skip to main | skip to sidebar

நான்...

சீனிவாசன் கிருட்டிணசாமி
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேறாவது வேணும்ல...
View my complete profile

விகடனில் நான்...

நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
சென்னைவாசிகளே...! பார்த்து போங்கப்பா...!!

கனிகள்

சமூகம் (16) அறிவியல் (11) சினிமா (11) பொதுவானவை (7) அரசியல் (6) மத‌ம் (4) சிரிப்பு (3) சென்னை (3) தொலைக்காட்சி (3) அமெரிக்கா (2) காதல் (2) விளையாட்டு (2) அசைவம் (1) அவசர உதவி (1) ஆடித்தள்ளுபடி (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சச்சின் (1) சினிமா யுவன் (1) சிவாஜி (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) மனிதாபிமானம் (1) விகடன் (1) விபத்து (1)

டிவிட்டரில்...

காய்ந்த இலைகள்...

  • ▼ 2009 (4)
    • ▼ October (1)
      • உ.போ.ஒ: 'அறிவாளி' கமல்
    • ► September (1)
      • அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் 'நினைத்தாலே இனிக்க...
    • ► July (1)
      • கொள்ளையடிப்பது ஒரு கலை...
    • ► June (1)
      • ஒரு நிமிடக் கதை
  • ► 2008 (11)
    • ► December (1)
      • பெங்களூர்வாசிக்கு ரத்தம் தேவை: ஒரு நாளைக்கு 10 யூன...
    • ► November (3)
      • முதலில் மீடியாவை தாக்கித் தொலையுங்கள்
      • குளோபல் மெல்ட்டவுன் மற்றும் சிக்கன நடவடிக்கைகள்
      • சீனச்சிரிப்பும் சில ஜோக்ஸும்...
    • ► September (1)
      • விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு 'கிராம்' தங்கம்... :)
    • ► August (2)
      • உசுரு
      • Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்...
    • ► May (2)
      • எச்சரிக்கை: காசு கொடுக்காமல் பப்ளிக் டாய்லட் செல்ப...
      • இனியொரு உலகு செய்வோம். அதில் அமெரிக்கா இல்லாமல் பா...
    • ► April (2)
      • 'பிட்'தகோரஸ் தேற்றங்கள்
      • பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்
  • ► 2007 (11)
    • ► November (1)
      • யுவனின் காஃபி பேஸ்ட்
    • ► October (1)
      • இந்தியா Vs பாகிஸ்தான் - எ 60:60 மேட்ச்
    • ► July (1)
      • மின்னஞ்சலில் காணாமல் போன தோழி
    • ► May (1)
      • லொள்ளு சபா - II
    • ► March (2)
      • "இந்தியா 250+ எடுக்கும்"-னு வங்கதேச கேப்டன் நம்பின...
      • 'சாம்பலாகக் கடவாய்' - ஒரு விஞ்ஞான பார்வை
    • ► February (1)
      • முத்தமிடுதல்
    • ► January (4)
      • 50. மணி - ஒரு நண்பனின் கதையிது
      • வெஜிடேரியனிசம்
      • 49. 'பெரியார்' படம் - 'பகவான்' பாடல்...
      • 48. புத்தாண்டு, மெரீனா, அரவாணிகள் - வாலிப வக்கிரம்...
  • ► 2006 (23)
    • ► December (3)
      • 47. ஏலே! பப்ளிக்-லே நாங்க!!
      • காதல் அழகானது, காதலிக்கப்படுபவர் அல்லர்
      • ரோமன் ஹாலிடே (1953)
    • ► September (3)
      • கம்யூனிக்கேஷன் கேப்(மாரித்தனம்)
      • அணுப்பிளவு (Nuclear Fission)
      • வீடு
    • ► August (3)
      • The Green Mile (1999)
      • கால இயந்திரம் - உங்க ஆசையை சொல்லுங்க
      • The Bicycle Thief (1948)
    • ► July (2)
      • The Matrix - கதை
      • சச்சின் என்ன பெரிய்ய்ய்ய்ய சச்சின்?
    • ► June (2)
      • தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் இப்படியா இருக்கனும்...
      • "செல்லம்மாள்" பாரதி
    • ► May (7)
      • இது உங்கள் சொத்து - மறுக்கா மறுக்கா படி
      • எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!???
      • மதுமிதா. ஆமா! என்னய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்...
      • சென்னையில் சினிமா
      • உதிரிப்பூக்கள், அறுவடை நாள்
      • சென்னையும், நானும்
      • வீணான என் ஓட்டு
    • ► March (1)
      • சரிகிறதா நான்காவது தூண்?
    • ► January (2)
      • அறிவியல் - வரமா / சாபமா?
      • கணக்கு பண்ணலாம் வாங்க
  • ► 2005 (13)
    • ► December (1)
      • நான்கு கில்லாடிகள்
    • ► November (1)
    • ► September (1)
    • ► July (1)
    • ► April (2)
    • ► March (3)
    • ► February (4)
  • ► 2004 (9)
    • ► November (1)
    • ► August (2)
    • ► July (1)
    • ► June (2)
    • ► May (2)
    • ► April (1)
  • ► 2003 (1)
    • ► June (1)

