் என்று அலைவார். கடைசியாக வாங்கியும் விடுவார். விலை? 0.00$

படம் முழுக்க ப்ரான்ஸில் நடக்கிறது. ஆனால், அனைவரும் இங்கிலீஸ் மட்டுமே பேசுகிறார்கள்.

டேவிஸாக நடித்திருப்பவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தேடி பார்த்தால், அவர் தான்  The Good, the Bad and the Ugly (1966) -ல் Tuco-வாக கலக்கியிருப்பவர். இதில் கூட ஒரு நல்ல அற்புதமான நடிப்பு. அதுவும் சிரிச்சுக்கிட்டே வழியும் காட்சி.



கடைசியாக...

இந்த சிலை 'திருடும்' சீன்களை இன்னொரு ஹிந்தி படங்களிலும் 'திருடி'யிருக்கிறார்கள். படம் பெயர் Loafer. செம மேட்சிங்கா இல்ல...?

பிற்சேர்க்கை @ 8-Oct-15

இப்ப ரஜினி-யின் லிங்கா-வில் அந்த ம்யூஸியத்தில் திருடும் காட்சியை திருடியிருக்கிறார்கள். Ethically wrong, but தலைவர் படம்ங்கிறதனால ரசிச்சேன்...

Monday, November 19, 2012

Gangs of Wasseypur - I & II (ஹிந்தி, 2012)


தற்போதைய ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டத்தில் உள்ள சிறு நகரம் தான் வசேப்பூர். இந்த படத்தில் உள்ள அட்டகாசமான ஆபாசப் பாடல்(!) ஒன்றை அறிமுகம் செய்து வைத்தான் ஒரு வட இந்திய நண்பன் ஒருவன். அது படத்தின் பெயரை அறிமுகம் செய்தது. பின் அந்த பாடலின் விஷுவல் பார்க்கும் போது, அதில் ரீமா சென் நடித்திருப்பது தெரிந்தது. வாசேப்பூர் பற்றி படிக்கும் போது, அது தன்பாத் மாவட்டம் என்பது தெரிந்தது. எங்களுக்கு தன்பாத் என்ற வார்த்தை பரிச்சயமானது. காரணம், சென்னையில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் என்ற இரயில் எங்கள் ஊரில் நிற்கும். சில முறை அதில் பயணம் செய்திருக்கிறோம். அப்புறம், இந்த படத்துக்கு பின்னனி இசை (மட்டும்) ஜி.வி.பிரகாஷ். இவை தான் இந்த படத்தை பார்க்க தூண்டுகோலாக அமைந்தவை :)

மற்றொரு காரணம், இந்த படத்தில் போஸ்டர் 'ஆரண்ய காண்டம்' படத்தின் போஸ்டர் போல ஒரு வித கார்டூன்டாக இருக்கும். 'ஆரண்ய காண்டம்' பார்க்க முடியாத ஏக்கத்தில், இதை பாக்க தூண்டுதலாக அமைந்தது.

படத்துக்கு வருவோம். இது அனுராக் காஷ்யப் இயக்கிய படம். இவர் இயக்கிய மற்ற படங்களை பார்த்ததில்லை. இது தான் அவரோட சொல்லிக்கொள்ளும் ஹிட்.

படம் 3 தலைமுறையை சொல்லிம் நீளமான படம். மொத்தம் ஐந்தரை மணி நேரம். அதனாலேயே, படத்தை 2 பாகங்களாக வெளியிட்டிருக்கார். ஏன் இவ்வளவு நீளம்? காரணம், 3 தலைமுறைகள், ஏகப்பட்ட கொலைகள், பழிவாங்கல்கள், அரசியல் சூழ்ச்சிகள், மற்றும் முக்கியமாக இந்த கேங் நிஜத்தில் இருந்தவை. ஆம், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்தவை.

இதை போல பரிதாலா ரவி என்ற நபரை பற்றின கதை தான் RGV இயக்கிய 'ரத்த சரித்திரம்' என்னும் ப்ளாப். படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், மொக்கை என்று படித்திருக்கிறேன்.

பொதுவாக உண்மையில் நடந்த கேங்க்ஸ்டர் கதைகளை சொல்லும் போது, வழக்கமான படங்களை போல் இருக்காது. Bonnie and Clyde, Butch Cassidy and the Sundance Kid, Catch Me If You Can, Goodfellas போன்ற படங்கள் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள். இந்த படங்களில் பொதுவாக சில குறைகள் இருக்கும். படம் பெரிதாக ஈர்க்காது. ஒரு மாதிரி dry-யாக இருக்கும். காரணம், இயக்குநர் என்று நினைக்கிறேன். Catch Me If You Can படத்தின் இயக்குநர் ஸ்பீல்பெர்க். அதனால், பார்க்கும் போதே இயக்குநரின் டச் பல இடங்களில் தெரிந்தது (அல்லது, அப்படி தெரிந்தது போல் இருந்தது). மேல் சொன்ன படங்கள் முதல் தடவை பார்க்கும் போது எனக்கும் இப்படித்தான் இருந்தது. ஆனால், மறுபடியும் பார்க்கும் போது ஏனோ நன்றாகவே இருந்தது. Catch Me If You Can எப்பொழுது பார்த்தாலும் எனக்கு நன்றாகவே இருக்கும்.

Bonnie and Clyde படத்தின் ஹீரோயின் (இந்த படத்தில் மட்டும்) கொள்ளை அழகு. நடிப்பும் நன்றாகவே இருந்தது. இந்த படம் ஒரு மாதிரி, குறைந்த கேரக்டர்கள், ஆங்காங்கே துப்பாக்கி சண்டைகள், முக்கியமாக ஹீரோயின் Bonnie, ஹீரோ Clyde-உடன் சேர்வது கொள்ளையில் உள்ள pleasure-க்காக. இதுவும் நன்றாக இருந்தது. இந்த படம் ஹாலிவுட்டின் பல சென்ட்டிமென்ட்களை உடைத்த படம். மற்றும், இந்த படம் "one of the bloodiest death scenes in cinematic history".

ரொம்ப வெளியில போயிட்டேனோ?

இந்த படத்தில் அப்படிப்பட்ட குறைகள் உண்டு. ஆனால், அதை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார் இயக்குநர். சுஜாதா(?) சொன்னது போல், படத்தில் குறைகள் இருக்கலாம். ஆனால், பார்வையாளன் அந்த குறையை பற்றி பேச நேரம் கொடுக்காமல், அவனை சீட்டில் கட்டி போடும் வித்தை தெரிந்திருக்க வேண்டும் என்பார். அதைத்தான் செய்துள்ளார் இயக்குநர். அந்த வித்தைகள் விஷுவல், இசை, பாடல், சண்டை என்று விதவிதமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில், 2 பாகமும் சேர்த்து, மொத்தம் 22 பாடல்கள். பெரும்பாலும் Bit songs. சில பாடல்கள் அட்டகாசம். முக்கியமாக Kaala rey. பார்த்தால், பாடல்களுக்கான இசையமைப்பாளர் சினேகா கன்வால்கர் என்ற பெண் (போன வார விகடன் படித்து தான் தெரிந்தது).

சினேகாவுக்கு இணையாக கலக்கியிருப்பவர் நம்ம ஊரு ஜி.வி.பிரகாஷ். பொதுவாகவே இவரோட பின்னனி இசை எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் பின்னியிருக்கார். குறைவான இசை, தேவையான இடத்தில். குறிப்பிடவேண்டிய இடம், முதல் பாகத்தில் முடிவு. இயக்கமும் இசையும் சேர்ந்து அதகளம் செய்திருக்கும் இடம்.

முதல் பாகம்:


படத்தின் கதைசொல்லி முதல் தலைமுறையை சேர்ந்த நசீர். 1940-களில் ஆரம்பிக்கிறது கதை. இந்தியா சுதந்திரம் அடைந்து தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கரியை சுற்றி நடக்கும் கொள்ளைகள், அதை கையகப்படுத்த நடக்கும் சூழ்ச்சிகள்.

ஒரு (சுல்தான் குரேஷி) கும்பல் ஒரு வீட்டுக்குளேயே வைத்து (ஃபைசல் கான்) குடும்பத்தை கொல்ல முற்படுகிறார்கள். அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக நினைத்து செல்ல, கொன்றவர்களை போலீஸில் போட்டுக்கொடுக்கிறான் மற்றொருவன் (ரமதீர்).

பின்னோக்கி நகர்கிறது கதை.

