skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

டிவிட்டரில்

Labels

சினிமா (20) அறிவியல் (12) சமூகம் (12) அரசியல் (6) பொதுவானவை (6) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) சென்னை (2) மத‌ம் (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) விகடன் (1)

ஆண்ட்ராய்ட்-ல்...

சின்ன வீடு

  • எ.பி.பா's
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி - எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய ப...
    1 year ago

ஃபாலோ மீ...

பழைய சோறு

  • ►  2012 (2)
    • ►  November (1)
    • ►  March (1)
  • ►  2011 (4)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  February (1)
  • ►  2010 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2009 (5)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (1)
  • ►  2008 (7)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2006 (22)
    • ►  December (2)
    • ►  September (3)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ▼  2005 (12)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ▼  April (2)
      • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் !!!
      • The Expanding Universe
    • ►  March (3)
    • ►  February (4)
  • ►  2004 (8)
    • ►  November (1)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
  • ►  2003 (1)
    • ►  June (1)
There was an error in this gadget

Visits


View My Stats

Facebook Badge

சீனு Cheenu

Create your badge

Popular Posts

  • சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக
    "உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...
  • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...
  • The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!
    வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...

விழுதுகள்

Tuesday, April 26, 2005

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் !!!




நாம் பலமுறை "ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உருப்பினர் பதவி - so and so நாடு ஆதரவு, பாகிஸ்தான் எதிர்ப்பு" என்று கேள்விப்பட்டிருப்போம். அதி இன்னா ரப்சரு-பா? ஐ.நா. என்பதன் விரிவாக்கம் "ஐக்கிய நாடுகள் சபை" (ஆங்கிலத்தில் UN - United Nations). இராக்கியருக்கு சதாம் ஹுசேனிடமிருந்து "சுதந்திரம்" வாங்குவதர்க்கு அமெரிக்கா "போர்" தொடுத்த போது, உம்மனாம் மூஞ்சியாக வெறும் அறிக்கை மட்டுமே வாசித்த அதே ஐக்கிய நாடுகள் சபை தான். இது என்ன அமைப்பு? எதற்காக இந்தியா அதில் நிரந்தர உருப்பினர் ஆக வேண்டும்?? அதற்கு எதற்கு பல நாடுகளின் ஆதரவைக் கோரவேண்டும்???

ஐ.நா. சபையில் தற்போது இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 189 உருப்பு நாடுகள் உள்ளன. ஐ.நா. சபையின் ஒரு அங்கம் தான் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில். இதன் முக்கிய நோக்கமே நாடுகளுக்கு இடையே அமைதியையும், பாதுகாப்பையும் உருதிப்படுத்துவது தான். தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் சீனா, பிரான்சு, ருஷ்யா, இங்கிலாந்து மற்றும் "பெரிய அண்ணன்" அமெரிக்கா. இந்த நாடுகள் யாவும் இரண்டாம் உலகப்போரின் வெற்றியால் உருப்பினராக்கப்பட்டவை. (1971-ல் "சீன மக்கள் குடியரசு" "சீனா"வாகவும், 1991-ல் "சோவியத் யூனியன்" "ருஷ்யா"வாகவும் மாற்றம் பெற்றன). இவைதவிர, மற்ற பத்து நாடுகள் 2 வருடத்திற்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். இவற்றில் 5 நாடுகள் ஒவ்வொறு ஆண்டும் மாற்றப்படும். இந்த தேர்தல் ஒவ்வொறு சனவரி 1-ம் தேதியும் நடக்கும். ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு நாடுகளையும் (மொத்தம் ஆறு), அரேபியா, ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு நாட்டையும் (ஆறு + மூன்று = மொத்தம் ஒன்பது). பத்தாவது நாடாக ஒரு ஆசிய அல்லது ஆப்ரிக்க நாடு மாறி மாறி வரும். 2005-2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜென்டினா, பெனின், பிரேசில், டென்மார்க், கிரேக்கம், ஜப்பான், பிலிபைன்ஸ், ரோமானியா மற்றும் தான்சானியா ஆகியவை.

இந்த பதினைந்து நாடுகளில் தற்போது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகள் special நாடுகள்.

1) இந்த நாடுகள் யாவும் Nuclear Non-Proliferation Treaty (NPT)-யின்படி அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். மற்ற நாடுகள் அனு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. ஏன், அனு ஆயுத சோதனை கூட செய்யக் கூடாது. இதைத் தான், Comprehensive Test Ban Treaty (CTBT) மூலம் நம் நாட்டை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா நெருக்குதல் கொடுத்தது.