Add-Tamil



மகரந்த துகள்கள்

Recent Comments

இது எப்படி இருக்கு?

இது எப்படி இருக்கு?

Followers

Search...

Loading...

Subscribe To

Posts
    Atom
Posts
All Comments
    Atom
All Comments

விழுதுகள்

Wednesday, October 14, 2009

உ.போ.ஒ: 'அறிவாளி' கமல்

நிச்சயம் கமல் அறிவாளி தான். காரணம், ஒரு அறிவாளியால் தான் மற்றவரை முட்டாளாக்க முடியும்.

சில கமல் படங்களுக்கு பிறகு வந்த ஒரு படம் இது. அந்த சில படங்கள், கமல் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை தோற்றுவைக்கிறது, எப்படி ரஜினி படம் என்றால் லாஜிக் பார்க்காமல், சும்மா ஒரு என்டர்ட்ரெய்னராக பார்ப்போமோ, அதை போல.

கமலில் முந்தைய படமான 'ஹே ராம்'-ஐ எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை கொல்லும் நோக்கத்தில் இருப்பதால் அவர் காந்தியவாதிக்கு எதிரானவர் என்றா? இல்லை கடைசியில் மனம் மாறுவதால் அவர் காந்தியை ஆதரிப்பவர் என்றா? அது படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து. காந்தியின் மீது வெறுப்பு ஏற்பட்ட சமயத்தில், கல்கத்தா நகரில் வலம் வரும்போது, காந்தியின் அறிமுக காட்சியில் கீழே மக்கள் கூடியிருக்க, மேலே ஜன்னலை திறந்து காந்தி வெளிப்படுவார். மென்மையானவராக நம்பியிருக்கும் மக்கள் முன்னிலையில் அந்த காட்சியில் அந்த ஜன்னல் கதவை சற்றே வேகமாக "படாரென்று" திறந்து காந்தி வெளிப்படுவார். அதே காந்தியை திருந்தியவாரக சாகேத் ராம் சந்திக்கும் போது மென்மையாக காட்டியிருப்பார் இயக்குநர் கமல்.

இந்த இரு காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை ஒரு நெகடிவ் பாத்திரமாகவா? அல்லது சாகேத் ராம் பார்வையில் (அந்த சூழ்நிலையில்) காந்தி முதலில் ஒரு வெறுக்கப்படும் நபராகவா, பின் மென்மையானவராக?

ஒரு காட்சியை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்து அதன் அர்த்தம் மாறும். வோடஃபோன் நாய்க்குட்டி 'டை' எடுத்து ஓடிவரும் போது ஒரு அழகு தெரிந்தது. அந்த நாய்க்குட்டியின் பாசம் தெரிந்தது. ஆனால், வீட்டில் சிக்கன் சாப்பிடும், ஃப்ளூ க்ராஸ் அமைப்பிற்கோ அந்த நாயை கொடுமைப்படுத்துவதாக(!) தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். ஒன்று, கமல் பார்வையாளர்களை குழப்பி அதில் மீன் பிடிக்கிறார். அல்லது, அந்த பாத்திரத்தின் பார்வையில் படம் நகர்கிறது.