வாசேப்பூரில் இருப்பவர்கள் முஸ்லீம்கள். இரண்டு பிரிவினர். குரேஷிகள் மற்றும் கான்-கள். ஒரு காலத்தில் குரேஷிகள் ஆண்ட பிரதேசம். 1940-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் விளை நிலங்களை கையகப்படுத்தி அங்கு நிலக்கரி சுரங்கம் வெட்டி நிலக்கரி பிஸினஸ் சூடு பிடிக்கிறது. லோக்கல் தாதா சுல்தானா குரேஷி, அங்கு வரும் இரயில்களை நிறுத்தி கொள்ளை அடிக்கிறான். சாஹித் கான் என்பவன் அவ்வப்போது சுல்தானா பெயரை பயன்படுத்தி அதே கொள்ளையை அடிக்கிறான். பழி சுல்தானா மேல். இதை கண்டுபிடிக்கும் சுல்தானா, பிரச்சினை வேண்டாமென்று சாஹித்தையும் அவன் குடும்பத்தையும் ஊரை விட்டு போக சொல்கிறான். அப்படி செல்லும் சாஹித் தன்பாத் சென்று, திருந்தி, அங்கிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்கிறான். பிரசவத்தில் அவன் மனைவி இறக்க, கடைசி நேரத்தில் அவளை பார்க்க விடாமல் செய்த சுரங்க காவலாளியை கொலை செய்கிறான். அது 1947. சுதந்திரம் கிடைக்க, சுரங்கங்களை இந்திய தொழிலதிபர்களிடம் விற்கின்றனர் பிரிட்டிஷார். அப்போது சில சுரங்கங்களை வாங்கும் ரமதீர் சிங், சாஹித் செய்யும் கொலையை பார்த்து அவனை அதே காவலாளி வேலைக்கு அமர்த்துகிறான்.

ஒரு நாள், சாஹித், தான் ஒரு நாள் ரமதீரை கொலை செய்து அவன் சுரங்கங்களை தனதாக்கிக் கொள்வதாக சொல்வதை தற்செயலாக கேட்கும் ரமதீர், முந்திக் கொண்டு அவனை ஆள் விட்டு கொல்கிறான். இதை அறிந்த சாஹித்தின் உறவினர் நசீர், சாஹித்தின் மகன் சர்தார் கானை காப்பாற்றி தப்பிக்கிறான். சர்தார் கான் தான் முதல் பாகத்தின் ஹீரோ. படத்தின் கதையை விவரிப்பது இந்த நசீர். இது தான் மூன்று குழுக்களுக்கிடையான போரின் ஆரம்பம். மூன்று குழுக்கள்: குரேஷிகள், கான்-கள் மற்றும் ரமதீர் சிங். ரமதீர் சிங், கான்களை எதிர்க்க குரேஷிகளுக்கு உதவுகிறார்.

இடையிடையில் அந்த நகரம் அடையும் மாற்றங்களை நசீர் விவரிக்கிறான். வாசேப்பூர் முதலில் பீகாரில் இருந்து, பின் மேற்கு வங்கத்துடன் இணைந்து, தற்போது ஜார்கன்ட்டில் இருக்கிறது.

ரமதீர் படிப்படியாக 'முன்னேறி' யூனியனை தன் கையில் போட்டுக்கொண்டு, தொழிலாளர்களிடம் முறைகேடாக வசூல் செய்கிறான். எல்லா வகையாக தில்லு முல்லுகளையும் செய்கிறான்.

1970-களில் நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கப்படுகின்றன. வளர்ந்த சர்தார் கான், தன் தந்தையை கொன்ற ரமதீரை பழிவாங்குவதாக சபதம் எடுத்து மொட்டை அடித்துக்கொள்கிறான்.

சர்தார் நக்மா என்னும் பெண்ணை மணந்து கொள்கிறான். சரியான பெண் பித்தன். அடிக்கடி மனைவியை கர்ப்பம் ஆக்க, அவளோ அவனை பேசாமல் வெளியே தேடிக்கொள்ள சொல்கிறாள் ஒரு கண்டிஷனுடன். யாரையும் வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வரக்கூடாது.

ரமதீரின் மகன் ஜேபி சிங்கிடம் வேலைக்கு சேர்கிறார் சர்தார். ரமதீரின் லாரிகளையே கடத்துகிறான். கொஞ்சம் கொஞ்சமாக தாதாவாக வளர்கிறான் சர்தார். ரமதீர் முதலில் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின், அவன் தான் சாஹித்தின் மகன் என்று அறிந்து கொள்கிறான். ஜேபி சிங்கை அடித்த குற்றத்துக்காக (தற்போது ஜேபி சிங் எம்.எல்.ஏ) சர்தாரும் அவன் உறவுக்காரன் அஸ்கரையும் உள்ளே தள்ளுகின்றனர்.

சர்தார் ஜெயிலில் இருந்து தப்பித்து வசேப்பூரில் ஒளிந்து கொள்கையில், பெங்காளி இந்து பெண்ணான துர்காவை (ரீமா சென்) மணந்து கொள்கிறான். இதை கேள்விப்பட்ட நக்மா உடைந்து போகிறாள்.

இப்போது வசேப்பூர் தன்பாத்துடன் இணைகிறது. குரேஷிக்கள் மற்ற முஸ்லீம்களை பயமுறுத்த, கேள்விப்பட்ட சர்தார் முஹர்ரம் அன்று குண்டுகளை வீசி தாக்குகிறான். இப்போது சர்தார் மேல் அந்த ஊர் ஜனங்களுக்கு பயம் வருகிறது.

வீட்டிற்கு திரும்பும் சர்தார், கர்ப்பமான மனைவியுடன் உறவுக்கு அழைக்க அவள் திட்டி விடுகிறாள். கோபித்துக் கொண்டு அவளை விட்டுவிட்டு துர்காவின் வீட்டிற்கு போகிறான். அங்கே துர்காவுக்கு மகன் பிறக்கிறான். பெயர் Definite(!).

நக்மாவுக்கு பிறக்கும் பையன் பெயர் டானிஷ் (Danish). ரமதீர் டானிஷுக்கு உதவுவது போல நடித்து பணம் கொடுக்கிறான். நக்மா டானிஷை அடிக்கிறாள். ஒரு நாள், தூக்கத்தில் எழும் ஃபைசல் (இன்னொரு மகன், இவன் இரண்டாம் பாகத்தின் ஹீரோ), நக்மாவும் நசீரும் உறவுகொள்ள முற்படும் போது பார்த்துவிட்டு, வீட்டை விட்டு போகிறான்.

இப்பொழுது குரேஷிக்களும் ரமதீரும் நட்பாகின்றனர். பொது எதிரி சர்தார்.

சர்தார் இப்பொழுது இரும்பு வர்த்தகத்தில் இறங்குகிறான். பணம் கொழிக்கும் தொழில் அது. டானிஷும் தந்தையுடன் வேலை செய்கிறான். ஒரு முறை, டானிஷ் குரேஷிக்களின் ஒரு கொலை முயற்சியில் தப்பிக்கிறான். சர்தார் ரமதீரை எச்சரிக்கிறான்.

ஃபைசல் வளர்ந்ததும் அவன் ஒரு முறை துப்பாக்கி வாங்கும் போது மாட்டிக் கொண்டு ஜெயிலுக்கு போகிறான். ரிலீஸாகி, துப்பாக்கி வித்தவனை போட்டுத்தள்ளுகிறான். அவன் தான் போலீஸிடம் காட்டிக் கொடுத்தது.

இப்போது டானிஷ் சுல்தான் குரேஷியின் தங்கையை விரும்ப, இரு குடும்பங்களும் சண்டையை விட்ட்டு சமாதானம் அடையலாம் என்று கருதி திருமணம் நடக்கிறது. சுல்தானுக்கு இதில் விருப்பம் இல்லை.

ஒரு நாள், சர்தாருடன் செல்ல வேண்டிய ஃபைசல் கஞ்சா அடித்து தூங்கிவிட, யாரும் இல்லாமல் தனியாக செல்கிறன் சர்தார். இதை ஒருவன் குரேஷிகளிடம் போட்டு தந்து விட, சர்தாரை கொல்ல ஒரு கும்பல் தயாராகிறது. நக்மாவின் வீட்டை விட்டு துர்காவின் வீட்டை அடையும் சர்தார், அவளிடம் செலவுக்கு பணம் தர, அவன் சென்றதும், சர்தார் அங்கிருந்து சென்றுவிட்டதாக யாருக்கோ தகவல் அளிக்கிறாள் துர்கா.