2) இதை விட முக்கியமானது, இந்த நாடுகள் யாவும் வைத்திருக்கும் வீட்டோ (Veto) அதிகாரம். வீட்டோ என்பது லத்தீனில் இருந்து வந்த வார்த்தை. ஐ.நா.வில் உருப்பினராக உள்ள எல்லா நாடுகளுமே மற்ற நாடுகளுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அவற்றின் மேல் திர்மானம் போடும் பொழுது இந்த பதினைந்து நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (பதினைந்தில் ஒன்பது நாடுகள்) ஆதரிக்க வேண்டும். ஆனால் வீட்டோ அதிகாரத்தை வைத்து இந்த தீர்மானத்தை மேற்கூரிய ஐந்து நிரந்தர உருப்பினராக உள்ள நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு பயன்படுத்தியும் ரத்து செய்ய முடியும் (பதினைந்தில் ஒன்பது நாடுகள் ஆதரித்த பின்பும்). இது தான் அந்த வீட்டோ அதிகாரம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆரம்பித்த பிறகு இந்த வீட்டோ அதிகாரத்தை சீனா 5 முறையும், பிரான்சு 18 முறையும், ருஷ்யா 122 முறையும், இங்கிலாந்து 32 முறையும், அமெரிக்கா 79 முறையும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த ஐந்து நாடுகளைத் தவிற, ஐ.நா.வில் உருப்பினராக உள்ள மற்ற நாடுகள், இந்தியாவையும் சேர்த்து, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே முடியும், அதுவும், இந்த கவுன்சில் ஒப்புக் கொண்டால் மட்டுமே.

இந்த special நாடுகள், ஒரு பிரச்சினை மற்ற நாடுகளை பாதிக்கும் பட்சத்தில், அவை விசாரனை நடத்த உரிமை உண்டு. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை இந்த நாடுகள் சிபாரிசு செய்யலாம். இந்த உரிமை மற்ற நாடுகளுக்குக் கிடையாது. மேலும், இந்த கவுன்சில், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதிரடியாக காரியத்திலும் இறங்கலாம். உதா"ரணம்", 1950-ல் கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை, 1991-ல் கூட்டுப் படையை உபயோகித்து நடத்தப்பட்ட வளைகுடாப் போர். இவற்றிற்கு ஐ.நா.வின் உருப்பினர்கள் கொடை வள்ளல்களாக இருப்பார்கள். அதுவே, ஐ.நா.வின் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட வியட்னாம் பிரச்சினை, சதாம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஈராக் யுத்தம் ஆகியவற்றை சொல்லலாம். சமீபத்தில் (சதாம் ஹுசைனுக்கு எதிராக) நடந்த ஈராக் யுத்தத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளிக்காததால் தான் அமெரிக்கா தன்னிச்சையாக போர் தொடுத்தது. அதனால் ஐ.நா.வின் கூட்டுப் படை கலந்துகொள்ளாததால் இந்தியாவும் தன் படைகளை அனுப்பத் தேவையில்லாமல் போய்விட்டது.

இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு பெரும் பாடு படுகின்றன (இந்த இரண்டு நாடுகள் தான் ஐ.நா.விற்கு அதிகமாக படைகளை அனுப்பும் நாடுகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது). ஜெர்மனியை பிரான்சு ஆதரிகின்றது. ஆனால், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஜெர்மனிக்குப் பதிலாக பொதுவன ஒரு ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு இந்த இடத்தை வழங்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளன. பிரான்சும், இங்கிலாந்தும் தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்தால் ஜெர்மனி இந்த மேற்கூரிய திட்டத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (!?) மக்கள் தொகையை வைத்திருக்கும் நம்மை பிரான்சு, இங்கிலாந்து, ருஷ்யா ஆகியவை ஆதரிக்கின்றன. இந்திய-சீன உறவின் முன்னேற்றத்தால் சீனாவும் நம்மை ஆதரிக்கின்றது. வழக்கம் போல் பாகிஸ்தான் இதை எதிர்க்கிறது. இன்னொரு புறம், ஜப்பான் நிரந்தர உருப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. கிழக்கு ஆசிய நாடுகள், குறிப்பாக சீனா, வட மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் ஜப்பானை எதிர்க்கிறது.

தற்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் திரு.கோபி அன்னானும் இந்த நிரந்தர உருப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு குழுவை பரிசீலிக்கச் சொன்னார். அந்த குழு கூறியது, இந்த எண்ணிக்கையில் இன்னும் ஐந்து நாடுகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று சிபாரிசு செய்தனர். அந்த ஐந்து நாடுகள்: ஜப்பான், ஜெர்மனி, இந்தியா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முக்கியமான நாடு. செப்டம்பர் 21, 2004-ல் இந்த நாடுகள் கூட்டாக மற்ற நாடுகளை ஆதரிப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டது. இதை பிரான்சு மற்றும் இங்கிலாந்து ஆகியவை இதை ஆதரிப்பதாக கூரியது.