முதலில் "எ வெட்னஸ்டே" பாத்ததால் இயல்பாகவே "உ.போ.ஒ" பிடிக்கவில்லை. நஸ்ருதீன் ஷாவை போல் இல்லாமல் இங்கே கமல் தனியாக தெரிந்தார். ஞாநி சொல்வதை போல "என்னைப் பார், என் நடிப்பைப்பார் என்று ஒவ்வொரு பிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக் கொண்டு பல காலம் ஆகிறது". இது தான் பிரச்சினையே. ஆனால் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இது தான் தேவைப்படுகிறது. அதை கமல் பயன்படுத்திக் கொள்கிறார்.

"Mr. I.G.R.Maarar...I hope you are aware of the power of State of the art explosives..." - என்று அட்சரசுத்த ஆங்கிலத்தில் சொல்லும் பொழுதே அவர் காமன் மேன் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. இது கமல் தன்னை எல்லோரும் பாராட்ட வேண்டும் அன்ற மேனியாவில் மாட்டிக்கொண்டுள்ளார்.

ஆனால், வலைத்தளங்களில் பலர் பல விதமாக இந்த ஒரு படத்தை அலசியிருப்பது அதிகமோ என்று தோன்றுகிறது. தோன்றுவது என்ன. அதிகம் தான். சின்ன சின்ன விஷயத்தை கூட நோன்டி நோன்டி குறை சொல்லியிருப்பதை என்னவென்று சொல்ல? படத்தை படமாக பார்க்காமல் ஹீரோவுக்காக பார்க்கும் கலாச்சாரம் இன்னும் முடியவில்லை, தமிழ் மக்களிடம் என்பதையே இது காட்டுகிறது. இவர்கள் தான் விஜய்யையும், சிம்புவையும் நக்கலடிப்பவர்கள். ஆனால், கமல் படமென்றால் மட்டும் 'கமல் படம்' என்று பார்ப்பார்கள்.

கமலின் இந்த ஃபார்முலாவில் வந்த படம் தான் தசாவதாரம். அது தெரியாமல் தான் கலைஞரும், வீரமணியும் பாராட்டித் தொலைத்தார்கள். ஆத்திகத்தை வெளிப்படையாக கிண்டல் அடித்தாலும், புரிந்துகொள்ளா தெரியாத ரசிகர்கள் அதையும் ஒரு சாமி படமாகத்தான் பார்ப்பார்கள்.

ஒரு ரிப்போர்ட்டர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதை கூட வக்கிரம் என்கிறார் ஞாநி. கமல் எந்த காரணத்திற்காக அந்த காட்சியை வைத்தார் என்று நமக்கு தெரியாது. ஒரு வேளை, பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதால் பெண்கள் பல கட்டுபெட்டித்தனமான சட்டங்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்று காட்டுவதற்காக கூட அந்த காட்சியை வைத்திருக்கலாம். இவர்களாகவே அதற்கு ஒரு கற்பனை பிட்ட போடுறது (இப்போ நான் போட்ட மாதிரியே) என்ன நியாயம்? அந்த கம்ப்யூட்டர் பையன் என்ன ஜாதின்னு நான் நினைக்கவேயில்லை, அதை போன்ற புண்ணியங்களை ஞாநி போன்றவர்கள் தான் எற்றுக்கொள்கிறார்கள்.

இது ஒரு சாதாரண படம். இதை போய் அக்குவேறாக ஆணிவேறாக அலசி விளம்பரம் கொடுத்திருப்பது தேவையற்றது. இந்த தமிழகத்தில் எதையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத்தெரியாத மக்கள் தொகை சற்றே அதிகமாக தெரிகிறது. அப்படியே இது ஒரு பிரச்சாரப் படமாக இருந்தாலும் அதற்கு எதுக்கு இவ்வளவு விளம்பரம்? நாமென்ன முட்டாள்களா? அது சரி! நைக் பேர் போட்ட டீ சர்ட்டை போடுறது கூட பேஷன் தானே. மறைமுகமாக நம்மை நைக் கம்பேனி விளம்பரமாக பயன்படுத்திக் கொள்வது கூட தெரியாத ஞான சூனியங்கள் நாம்.