ஒரு பெட்ரோல் பங்க்கில் வைத்து சர்தாரை சரமாரியாக சுட்டு விடுகின்றனர் குரேஷிக்கள். தள்ளாடி வெளியே வரும் சர்தார் அப்படியே ஒரு மீன்பாடி வண்டியின் மேல் சரிகிறான். ஒரு குண்டு அவன் தலையில் பாய்ந்துள்ளது. இறக்கிறான். முதல் பாகம் சுபம்.

இரண்டாம் பாகம்:


முதல் பாகத்தின் தொடர்ச்சி இது. சர்தார் சுட்டுக் கொல்லப்படும் போது, அந்த கும்பலில் ஒருவன் மாட்டுகிறான். போலீஸ் வேனில் இருக்கும் அவனை டானிஷ் கொல்கிறான். துர்கா இப்பொழுது ரமதீரின் பாதுகாப்பில் அவன் வீட்டில் வேலையில் இருக்கிறாள். சர்தார் தனியாக செல்வான் என்று போட்டுக் கொடுத்தது ஃபைசலின் நண்பன் ஃபஸ்லூ தான் என்று ஃபைசலிடம் சொல்கிறான். இதனிடையே சுல்தான் டேனிஷை கோர்ட்டில் வைத்தே போட்டு தள்ளுகிறான். நக்மா அவனால் பழிவாங்க முடியாது என்று பைசலை திட்டுகிறாள். ஃபைசல் சரியான கஞ்சா பைத்தியம்.

வாசேப்பூர் லோக்கல் எலக்‌ஷனில் ஃபஸ்லூ வெற்றி பெருகிறான். அவனை வாழ்த்த போகும் ஃபைசல், அவன் தலையை தணியாக வெட்டி எடுத்து அவன் வீட்டில் மாட்டுகிறான் ஃபைசல். இப்பொழுது ஃபைசல் தாதாவாக உருவாகிறான். ஷம்ஷத் ஆலம் என்னும் ஒருவன் மூலம் ஃபைசல் தன் வர்த்தகத்தை விரிவு படுத்துகிறான்.

இப்பொழுது ஃபைசலும் ரமதீரும் சந்தித்து ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றனர். அதன்படி கான் குரேஷிக்கள் சண்டையில் தான் தலையிடுவதில்லை என்கிறார். இது சுல்தானுக்கு தெரியாது.

ஃபைசல் மோஸினாவை  (கொள்ளை அழகு) திருமணம் செய்து கொள்கிறான். தன் தந்தை சாவுக்கு காரணமான சுல்தானின் ஆட்களை போட்டுத்தள்ளுகிறான்.

இப்பொழுது அடுத்த தலைமுறை. பைசலின் 14 வயது தம்பி பாபுவா (aka Perpendicular) அண்ணனின் பெயரை வைத்து ஒரு கடையில் கொள்ளை அடிக்கிறான். Definite-ற்கும் தாதா ஆக ஆசை. Perpendicular தொல்லை தாங்க முடியாமல், சர்தாரிடம் சொல்ல, சுல்தான் Perpendicular-ஐ போட்டுத்தள்ளுகிறான்.

முன்பு பார்த்த ஷம்ஷத் ஆலம், போலீஸிடம் ஃபைசலின் பிஸினஸை பற்றி போலீஸிடம் போட்டுக் கொடுக்கிறான். ஃபைசலை கைது செய்கின்றனர் போலீஸ். ஃபைசலிடம் நல்ல பேரெடுக்க, Definite ஷம்ஷத்தை கொல்ல முயற்சித்து பயங்கரமாக தாக்கி படுகாயம் அடைய வைக்கிறான். ஃபைசல் அரசியலில் ஈடுபட்டு ரமதீரை எதிர்க்க முடிவெடுக்கிறான்.

ஃபைசல் விடுதலை ஆகிறான். சுல்தால் கடைசி முயற்சியாக ஃபைசலை குடும்பத்துடன் கொல்ல முயற்சிக்கிறான் (முதல் பாகத்தின் முதல் காட்சி). அனைவரும் தப்பிக்கிறார்கள். இருந்தாலும் முஹர்ரம் அன்று சுல்தானின் ஆட்கள் மூலம் நக்மாவும் அஸ்கரும் படுகொலை செய்யப்படுகின்றனர். கடும் ஆத்திரமுற்ற ஃபைசல் சுல்தானை கண்டுபிடித்து போட்டுத் தள்ளுகிறான்.

இதனிடையில் ரமதீரின் ஆள் இக்லாக் ஃபைசலிடம் வேலைக்கு சேருகிறான். இது ஃபைசலுக்கு தெரிகிறது. தேர்தல் அன்று இக்லாக் ஃபைசலை கொல்ல முயற்சிக்க, Definite உதவியுடன் இக்லாக் கொல்லப்படுகிறான்.

ரமதீர் ஷம்ஷத்தை பார்க்க மருத்துவமனையில் இருக்கிறான் என்று ஃபைசலுக்கு தெரியவர, அவனை கொல்ல ஃபைசல் புறப்படுகிறான். மோஸினா தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறாள். அதை பெரிதாக கண்டுகொள்ளாத ஃபைசல் ரமதீரை கொல்ல கிளம்புகிறான்.

மருத்துவமனைக்கு ஆயுதங்களுடன் செல்லும் ஃபைசல், ரமதீரின் ஆட்கள் அனைவரையும் கொல்கிறான். Definite வெளியே போலீஸை பார்த்துக் கொள்ள, ரமதீரை கண்டுபிடித்து கண்டபடி கொல்கிறான் ஃபைசல். உயிருடன் இருப்பது இரண்டே பேர். ஃபைசல் மற்றும் Definite. போலீஸில் சரணடைகிறார்கள்.

ஓரிடத்தில் போலீஸ் ஜீப்பை நிறுத்த, Definite சாவகாசமாக இறங்கி, கைத்துப்பாக்கியால் ஃபைசலை சுட்டுக்கொல்கிறான். அதிர்ச்சியுடன் இறக்கிறான் ஃபைசல்.

அங்கே மறைவிடத்திலிருந்து வருகிறார்கள் துர்காவும், ஜேபி சிங்கும். இருவருக்கும் திருப்தி(?). தன் அரசியல் ஆசைக்கு குறுக்கே இருக்கும் ரமதீர் இறந்தது அவன் மகன் ஜேபி சிங்கிற்கு திருப்தி. ஃபைசல் இறந்தது துர்காவுக்கு திருப்தி. இனி Definite தான் definite-ஆ தாதா (பெயர்க் காரணம்?). Definite-ஆக நடித்திருக்கும் பையன்(!) தான் இந்த படத்தின் கதாசிரியர்.

பின் மோஸினா ஃபைசலின் குழந்தையுடன் மும்பைக்கு பிழைப்பை தேடி செல்வதாக படம் முடிகிறது.

படத்தின் முக்கிய பலம், அதன் கதாபாத்திரங்கள். பெரும்பாலும் சிறு நடிகர்கள், சர்தார் கானாக நடித்த மனோஜ் பாஜ்பய் தவிற. நிறைய கதாபாத்திரங்கள். படத்தினை பார்ப்பவர்களை பொருத்து, அந்த கேரக்டர்கள் பிடிக்கவும் பிடிக்காமலும் போகும். படத்தில் ஆங்காங்கே வரும் சிற்சில கதாபாத்திரங்கள் நச். குறிப்பாக மேடை பாடகர் ஒருவர். அந்த குடும்பத்தில் வரும் கல்யாணம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சாவிற்கும் கூட அவர் பாடுவார். அந்தந்த காலகட்ட படங்களின் காட்சிகள், வசனங்கள் முதலியவை சரியாக உபயோகப்படுத்தியிருப்பார்.

பீகாரை மையப்படுத்தி ஒரு படம் எடுக்க இயக்குநர் அனுராக் காஷ்யப் நினைத்த போது, Zeishan Quadri சொன்ன கதைகள் தான் இந்த படம். ஒரு கேங்வார் படமாக இல்லாமல், அந்த கேங் எப்படி உருவாகிறது என்றும் அவர்கள் பார்வையில் படம் எடுக்க ஒரு வாய்ப்பு வந்ததாகவும் கூருகிறார் இயக்குநர்.