நம் நாடும் கூடிய விரைவில் நிரந்தர உருப்பினர் ஆகும் என்று நம்புவோம்...வாழ்க பாரதம்...வளர்க தமிழ்...


Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 4/26/2005 05:18:00 PM 2 கும்மாங்குத்துகள்...
வகைகள் அரசியல்

Tuesday, April 05, 2005

The Expanding Universe




மனித குலம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு எடுத்ததும் வந்து விடவில்லை. ஆதியில் மனிதன் இயற்கையை கண்டு பயந்தான். இயற்கை சீற்றங்கள் அவனை பாடாய் படுத்தி விட்டது. முனுக்கென்றால் அவன் உயிர் இழந்தான். இவை யாவும் அவனை யோசிக்க வைத்து விட்டது. இயற்கையை வெல்ல முடியுமோ முடியாதோ, அதன் சீற்றங்களிடமிருந்து தப்பிக்கவாவது வேண்டும் என்று யோசித்தான். அதன் விளைவு தான் விஞ்ஞானம். அது அறிவியல். மனிதன் discovery செய்ய போக அவன் invention செய்ய ஆரம்பித்தான். Discovery-யின் விளைவாக இந்த பிரபஞ்சத்தை ஆராய ஆரம்பித்தான். மண்னை உருக்கி பூதக் கண்ணாடி (lens) செய்ய ஆரம்பித்தான். அந்த ஆடியை வைத்து இந்த பிரபஞ்சத்தை ஆராய்ந்தான். அந்த ஆராய்ச்சி தலைமுறைகளைத் தாண்டி சென்றது. அங்கே கண்ட பல கோடி நட்சத்திரக் குடும்பங்களும், galaxy-க்களும் அவனை ஆச்சரியப்படுத்தின. அவன் பல கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தான். அந்த கேள்விகளில் ஒன்று தான் "இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா?". இதன் விடை "Universe is Expanding".

இந்த கேள்வியை கேட்கும் பொழுது எல்லோரும் ஒருவருக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble). அவர் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை நாம் பார்க்கும் பார்வையை மாற்றியவர். 1929-ல் அவர் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்று காண்பித்தார். (ஆனால் அவரை 1983-ல், அவர் மறைந்து 36 ஆண்டுகளுக்கு பிறகு, தான் அங்கீகரித்து, Space Telescope-க்கு அவர் பெயரை வைத்தார்கள்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஹப்பிள் தன் ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன், "nebulae" (லத்தீனில் mist / cloud) என்ற நட்சத்திரக் கூட்டத்தை பற்றிய வாக்குவாதம் நடைப்பெற்றது. அந்த காலகட்டதில் நம் பால் வெளித் தோற்றத்திற்கு (Milky Way Galaxy) வெளியே பிற Galaxy-க்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஹப்பிள் அந்த nebulae-க்கள் நம்முடைய பால் வெளித் தோற்றத்தை சேர்ந்தது இல்லை என்று கண்டுபிடித்தார். எப்படி கண்டுபிடித்தார்? இதற்கு அவர் அந்த காலக்ஸி-க்கள் வெளியிடும் வெளிச்சத்தின் wavelength-ஐ உபயோகித்தார். WaveLength என்பது இரு அலைகளின் தூரம். ஒளி (light) என்பது சீரான மற்றும் தொடர்ச்சியான அலைகளைக் கொண்டது. இந்த இரு பக்கத்து அலைகளுக்கான தூரத்தை wavelength என்பர். இந்த wavelength தான் ஒரு ஒளியின் நிறத்தை தீர்மானிக்கும். Wavelength அதிகமாக அதிகமாக நிறம் சிகப்பாகவும், குறைவாக குறைவாக ஊதா வாகவும் இருக்கும் (இது மனித கண்களுக்கான ஒரு விளக்கம்). நம் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட wavelength (400 nm - ஊதா to 700 nm - சிகப்பு) உள்ள வெளிச்சம் மட்டுமே தெரியும். மற்றவை கண்ணுக்கு புலப்படாத ரேடியோ அலைகளாகவும் (அதிக wavelength, 10 சென்டிமீட்டர் முதல் சுமார் 100 கிலோ மீட்டர் வரை) , புற ஊதாக் கதிர்களாகவும் (குறைந்த wavelength உதா, X-Ray, Gamma-Ray, 100 நேனோ மீட்டர் முதல் 0.0000001 நேனோ மீட்டர் வரை) கண்ணுக்குத் தெரியாமல் வெளிப்படும்.