"அங்கவை சங்கவை"யை கண்டிக்க மாட்டார்கள். ஏன்? ஹவாலா பணத்தை கை பாத்தி கொடுப்பது முஸ்லீம்கள் என்று பச்சையாகவே காட்டப்படுகிறது சிவாஜியில். எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் "இவனுங்க தானா இதயெல்லாம பன்னுறது?" என்று அப்பாவியாக புரிந்து கொண்டார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? காமென் மேனின் மனைவி "என்னது இன்ஷா அல்லாவா?"னு கேட்டால் உடனே கமல் தன்னை ஒரு முஸ்லீமாக காட்டிக் கொண்டார் என்று ப்ரேக்கிங் நியூஸ் போடவேண்டியது.

என்னை பொறுத்த வரையில் கமல் நம் எல்லோரையும் பயன்படுத்திக் கொள்கிறார். படத்தில் அவர் ஒரு காமன் மேன். ஆனால் உண்மையில் அவர் ஒரு பிஸினஸ் மேன். ஒரு வேளை நான் மேலே எழுதியிருப்பதை போல கமல் நினைக்கவில்லையென்றால்? கமல் என்னையும் சேர்த்து தான் முட்டாளாக்கியிருக்கிறார் ;)
Share/Save/Bookmark

உ.போ.ஒ: 'அறிவாளி' கமல்



Posted by சீனு @ 10/14/2009 03:56:00 PM
Reactions: 
13 இலைகள் Links to this post
இலை வகைகள் அரசியல், சினிமா, மத‌ம்

Saturday, September 19, 2009

அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் 'நினைத்தாலே இனிக்கும்'

டெய்லி தூங்க நைட் மணி 12 ஆகுது. வேலை வேற. அதனால வீட்டுல இருக்கும் டி.வி.யில ஏதாச்சும் ஒரு சேனல் ஓடிக்கிட்டு இருக்கும். காமெடி இல்லைன்னா பாட்டு. சில நேரத்துல ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் நல்ல படம் போடுறாங்க. 11 மணிக்கு சன் டி.வி.யில் வரும் "அன்புத் தொகுப்பாளன் சூர்யா"-வின் 'நினைத்தாலே இனிக்கும்' நிகழ்ச்சி ஓடும். மனுஷன் நல்லாத்தான் நடத்துறார்...நிகழ்ச்சிய. ஏதாவது ஒரு கவுஜ அப்புறம் அவரோட தமிழ் உச்சரிப்பு. இது அந்த நிகழ்ச்சிக்கு நேயர் வட்டத்தை அதிகப்படுத்தியது. முக்கியமா பெண்கள்.

ஒன்று கவனிச்சதுல தெரிஞ்சது. போன் போடுறவங்க பெரும்பாலும், ம்ஹூம், எல்லாரும் பொண்ணுங்க/பொம்பளைங்க. "நாங்க பேங்களூர்ல இருந்து பேசுது", "கோயமுத்தூருல மழை பெய்யுதுங்க", "ப்ரோக்ராமு நல்லா கீது", "சூர்யா நீங்க அழகா இருக்கீங்க", "உங்க ப்ரோக்ராம பாக்கவே நாங்க முழிச்சிக்கிட்டு இருக்கோம்"-னு ஏகப்பட்ட போன் காலுங்க. சில நேரத்துல அதிகமா போச்சுதுன்னா (போன் கால) கட் பன்னிடறாங்க.

யோசிச்சு பார்த்ததுல, என்னடா பொம்பளைங்க மட்டுமே பேசுறாங்கன்னு தோனிச்சு. இது எதேச்சையா நடக்க சான்ஸே இல்லையே. அப்புறம்?