* முகத்தில் அறைவது போல காட்சிகள் வைத்திருப்பது செம. உதா, ஃபைசலை தேடி வரும் சுல்தான், அங்கே அவன் தங்கை சாமா பர்வீனை பார்க்கிறான் (அவன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டவள்). அவள், அண்ணா என்று பாசத்தோட வர, ஒரு கனத்தில் அவளின் நெற்றியில் சுட்டுக் கொல்கிறான் சுல்தான். பின்னனியில் நசீரின் குரல், 'பழக்க வழக்கப்படி ஷாமா  முதலில் டானிஷின் விதவை மனைவி. அப்புறம் தான் அவனுடைய தங்கை'.

* ஆரம்பத்தில் இரு கேங்குகள் சண்டை என்றாலும், அவரவர் வீட்டு பெண்களை யாரும் தொடுவதில்லை. ஆனால், சுல்தான் தான் முதலில் (தன் த்அங்கையை கொன்று) அதை ஆரம்பித்து வைக்கிறான்.

படத்தில் பல விஷயங்கள் மிக நுனுக்கமாக கவனிக்க வேண்டும். 5.5 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 60 வருட கதையை சொல்ல வேண்டியிருப்பதால், இயக்குநர் அந்த இடைவேளைகளை நசீர் என்னும் கதைசொல்லி மூலம் அடைக்கிறார். அதே போல ஒவ்வொரு கேரக்டரும், அவர்களின் உடை, மேக்கப் போன்றவைகளை கவனித்தால் காலம் உருண்டோடுகிறது என்பது தெரியும்.

முதல் பாகத்தில் வாலிபனாக வரும் ஃபைசல், இரண்டாம் பாகத்தில் இறக்கும் போது நடுத்தற வயதுடையவர். அந்த வித்தியாசங்களும், சில இடங்களில் பல்லிளித்தாலும், நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ப்ரொமோஷனுக்காக 'வாசேப்பூர் பத்திரிக்கை' என்னும் கற்பனை பத்திரிக்கை வெளியிட்டது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.

இந்திய படங்களில் ஒரு நல்ல கேங்க்ஸ்டர் படம் பார்க்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கலாம். பரவசம் இலவசம்.

Friday, March 09, 2012

Some Like It Hot (1959)

ஆங்கிலத்தில் வரும் நகைச்சுவைப்படங்கள் பெரும்பாலும் நமக்கு/எனக்கு பிடிப்பதில்லை. தமிழ் படங்களில் காமெடிகள் பெரும்பாலும் வசனத்தை ஒட்டியே வருபவை. ஸ்டான்டப் காமெடிகள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்க்கலாம். அதுவும் கலக்கப்போவது யாரு போன்ற ஷோக்கள் வந்தவுடன் தான் இந்த ஸ்டான்டப் காமெடிகள் கொஞ்சமாவது வருகிறது. மதுரை முத்து அதில் கில்லாடி.

கவுண்டமனி காமெடி Satire வகை. பெரும்பாலும் இது ஒரு நெகடிவ் சமாச்சாரம். இதை இப்போ காப்பி அடிப்பது சந்தானம். அடுத்தவனை அடிக்கிறது, அவனை நக்கல் அடிப்பது, உருவத்தை வைத்து கிண்டல் அடிப்பது போன்றவை. வடிவேலு செய்வது Slapstic வகை காமெடி.

நிற்க. ஆங்கில நகைச்சுவை படங்களென்றால் நமக்கு தெரிந்தது சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி மற்றும் ஜிம் கேரி. எனக்கும் நிறைய ஆங்கில நகைச்சுவை படங்கள் பிடிப்பதில்லை. பார்த்த படங்களில் Genre-க்கள் 'காமெடி' என்று படிக்கும் போது மட்டுமே சிரிப்பு வரும். பொதுவாக அவை என்னை பொருத்த வரை Drama-க்கள். அந்த படங்களை அதன் கதைக்காகவும் மற்றும் இன்னபிற விஷயங்களுக்காவும் மட்டுமே பிடிக்கும்.

வழக்கத்திற்கு மாறான, இயற்கைக்கு அப்பாற்பட்ட படங்களை அவர்கள் காமெடி என்று வறையருக்கிறார்கள் போலும். ஜிம் கேரி நடித்த ஏஸ் வென்டுரா (Ace Ventura) படத்தில் செய்வதைத்தான் (சீரியஸாக) நம்ம நடிகர்கள் செய்கிறார்கள். பறந்து பறந்து காரை பார்க் செய்வது போன்று. ஆனால், நம்மூரில் அது ஆக்சன் படம். அங்கு அது காமெடிப்படம். தி மேட்ரிக்ஸ் அங்கு சீரியஸான படம். காரணம் ஹீரோ என்னதான் பறந்து பறந்து அடித்தாலும், அந்த கதாபாத்திரம் என்பது ப்ரோக்ராம் செய்யப்பட்டதால் அவ்வாறு சண்டை போட முடிகிறது. அதனால் நம்மால் அதை நம்ப முடிகிறது. ஆனால், பக்கத்து வீட்டு பையன் கேரக்டர் செய்யும் சிம்பு பறந்து பறந்து அடித்தால் நம்ப முடியுமா என்ன? ஜிம் கேரியின் காமெடிப்படங்கள் என்பதற்காக அவரும் 10 பேரை பறந்து பறந்து அடிப்பதில்லை. என்ன எழவுன்னா, கமெடிங்கிற பேருல இவங்க அடிக்கிற லூட்டி தான் தாங்க முடியாது (காமெடி, ஆனால் நிறைய அருவருப்பு + ஆபாசம் நிறந்த காமெடி படமென்றால் எனக்கு பிடித்தது Me, Myself & Irene. நிச்சயமாக சிரிக்கலாம்).

கதையை ஒட்டி வரும் காமெடிப்படங்களின் வரிசையில் ஆங்கிலத்தில் வந்த அந்த கால படம் Some Like It Hot.
படத்தின் போஸ்டர் - கொஞ்சம் கவனிங்க...
இது 1959-ல் வெளியிடப்பட்ட கருப்பு வெள்ளை திரைப்படம். படத்தை பற்றி படிக்கும் போது ஆஹா ஓஹோ என்று சொல்லப்பட்ட படம். ஆங்கில காமெடிகள் நமக்கு வெறும் ஸ்மைலை மட்டுமே வழங்கும். அதைத்தாண்டி விழுந்து விழுந்து சிரிக்க வைக்காது. ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்த படம் இது. படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால், சிரித்து ரசித்த படம், ஒவ்வொரு வசனமும், காட்சியும்.

கதையும் காமெடியும்: ஜோ-வும் (Tony Curtis) ஜெர்ரி-யும் (Jack Lemmon) கச்சேரிகளிலும் பார்களிலும் வாத்தியம் வாசிக்கும் இசை கலைஞர்கள், அன்றாடங்காய்ச்சிகள். முக்கியமாக "ஆண்கள்". அமெரிக்காவின் ப்ளோரிடாவில் 3 வாரத்திற்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. அவர்களின் வாத்தியங்கள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்கள் இல்லை. காரணம், அது பெண்கள் மட்டுமே பங்குபெரும் இசை நிகழ்ச்சி. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கேங்வாரில் 7 பேர் கொல்லப்படும் படுகொலையை பார்த்து தொலைகிறார்கள் (Saint Valentine's Day Massacre). இவர்கள் தான் அதை பார்த்த சாட்சிகள். இவர்களையும் கொல்ல எத்தனிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.

3 வாரம் வேலை, சம்பளம், வேலை முடிந்ததும் நல்ல பொழுது போக்கு, முக்கியமாக ஒளிந்து கொள்ள இடம் - அதனால் பெண் வேடமிட்டு குழுவுடன் இரயிலில் ஃப்ளோரிடா செல்கின்றனர். ஜோ-வின் பெயர் இப்போது ஜோஸபின், ஜெர்ரியின் பெயர் ஜெரால்டின் (அப்புறம் அவராவே மாற்றிக்கொள்வது, டாஃபேன்).
முன்னால் நடந்து செல்லும் 'சுகர் கேன்' மன்றோவை பார்த்து பெண் வேடமிட்ட ஜெர்ரி, "look how she moves - it's like jello on springs - they must have some sort of a built-in motor. I tell you it's a whole different sex."
இரயிலில் 'சுகர் கேன்' மர்லின் மன்றோவை சந்திக்கின்றனர். சுகர் கேன் ஒரு குடிகாரி. (வேலை செய்யும் போது) தண்ணி அடிப்பது அதன் தலைவிக்கு பிடிக்காது. யாருக்கும் தெரியாமல் இரயிலில் தண்ணி அடிக்க, அந்த குழு தலைவியிடம் மாட்டிக்கொள்கிறாள் கேன். ஆனால், ஜெர்ரி (அ) ஜெராலடின் மன்றோவை காப்பாற்றுகிறான்(ள்). பின் சினேகமாகிறான். ப்ளோரிடாவில் சென்று இறங்கும் ஜோ, கேன் மீது காதல் கொண்டு அவளை வளைக்க, தான் ஒரு மில்லியனர், 3 கப்பல்கள் உள்ளன என்று அடித்து விடுகிறார். பணக்காரர் என்றவுடன் ஜோவை எப்படியாவது வளைத்துபோட வேண்டுமென்று முயற்சிக்கிறாள் கேன்.