இந்த wavelength-களை வைத்து இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதா என்று கண்டுபிடித்தார். ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது (light) அதிக wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் சிகப்பை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மிடம் இருந்து விலகி செல்கிறது என்று அர்த்தம். அதுவே குறைந்த wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் நீலத்தை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருகிறது என்று அர்த்தம். இவைகளை முறையே Red shift மற்றும் Blue shift என்று கூறுவர். அது என்ன Red Shift மற்றும் Blue shift? இதை அறிந்து கொள்வதற்கு முன், Doppler Effect-ஐ பற்றி தெரிந்து கொள்வோம். சாலையில் செல்லும் பொழுது ஒரு வாகனம் உங்களை (சேற்றை வரி இறைக்காமல்) கடந்து செல்வதைப் போல நினைத்துக் கொள்ளுங்கள். அந்த வாகனம் உங்களை நோக்கி வரும்பொழுது அதன் சத்தம் அதிகமாகவும், உங்களை கடந்து செல்லும் பொழுது அதன் சத்தம் குறைவாகவும் இருக்கும். இது எப்படி? அந்த வாகனம் உங்களை நோக்கி வரும் பொழுது அது ஒலி (sound) அலைகளை எல்லா பக்கமும் அனுப்பும். ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள். அந்த ஒலி (sound) உங்களையும் வந்து சேரும். (வந்து சேருவதை உங்களால் உணர முடியவில்லை என்றால் ஒரு நல்ல என்ட் specialist-ஐ, அதாவது ENT specialist-ஐ, பார்க்கவும்). அந்த ஒலி உங்களை நோக்கி வர வர அதன் wavelength சிறுகும். இப்படி சிறுகும் பொழுது அதன் frequency அதிகமாகும். (Frequency - ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பெரும்பாலும் ஒரு நொடியில், ஏற்படும் அலைகளின் எண்ணிக்கை) Frequency அதிகமாக அதிகமாக அதன் சப்தம் (அல்லது சங்கீதம்) அதிகரிக்கும். இதுவே, அந்த ஒலி (sound) உங்களை விட்டு விலகி செல்ல செல்ல அதன் wavelength அதிகமாகும். இப்படி அதிகமாகும் பொழுது அதன் frequency குறையும். Frequency குறைய குறைய அதன் சப்தம் குறையும். (இதை வைத்துத் தான் போக்குவரத்துக் காவலர்கள் நீங்கள் ஒரு வாகனத்தில் செல்லும் வேகத்தை கணக்கிட்டு, வேகமாக சென்றால் கண்டிக்கிறார்கள்).

ஆக, இந்த Doppler Effect-ஐ வைத்து Red Shift மற்றும் Blue Shift-ஐ விவரிக்கின்றனர். ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலையாக இருந்தால், அது பொதுவாக பச்சை நிர ஒளி அலைகளை வெளிப்படுத்தும். ஒரு பொருள் உங்களை நோக்கி வந்தால், அதன் wavelength குறைவாக இருக்கும். அதனால் அதன் frequency அதிகமாக இருக்கும். அதன் நிறம் நீல நிறமாக இருக்கும் (400 nm). இது Blue shift. அதுவே, ஒரு பொருள் உங்களை விட்டு விலகி சென்றல், அதன் wavelength நீளமாக (lengthy) இருக்கும். அதனால் அதன் frequency குறைவாக இருக்கும். அதன் நிறம் சிகப்பு நிறமாக இருக்கும் (700 nm). இது Red Shift. (அம்மாடியோவ்! ஒரே குழப்பமாக இருக்கிறதா...இது வரை புரியவில்லை என்றால் இன்னொரு முறை படிக்கலாம்...)

ஆக...ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Red Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை விட்டு விலகிச் செல்வதாக அர்த்தம். அதுவே, அந்த காலக்ஸியில் இருந்து வெளிப்படும் ஒளி Blue Shift-ஆக இருந்தால் அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருவதாக அர்த்தம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாண்மையான காலக்ஸிக்கள் Red shift-ஆகவே இருக்கிறது. அதனால், இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது. அவரால் இந்த சிகப்பு நிறங்களை (Red shift) வெளிப்படுத்தும் காலக்ஸிக்களின் தூரத்தை அளக்க முடியவில்லை. ஆனால், அவர் கண்டுபிடித்தது, இந்த காலக்ஸிக்கள் எவ்வளவு Red shift வெளிப்படுத்துகிறதோ அந்த அளவிற்கு தூரமானதாகும் என்று. அதாவது, தூரம் அதிகரிக்க அதிகரிக்க அது நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகம் அதிகரிகும். அதாவது, This Universe must be Expanding.

இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் அதற்கு ஒரு மையப் புள்ளி இருக்கவேண்டும் அல்லவா? அது? அடுத்த blog-ல் பார்ப்போம்.


Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 4/05/2005 07:50:00 PM 3 கும்மாங்குத்துகள்...
வகைகள் அறிவியல்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Related Posts with Thumbnails

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்