சரி! டெஸ்ட்டு பன்னித்தான் பார்ப்போம்னுட்டு நேத்து ஒரு கால் பன்னினேன். யூஸர் பிசின்னு வந்துச்சு. "கொஞ்ச நேரம் கழித்து டயல் செய்யவும்"ன்னு சொன்னாங்க. அவங்களே சொல்லிட்டாங்களேனு மறுபடியும் டயல் செஞ்சேன். அப்புறம் யாரோ ஒரு லேடி வந்து (இங்கேயுமா!) "உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது.", அதனால, "லைனில் காத்திருக்கவும்"னு பிட்ட போட்டாங்க. இப்படியே ஒரு 10 நிமிஷம் போச்சு.

நடுவுல எஸ்.பி.பி. வேற "காதல் ரோஜாவே" பாடினார். அப்புறம் ஒரு "ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்". பத்து நிமிஷம் கழித்து ஒருத்தர் எடுத்தார்.

அவர்: "ஹலோ"

நான்: "ஹலோ"

அப்புறம் "டொய்ங்..."னு ஒரு பொன்னு சொல்லிச்சு. அடடா! "கால் போச்சே...". என்ன பன்னலாம்?

சரி! இன்னொரு முயற்சி பன்னி பார்ப்போம்னுட்டு மறுபடியும் "போடுறா கால, என் டுபுக்கு"-ன்னு மனசுக்குள்ள இருந்த Id சொல்லிச்சு. Super Ego "வேண்டாம் மச்சான். பணம் வேஸ்ட்"-ன்னு சொல்லிச்சு.

வழக்கம் போல Id ஜெயிச்சுது. மறுபடியும் போன போட்டேன் சூர்யாவுக்கு, ம்ஹூம், சன் மியூசிக்கு.

மறுபடியும் அந்த பழைய ப்ராஸஸ் போச்சு. இந்த தடவ அதிக முன்னேற்றம். 18 நிமிஷம். காது சூடாக சூடாக "உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது", அதனால, "லைனில் காத்திருக்கவும்"னு சொல்லிச்சு மறுபடியும் அந்த பொண்ணு. இந்த தடவ உஷாரா இயர் போன மாட்டிகிட்டேன். சீனுவா கொக்கா?

இந்த தடவ ரெண்டு பாட்டு, அப்புறம் ஒரு "ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்".

ஒரு வழியா பத்தொன்பதாவது நிமிஷத்துல (என் டெலிபோன் பில்லோட) ஒரு ஆபத்பாந்தவன் வந்து போன எடுத்தார்.

அவர்: "ஹலோ"

நான்: "ஹலோ"

அப்புறம் "டொய்ங்..."னு (மறுபடியும்) ஒரு பொன்னு சொல்லிச்சு.

அடப்பாவிகளா! இந்த நிகழ்ச்சி பெண்களுக்கும் / ஆன்ட்ஸ்களுக்குமா? சொல்லித் தொலைக்கக்கூடாதாடா. முப்பது ரூபா போச்சே...!!!

முப்பதோட ஒன்னு முப்பத்தொன்னு அப்படீன்னு கடுப்புல 58585-க்கு "ஏன்டா! இந்த எழவ சொல்லித் தொலைக்கக்கூடாதா? நேரமும் பணமும் பூடுச்சே"-ன்னு மனச் சாந்திக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போட்டு தூங்க போயிட்டேன். ஹூம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு feeling(s).

ஆனா ஒன்னு. நிச்சயமா எனக்கு சூர்யா மேல பொறமை இல்லைன்னு நீங்க நம்புறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
Share/Save/Bookmark

அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் 'நினைத்தாலே இனிக்கும்'



Posted by சீனு @ 9/19/2009 12:31:00 PM
Reactions: 
6 இலைகள் Links to this post
இலை வகைகள் சிரிப்பு, தொலைக்காட்சி
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
Tamilish NewsPaanai.com Tamil News Sharing Site Thiratti.com Tamil Blog Aggregator
Older Posts
Subscribe to: Posts (Atom)

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்