இதற்கிடையில் பெண் வேடமிட்ட ஜெர்ரியை ஒரு பணக்காரர் காதலிக்க(!) அந்த காதலை 'பயன்படுத்தி' கொள்கிறான் ஜோ (தமிழ் படத்துல, ஏன் பொம்பள வேஷம் போட்ட ஒரு ஆணை, கட்டாயம், இன்னொரு ஆண் காதலிக்கிறார் என்பதற்கான விடை கிடைத்துவிட்டது). ஜெர்ரிக்கு ஏற்பாடு செய்திருந்த விருந்தை ஜோ, கேனுக்கு கொடுப்பதும், ஜெர்ரிக்கு பரிசளித்த வைர நகையை ஜோ, கேனுக்கு பரிசளிப்பதாகவும் கதை நகர்கிறது.
ம்...செம ஃபிகரு...
பின், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வேறு 'வேலையாக' அந்த கேங் அங்கு வந்து தொலைக்க, instant-ஆக உடனே மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர் ஜோவும் ஜெர்ரியும். பின் நிறைய களேபரங்களுக்கிடையில் மறுபடியும் இன்னொரு படுகொலையில் வழக்கம் போல் சாட்சிகளாகின்றனர். இந்த முறை கொல்லப்படுவது அந்த ஒட்டுமொத்த கேங்குமே. ஜோ, ஜெர்ரி, கேன் மற்றும் அந்த பணக்காரர் (ஓஸ்குட்) எல்லோரும் ஒரு படகில் தப்பிக்கிறார்கள்.
"Well - nobody's perfect"
அந்த கடைசி 2 நிமிடங்கள் செம கலக்கல். ஜோ தான் பணக்காரன் இல்லையென்ற உண்மையை சொல்ல, கேன் தான் உண்மையிலேயே ஜோவை விரும்புவதாகவும் சொல்கிறாள்.

இந்த முறை ஜெர்ரியினுடையது. ஓஸ்குட் சலனமே இல்லாமல் நேராக பார்த்து படகை ஓட்டிக்கொண்டிருக்கிறார். ஜெர்ரி தான் ஓஸ்குட்டை ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்க முற்படுகிறான். ஜெர்ரி என்ன சொன்னாலும் ஓஸ்குட் விடுவதாய் இல்லை. தான் ஓஸ்குட்டின் தாயின் திருமண உடையை உடுத்த முடியாது, பொருந்தாது என்று சொல்ல சரிசெய்து கொள்ளலாமென்கிறார் ஒஸ்குட் (ஏற்கனவே ஓஸ்குட்டின் 'சில திருமணங்களில்!' பிரச்சினைக்குள்ளான உடை பிரச்சினை). "நான் நிறைய சிகரெட் பிடிப்பேன்" என்று ஜெர்ரி சொல்ல, சாதாரனமாக "ஐ டோன்ட் கேர்" என்கிறார் ஓஸ்குட். "3 வருஷமாக ஒரு சாக்ஸபோன் ப்ளேயருடன் சேர்ந்திருந்தேன்" என்று சொல்ல, "மன்னிக்கிறேன்" என்கிறார். "எனக்கு குழந்தைகளே பிறக்காது" என்று சொல்ல "தத்து எடுத்து வளர்த்துக்கொள்ளலாம்" என்கிறார். வெறுத்துப்போய் கோபமாக தன் தலையில் இருந்த விக்கை எடுத்து, "நான் ஒரு ஆண்" என்று ஒரு கத்து கத்த, ஓஸ்குட் நிதானமாக சலனமே இல்லாமல் "Well - nobody's perfect" என்ற அந்த உலகப்பிரசித்திப்பெற்ற டயலாக் சொல்கிறார், The End.

அந்த காட்சி...

சரி! கதை சாதாரண கதை தானே. இதில் என்ன பிரமாதம் என்கிறீர்களா? ஒன்றுமே இல்லாத படத்தை, அதை அளித்த விதம் அட்டகாசம். ஒவ்வொரு காட்சியிம் நீங்கள் அனுபவிப்பீர்கள்.

இந்த படத்தில் (கேனுக்கு அடுத்தபடியாக) கலக்கியிருப்பவர்கள் ஜெர்ரி மற்றும் ஓஸ்குட். ஜெர்ரியாக நடித்திருப்பவரை எங்கோ பார்த்தது போல் இருக்கே என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது அவருடைய 'தி அப்பார்ட்மென்ட்' திரைப்படம். அது மற்றுமொரு அருமையான திரைப்படம்.
"ஏய்...இந்த ட்ரஸ்ல நான் உன்ன விட ரொம்ப அல்லேகா இருக்கேனா?"
பெண்வேடமிட்டு அடிக்கும் கூத்துக்கள் அட்டகாசம். அதிலும் இரயிலில் கேன் தண்ணி அடித்து மாட்டிக்கொள்ள அவளை காப்பாற்றுகிறார் ஜெர்ரி. எல்லோரும் தூங்கியவுடன் நன்றி தெரிவிக்க கேன், ஜெர்ரியின் பெர்த்துக்கு வர, அங்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் பார்ட்டி ஏற்பாடாக விஸ்கி பாட்டிலை ஜெர்ரி எடுக்க, 'நான் கிளாஸ் எடுக்கிறேன்' என்று கேன் செல்ல, அதை இன்னொருத்தி பார்த்து 'என்னிடம் சைட்டிஷ் இருக்கு. நானும் கலந்துக்கறேன்' என்று அவள் இன்னொருத்தியை கூப்பிட, அப்படியே பரவி மொத்த கம்பார்ட்மென்ட்டும் சேர்ந்து கொள்ள, அந்த ரகளை செம Glass, I mean 'Class'.

படத்தின் ஸ்பெஷல்: மர்லின் மன்றோ

எல்லோரும் அவரை அழகி, கவர்ச்சி கன்னி என்று வர்னிக்கும் கதை நமக்கு தெரியும். அவரின் பரிதாபமான முடிவும் நமக்கு தெரியும். ஆனால், அவரை எல்லோரும் அழகி என்று ஏன் வர்னிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இந்த ஒரு படம் போதும். வெறும் கவர்ச்சி மட்டும் அல்லாமல், நடிப்பு மற்றும் பாடுவது என்று பன்மொழிக் கலைஞர். நிஜமான திறமைசாலி.

மன்றோவின் கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது உடை. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது உடையும் அதை அணியும் விதமும் அதை expose செய்யும் விதமுமே அவரது அழகை சொல்லிவிடுகிறது. அவர் ஆடை அணியும் விதத்தை கொஞ்சம் elaborate-ஆ சொன்னாலும் அது ஆபாசமாக முடியும். எனவே வெண்திரையில் காண்க.
♫♯♪"I WANT TO BE LOVED BY YOU JUST YOU AND NOBODY ELSE BUT YOU" ♪ - செம பாட்டு...
இந்த படத்துல சில பாடல்கள் இருந்தாலும், இந்த "I wanna be loved by you" பாட்டு செம க்யூட். பாடலின் வரிகளும், ட்யூனும், மன்றோவும்...Chanceless...


1959-ல தானே படம் எடுத்தாங்க. அப்புறம் எதுக்கு ப்ளாக் & ஒயிட்? கலர்ல எடுத்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே! காரணம், கலர்ல எடுக்கும் போது ஜோ மற்றும் ஜெர்ரியின் மேக் அப் கொஞ்சம் போல அதிகமாக தெரிந்த காரணத்தால் ஸ்கிரீன் டெஸ்டுக்கு பிறகு கருப்பு வெள்ளைக்கு மாற்றிவிட்டார்கள் (#Wiki).


இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒன்றில் வெற்றி பெற்றது. இந்த படத்தை AFI என்னும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டின் பல பிரிவுகளில் முதல் 100 வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. காமெடியில் இது #1. சிறந்த படங்களில் 14வது இடம். குறிப்பிடத்தகுந்த வசன வரிசையில் 48 (வேறு எது? "Well - nobody's perfect" தான்).


அப்புறம் நம்மாளுங்க 1975-ல இந்த படத்தை 'தழுவி' Rafoo Chakkar-னு இந்தியில எடுத்துடாங்க. தமிழ்ல? அதான் நிறைய படங்கள்ல பாக்குறோமே...

படம் பாத்துட்டு சொல்லுங்க.

Friday, August 26, 2011

The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!

வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜி. 'யார்?' படத்தை (டிவியில்) பார்த்தே பாதியிலேயே ஓடி வந்துவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் 'காஞ்சனா' வேற பாக்கி இருக்கு.


வீட்டில் யாரும் இல்லாத பொழுது சற்றே தைரியம் வரவழைத்துக் கொண்டு பார்த்த படம். படத்தின் முதல் frame லோ வோல்டேஜில் எறியும் குண்டு பல்பில் இருந்து தொடங்குகிறது.

கதை:
"எனக்கு பாராட்டு கிடைச்சிருக்கு"
மால்கம் க்ரோவ் (ப்ரூஸ் வில்லீஸ்) ஒரு குழைந்தைகளுக்கான மனநல நிபுணர். அவர் மனைவி அன்னா க்ரோவ்-விடம் தனக்கு கிடைத்த பாராட்டு பத்திரத்தை கொண்டு வந்து காண்பித்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் தங்கள் படுக்கையரையில் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணருகின்றனர்.
யாரோ இருக்காங்க...
அங்கே ஏற்கனவே குளியலறையில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டிருக்கிறான். அவன் தன்னுடைய பழைய நோயாளி வின்சென்ட் என்று மால்கமிற்கு தெரிகிறது. வின்சென்ட் மால்கம்மிடம் சிறுவயது முதல் hallucinations (சந்திரமுகி மாதிரி) என்னும் நோய்க்காக சிகிச்சை மேற்கொள்கிறான். "இனிமேலும் நான் பயப்பட விரும்பவில்லை" என்றும் மால்கமால் தான் தான் வாழ்க்கையில் தோல்வி அடைந்ததாகவும் கூறி மால்கமை வயிற்றில் சுட்டுவிட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். குண்டு மால்கம்மின் வாயிற்றை துளைத்து முதுகு பக்கம் வெளியேறிவிடுகிறது. மால்கம் அடி வயிற்றை பிடித்த படி படுக்கையில் சரிகிறார்.

சில மாதங்கள் கழித்து, மால்கம் தன்னுடைய அடுத்த க்ளையின்டான கோல் சீர் (Cole Sear) என்னும் சிறுவனுடன் நேரத்தை கழிக்கிறார். கோலிற்கும் வின்சென்ட்டை போன்றே பிரச்சினை. கோல் முதலில் மால்கம்மை ஏற்க மறுக்கிறான். காரணம் மால்கம்மால் தன்னை காப்பாற்ற முடியாது என்று நினைக்கிறான். வின்சென்ட்டை காப்பற்ற முடியாமல் போனதால் சற்றே நம்பிக்கை இழந்திருந்தாலும் அந்த சிறுவனை காப்பாற்ற முயல்கிறார் மால்கம்.

ஒருமுறை சமையலறையில் கோலின் அம்மா அவனுக்கு வேறு ஒரு 'டை'யை கொடுக்க அடுத்த அறைக்கு சென்று சில வினாடிகளில் திரும்ப வந்து பார்த்தால் ஒரு கணம் உறைந்து போகிறாள். அந்த சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு Kitchen Cabinet கதவுகளும் திறந்திருக்கிறது. அவனுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் கதவுகளும்.
பள்ளியில் பெண்சிலை உருட்டி விளையாடும் Cole
வகுப்பில் ஆசிரியர் அந்த பள்ளி 100 வருடங்களுக்கு முன் என்னவாக இருந்தது என்று கேட்க "மனிதர்களை கொல்லும் கொலைக்களன்" என்கிறான் கோல். ஆசிரியரோ இந்த இடம் நீதியை நிலைநாட்டும் கட்டிடம் என்கிறார். கோல், "அவர்கள் தானே மனிதர்களை கொல்கிறார்கள்" என்கிறான். மேலும், அந்த ஆசிரியர் (மட்டுமல்ல, யார்) முறைத்து பார்க்கும் விதமும் கோலிற்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் சண்டை வருகிறது. எல்லோரும் அவனை freak என்று சொல்வதும் பிடிக்கவில்லை. கோல் அந்த ஆசிரியரை "Stuttering Stephen" (திக்குவாய் ஸ்டீபன்) என்று திரும்ப திரும்ப சொல்ல, கோபத்தில் பல ஆண்டுகளாக மறந்து போயிருந்த அந்த திக்குவாய் பிரச்சினை மறுபடியும் அவருக்கு வந்துவிடுகிறது.
பலூனை எடுக்க மாடிக்கு செல்லும் Cole

ஒரு முறை நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்ல அங்கே மாடியில் ஒரு டஞ்சன் (dungeon) அறையை பார்க்கிறான் கோல். அதன் அருகில் செல்லும் போது உள்ளிருந்து ஒரு மனிதன் முதலில் மெதுவாக கேட்கும் பின் கத்தும் குரல் கேட்கிறது. அந்த குரல் உள்ளே மூச்சு முட்டுவதாகவும், தன்னை வெளியே வர உதவுமாறும், தான் தன் எஜமானனின் குதிரையை திருடவில்லை என்று சொல்வதாகவும் கேட்கிறது. அவன் பயந்து நிற்க அவனுடைய நண்பர்கள் இருவர் இவனை அதன் உள்ளே அடைத்து வைக்கின்றனர். பயந்து போய் கத்தி கத்தி மூர்ச்சையாகிறான் கோல். அவன் அம்மா வந்து அவனை வெளியே எடுக்கிறாள்.

இதை போன்ற சம்பவங்களால் கோல் ஏதோ அமானுஷ்ய விஷயத்திற்கு உள்ளாகிறான் என்பது நமக்கு தெரியவருகிறது. மால்கம் கோலிடம் தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிவிட்டதாகவும் அவள் இப்பொழுதெல்லாம் தன்னிடம் பேசுவதே இல்லை என்கிறான். அதே சமயம் அடிக்கடி வீட்டில் அவன் திருமணம் நடந்த வீடியோ கேசட் அடிக்கடி பார்க்கிறாள் அன்னா. அதனால் கோலை இன்னொருத்தரிடம் விட்டுவிட்டு தான் விலகிவிடுவதாகவும் கூற, கோல் அழுகிறான். "உன்னால் மட்டும் தான் என்னை காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறான். அப்புறம் சமாதானம் ஆகி அவனை காப்பாற்றும் வழியை கண்டுபிடிக்கும் மால்கம் அவனிடம் திரும்ப வர, கோல் மால்கம்மிடம் கோபமாக+நக்கலாக பேசும் இடம் அருமை.
 "I see dead people..."
"...And then one day this person Malcolm meets a wonderful boy who reminds him of that one.  Reminds him a lot of that one.  Malcolm  decides to try to help this new boy. He thinks maybe if he can help this boy, it would be like helping that one too..." - Malcolm to Cole.


(இந்த பகுதி தான் படத்தின் முக்கியமான கட்டம்). இப்போது மால்கம் மேல் இவனுக்கு கொஞ்சம் போல நம்பிக்கை வருகிறது. அதனால் அவனிடம் மட்டும் சத்தியம் வாங்கி கொண்டு உண்மையை சொல்கிறான். அவன் சொல்வது "I see dead people...Some of them scare me". "கனவிலா?" என்று கேட்க. இல்லை, நிஜத்தில் என்கிறான் கோல். "நிஜத்தில் என்றால் சவபெட்டி/சுடுகாட்டிலா?" என்கிறான். இல்லை, "எப்பொழுதும்/எங்கேயும்" என்கிறான், கண்களில் வழியும் கண்ணீருடன். கோலிற்கு வந்திருப்பது வின்சென்ட்டிற்கு வந்த அதே hallucinations பிரச்சினை தான் என்று நினைக்கிறார் மால்கம். அதாவது மாயை என்று.
"நான் தூங்கும் வரை இங்கேயே இருக்க முடியுமா?"
பின் தான் உணருகிறார் வின்சென்ட்டிற்கு வந்த hallucinations பிரச்சினை இல்லை. இவனுக்கு வந்திருப்பது தான் வின்சென்ட்டிற்கு வந்தது. அதாவது கோல் உண்மையிளேயே ஆவிகளை/பேய்களை பார்க்கிறான். மாயை இல்லை என்று உணருகிறார்.

அவன் பார்ப்பது சில பேய்களை. ஒன்று, கணவனால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கைகளில் வெட்டுக்காயங்களுடன் கத்தும் ஒரு பெண் பேய். இரண்டு, தன்னை விட சற்றே வயது அதிகம் உள்ள ஒரு சிறுவன் "வா. என் தந்தை எங்கே துப்பாக்கியை வைத்திருக்கிறார் என்று காட்டுகிறேன், வா" என்று சொல்லி திரும்ப, அவன் பின்னந்தலை துப்பாக்கி குண்டால் பிளக்கப்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருக்கிறது. அவன் மெல்ல கோலின் அறைக்கு சென்று மறைகிறான். மூன்றாவது, மேலே சொல்லப்பட்ட டஞ்சனில் அடைக்கப்பட்ட மனிதனின் குரல். நான்காவது, கைரா (Kyra) என்னும் அவன் வயதை ஒத்த பெண். அவனுடைய டென்ட்டிற்குள் வந்து தன் மேலேயே வாந்தி எடுத்துக்கொண்டு "I'm feeling much better now" என்று சொல்லும் பேய். (பேய்களை பார்க்கும் போதெல்லாம் வீட்டில் அவனே செய்துகொண்ட ஒரு டென்ட்டில் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வான். அதற்குள் கடவுள் சிலைகள் சில இருக்கும். உள்ளே உட்கார்ந்து கொண்டு சாமி கும்பிடுவான்). அடுத்து, அவன் படிக்கும் பள்ளியில் தூக்கில் தொங்கவிடப்படும் கணவன், மனைவி மற்றும் அவர்களின் மகன்.
கைரா (Kyra) - கோல்-ன் டென்ட்டினுள்

அவன் சொல்வதில் இருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார் மால்கம். அவன் பார்ப்பது இறந்து போனவர்களை. அந்த பேய்களில் சிலவற்றிற்க்கு தாங்கள் இறந்து போனது தெரிவதில்லை. தங்களுக்கு என்ன பார்க்கவேண்டும் என்று நினைக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறது. ஒவ்வொரு பேயும் தனித்தனியாக தான் அவனை பார்க்க வருகிறது. அவை எல்லாவற்றிற்கும் பொதுவான விஷயம் - எல்லாமே இவனிடம் ஏதோ கேட்கின்றன. ஒரு வேளை அவை அனைத்தும் கோலிடம் உதவி கேட்கின்றன என்று உணர்கிறார் மால்கம். அதனால் அவனை தைரியம் வரவழைத்துக் கொண்டு அவைகள் பேசுவதற்கு காது கொடுத்து கேட்க சொல்கிறார் மால்கம். இது ஒரு விதத்தில் இறந்து போனவர்களுக்கு உதவ அவனுக்கு கிடைத்திருக்கும் கிப்ஃட் என்கிறார் மால்கம்.

முதலில் பயந்தாலும் அவன் அந்த கைராவிடம் பேசுகிறான். அவள் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு இறந்தவள். அவளிடம் கோல் பேச கைராவில் வீட்டிற்கு அவளுடைய funeral reception-க்கு மால்கம்முடன் செல்கிறான் கோல். அங்கே கைரா கோலிடம் ஒரு பெட்டியை கொடுக்கிறாள். அந்த பெட்டியில் இருப்பது விடியோ கேஸட். அதை கோல் கைராவின் தந்தையிடம் கொடுக்க அவர் போட்டு பார்க்கிறார். அந்த கேஸட்டில் கைராவின் அம்மா தினமும் அவளுக்கு உணவுடன் சேர்த்து தரையை துடைக்கும் திரவத்தை கொடுப்பதை பார்க்கிறார்கள் (Slow poisoning). அதனால் அடுத்து பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் கைராவின் தங்கை காப்பாற்றப்படுகிறாள். மால்கம், தன் மனைவிக்கும் தனக்கும் இடைவெளி அதிகமாகிவிட்டதாக சொல்ல, கோல் மால்கம்மிடம், (இப்போது) தன் அனுபவத்தால், இரவில் அவள் தூங்கும் போது அவன் மனைவியுடன் பேசுமாறு சொல்கிறான்.

இப்பொழுது பயம் சற்று விலகிய கோல் தன் அம்மாவிடம் இதை பற்றி சொல்ல முடிவெடுக்கிறான், தான் இறந்துபோனவர்களை பார்ப்பதாகவும் சொல்கிறான். அப்பொது தான் அங்கே ஒரு விபத்து நிகழ, பத்து கார்களுக்கு பின்னால் இருக்கும் காரில் இருக்கும் கோலும் அவன் அம்மாவும் இருக்கிறார்கள். யாருக்கும் அடிபட்டிருக்காது என்று அவன் அம்மா சொல்ல, "ஒரு பெண் இறந்துவிட்டாள்" என்று கோல் சொல்கிறான். எப்படி தெரியும் என்று அவள் கேட்க அந்த இறந்து போன பெண் தன் கார் கதவின் அருகில் இருப்பதாக சொல்கிறான். அவன் அம்மாவின் கண்களுக்கு தெரிவதில்லை. அவனுக்கு தெரிகிறது. அந்த இறந்து போன பெண் அங்கிருந்து நகர்கிறாள், தலையின் இரத்தம் வழிந்துகொண்டு.
சற்று முன் இறந்த பெண்
கோல் அவளை நம்பவைக்க அவன் அம்மாவின் சிறுவயதில் நடந்த சம்பவத்தை சொல்கிறான். தன் நடன அரங்கேற்றத்திற்கு சிறு சண்டை காரணமாக வராதது பற்றி அவன் அம்மாவிற்கு அவள் அம்மாவின் (பாட்டியின்) மேல் கோபம். ஆனால், அந்த நடன நிகழ்ச்சிக்கு பாட்டி வந்திருந்ததாகவும் அவள் பார்க்காதவாறு மறைந்து அமர்ந்திருந்ததாகவும் சொல்கிறாள். மேலும் அவள் பாட்டியை புதைக்கும் போது ஒரு கேள்வி கேட்டதாகவும் அந்த கேள்விக்கு பதில் "தினமும்" ("Everyday") என்று பாட்டி சொன்னதாக சொல்கிறான். அந்த கேள்வி என்ன என்று கோல் கேட்க அவன் அம்மா "நான் அவளை பெருமைப்படுத்தினேனா?" ("Do I make her proud?") என்கிறாள். சமையலறையில் அந்த கதவுகளை திறந்ததும் அந்த பாட்டி தான் என்று சொல்கிறான்.

படத்தில் இருக்கும் ஒரு சுவாரஸ்ய ட்விஸ்ட் அப்படியே தொடர கீழ்கண்ட பத்தியை தயவு செய்து படிக்க வேண்டாம். படம் பார்த்து தெரிந்து கொள்க (கண்டிப்பாக படிக்க வேண்டுமென்றால் உங்கள் கீ-போர்ட்டில் Ctrl+A அல்லது மௌஸில் select/block செய்து படிக்கவும்)...

வீட்டிற்கு வரும் மால்கம் வீட்டில் தன் திருமண வீடியோ கேசட் ஓடிக்கொண்டிருக்க மனைவி தூங்குவதை பார்க்கிறான். தூங்கும் போது அவள் கையில் இருக்கும் திருமண மோதிரம் கீழே விழுகிறது. அப்போது தான் கவணிக்கிறான் தன் கையிலும் மோதிரம் இல்லாதிருப்பதை. மெல்ல மெல்ல நினைத்து பார்க்கிறான். சட்டென்று தன் முதுகை தடவி பார்க்க அவன் முதுகில் இரத்த கறை. ஆம். மால்கம் வின்சென்ட்டால் சுடப்பட்டபோதே இறந்து விடுகிறான். தான் இப்பொழுது வெறும் ஆவி மட்டுமே என்று உணருகிறான்.

இப்பொழுது மேலே முதலில் இருந்து
சிகப்பு வண்ணத்தில் இருக்கும் வரிகளை மறுபடியும் ஒரு சேர படித்து பாருங்கள், புரியும். எங்கேயும் மால்கம் கோலை தவிற வேறு யாரிடமும் பேசுவதில்லை. யாரும் மால்கம்மை கவனிப்பதும் இல்லை.


புரிகிறதா? கோலிற்கு மால்கம் ஒரு ஆவி என்பது ஏற்கனவே தெரிகிறது. மற்ற பேய்களை போல மால்கம் கோரமாக இல்லாததால் கோலிற்கு அவ்வளவாக மால்கம் மேல் பயம் இல்லை (என்று நான் நினைக்கிறேன்). பின் பக்கம் மட்டுமே அவனுக்கு இரத்த கறை. அதை படம் நெடுக காட்டப்படுவதும் இல்லை. மேலும் கோலின் வீட்டில் அவன் அம்மாவிற்கு எதிரில் மால்கம் அமர்ந்திருப்பது, கைராவின் வீட்டிற்கு அவனுடன் மால்கம் செல்வது, அன்னா தனியாக தன் திருமண நாளை ரெஸ்டாரன்ட்டில் கொண்டாடுவது (அங்கே மால்கம் வந்து பேசினாலும் அவள் பதில் பேசமாட்டாள். நமக்கு ஏதோ மனக்கசப்பு என்றே தோன்றும். ஒரு கணம் அவள் அவனை பார்ப்பதாய் நமக்கு தோன்றும். ஆனால் பின்னனியில் ஒரு சிறுவன் கத்துவது போல இருக்க அதை பார்ப்பாள் அன்னா), "I see dead people" என்று சொல்லும்போதும் "எங்கேயும்/எப்போதும்" என்னும்போது அங்கே மால்கம் பேயாக இருப்பது என்று மீண்டும் ஒரு முறை கவனித்து பாருங்கள். இதை போன்று எங்கும் இருவர் மட்டும் தனியாகவே இருப்பர். 


"I see dead people" என்னும் போது காமரா மெள்ள கோல் முகத்தை நோக்கி நகரும். இந்த ஒரு காட்சி படத்தில் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் க்ளூ. ஆனால் ஒருத்தரும் கண்டுபிடிக்கவில்லையாம்...

அவன் பேயாக இருப்பதால் தான் அவனால் தன் வீட்டில் வைன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் செல்ல முடியவில்லை. இப்பொழுது அவனுக்கு புரிந்துவிடுகிறது. தானும் இறந்துவிட்ட ஒரு பேய் என்று. ஆனால், எதற்காக மால்கம் கோலிடம் செல்ல வேண்டும்? காரணம், அவனுக்கு வின்சென்ட்டிற்கு உதவி செய்யமுடியாததற்கும் அவனை புரிந்து கொள்ள முடியாதற்கும் பதில் தேடி. அதாவது இவனுக்கும் மற்ற பேய்களை போல கோலிடம் உதவி தேவை. எல்லா பேய்களும் அவனிடம் உதவிக்கு தானே வருகிறது. இப்பொழுது அவனுக்கு விடை கிடைத்து விட்டது. கோல் பரிந்துரைத்தபடி தூக்கத்தில் அவன் மனைவியிடம் பேச அவள் பதில் அளிக்கிறான். பின் இனிமேல் அவளை தொந்தரவு செய்ய போவதில்லை, அவள் வாழ்க்கையை அவள் வாழட்டும் (அன்னாவிற்கு இப்போது புது தோழமை இருக்கிறது) என்று அவளை விட்டு விலகுகிறான்.

படத்தினை பற்றி...

படம் செம ஹிட். இயக்கம் மனோஜ் நைட் ஷயாமளன், புதுச்சேரிக்காரர். அவர் இயக்கிய படங்களில் வெற்றி பெற்ற மற்ற படங்கள். Signs, The Village இவற்றை தவிற மற்றவை ஓடவில்லை. ஆனால், டெக்னிகல் விஷயங்களுக்காக பரவலான பாராட்டுக்களை பெற்றிருக்கிறது அவர் படங்கள். இந்த படம் 6 ஆஸ்கர் அவார்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படத்தில் டாக்டர் ஹில் என்னும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். ஏகப்பட்ட அவார்டுகளை அள்ளிய படம்.
Cole Sear (Haley Joel Osment)
படத்தில் கோல் சீர்-ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன்...அபாரம். பெயர் Haley Joel Osment. இந்த படம் பார்த்து தான் ஸ்பீல்பெர்க் தன் படமான A.I. Artificial Intelligence படத்தில் நடிக்க வைத்தார். The Sixth Sense-க்கு முன் நான் பார்த்தது A.I. Artificial Intelligence படத்தை தான். அதிலேயே அந்த பையனை மிகவும் பிடித்து போனது. (இந்த படத்தையும் கண்டிப்பா மிஸ் பன்னாதீங்க. இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று அதிர வைத்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்). அட்டகாசமான நடிப்பு. பட இடங்களில் கண்ணீரை வரவழைத்துவிடுவான். அதுவும் சில இடங்களில் அவன் படும் பாதிப்பை நமக்கும் உணர செய்துவிடுவான். நமக்கே அந்த பையனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றும். படம் பாருங்கள். உங்களுக்கு இந்த பையனை மிகவும் பிடித்து போய்விடும். இந்த பையன் தான் Forrest Gump படத்தில் ஜூனியர் Forrest Gump-ஆக நடித்தவன்.

இந்த பையனை மனோஜ் தேர்ந்தெடுத்ததே சுவாரஸ்யமானது. Audition நடந்த போது இவன் மட்டுமே கழுத்தில் 'டை' கட்டிக்கொண்டு வந்தான். அவனுடைய பகுதியை படித்துவிட்டானா என்று கேட்க அவன் சொன்ன பதில் "நேற்று இரவு மூன்று முறை படித்தேன்". மீண்டும் "மூன்று முறை உன் பகுதியை படித்தாயா?" என்று கேட்க அவன் அதற்கு சொன்ன பதில் "இல்லை. நான் மூன்று முறை (என் பகுதியை அல்ல) திரைக்கதையை படித்தேன்" என்று. இந்த காரணங்களுக்காக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

படம் பேய்களை பற்றின படம் என்றாலும் அவ்வளவாக கோரமாக இல்லாமல் இருப்பது (என்னை போன்றவர்களுக்கு) ஆறுதல். வரும் 5-6 பேய்களும் படத்தில் சில நிமிடங்களே வந்து போகின்றன. ஆனால் படம் நெடுக அந்த பயத்தினை காட்சியமைப்பின் மூலமும் இசையின் மூலமும் உணர வைக்கிறார் இயக்குநர்.

ப்ரூஸ் வில்லீஸ் இடது கை பழக்கம் உள்ளவர். ஆனால், இடது கையால் எழுதுவது போல் படம் எடுத்தால் பார்ப்பவர்களுக்கு கையில் மோதிரம் இல்லாதது தெரிந்து விடும் என்பதால் வலது கையால் எழுத பழகிக்கொண்டார். மேலும் படத்தின் ஒரு காட்சியில் புத்தகத்தில் ஒரு பகுதியை பேனாவால் வட்டமிடும் இடத்தை வலதுகையால் கடிகாரச்சுற்றில் வரைவார். வழக்கமாக வலது கை பழக்கம் உள்ளவர்கள் anti-clockwise-ல் தான் வட்டமிடுவர்.

இந்த படத்தினை 2000 ஆண்டு சுமார் 8 கோடி பேர் வாடகை எடுத்துள்ளனர். இது ஒரு சாதனை.

படத்தில் சிகப்பு நிறம் வெகு வெகு சொற்பமாக அளவிலேயே இடம் பெற்றிருக்கிறது. சர்ச் கதவின் நிறம், பலூனின் நிறம், கார்பெட்டின் நிறம், ஒளிந்து கொள்ளும் டென்ட்டின் நிறம், வைன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கதவின் தாழ்பாளின் நிறம் என்று பல இடங்களில் சிகப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவையாவும் மெய்யுலகமும் 'பேய் உலகமும்' ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளும் இடங்கள். எப்பொழுதெல்லாம் பேய்கள்/ஆவிகள் கோலை பார்க்கின்றனவோ அங்கெல்லாம் சிகப்பு நிறம் இருக்கும் (சிகப்பு கலர் ஸ்வெட்டர்/சிகப்பு நிற டென்ட்).
கதவின் தாழ்ப்பாள்...
"You sleep now, Anna.  Everything will be different in the morning."
ஒரு நல்ல 'அழகான' திரில்லர்/ஹாரர் படம் பார்ப்பவர்கள் மிஸ் பன்னக்கூடாத படம் இது. டைரக்டருக்கு ஒரு ஸ்பெஷல் 'Like'.