skip to main | skip to sidebar

நான்

My Photo
சீனு
சென்னை, தமிழ் நாடு, India
வரும் போது ஒன்னும் கொண்டு வர்றதும் இல்ல. போகும் போது எதுவும் கொண்டு போறதும் இல்ல. கடைசியா எடுத்துட்டு போக நாலு பேராவது வேணும்ல...அந்த நாலு பேர தான் தேடிகிட்டு இருக்கேன்... (ங்கொய்யால...கைல மட்டும் கெட்ச்சாங்க...&^#$%&*%#@%&^#)
View my complete profile

டிவிட்டரில்

Labels

சினிமா (20) அறிவியல் (12) சமூகம் (12) அரசியல் (6) பொதுவானவை (6) தொலைக்காட்சி (3) விளையாட்டு (3) காதல் (2) சச்சின் (2) சிரிப்பு (2) சென்னை (2) மத‌ம் (2) AVATAR (1) அசைவம் (1) ஆடித்தள்ளுபடி (1) ஐ.பி.எல். (1) கணிதம் (1) கதை (1) கல்லூரி பிட் (1) சமையல் (1) சிவாஜி (1) சென்னை போலீஸ் (1) சைவம் (1) தமிழ் (1) பதிவர் வட்டம் (1) பத்திரிக்கை (1) பாரதி (1) விகடன் (1)

ஆண்ட்ராய்ட்-ல்...

சின்ன வீடு

  • எ.பி.பா's
    வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி - எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய ப...
    1 year ago

ஃபாலோ மீ...

பழைய சோறு

  • ►  2012 (2)
    • ►  November (1)
    • ►  March (1)
  • ▼  2011 (4)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ▼  April (1)
      • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    • ►  February (1)
  • ►  2010 (8)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
  • ►  2009 (5)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (1)
  • ►  2008 (7)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2007 (9)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2006 (22)
    • ►  December (2)
    • ►  September (3)
    • ►  August (3)
    • ►  July (2)
    • ►  June (2)
    • ►  May (7)
    • ►  March (1)
    • ►  January (2)
  • ►  2005 (12)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  September (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (4)
  • ►  2004 (8)
    • ►  November (1)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (1)
  • ►  2003 (1)
    • ►  June (1)
There was an error in this gadget

Visits


View My Stats

Facebook Badge

சீனு Cheenu

Create your badge

Popular Posts

  • சமையல் டிப்ஸ் - ஆண்களுக்காக
    "உலகில் பெண்கள் 'மட்டும்' தான் சமையல் எக்ஸ்பர்டா? இது என்னடா கொடுமை"-னு மல்லாக்கப் படுத்து (சரக்கடிக்காம இருந்த போதுனு சொன...
  • இலங்கையை பழிவாங்கிய இந்தியா...
    உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது. 3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வ...
  • The Sixth Sense - 'அழகான' பேய் படம்!!!
    வழக்கம் போல படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க பயப்பட்டு இத்தனை நாட்கள் பார்க்காமல் விட்ட படம் இது. எனக்கு horror படங்கள் என்றால் பயங்கர அலர்ஜ...

விழுதுகள்

Sunday, April 03, 2011

இலங்கையை பழிவாங்கிய இந்தியா...




உலகக்கோப்பையை வென்றது இந்தியா. இந்தியா வென்றதை விட, இலங்கையை இந்தியா தோற்கடித்தது பல சிறப்புகளை உடையது.
3 விக்கெட் விழுந்ததும் தோனி உள்ளே வந்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கும். எல்லாம் நல்லபடியாக முடிந்தது தான் தோனியின் வெற்றி. இல்லாவிட்டால், தோனி சொல்லியது போன்று "ஏன் ஸ்ரீசாந்த்? ஏன் அஸ்வின் இல்லை? ஏன் யுவராஜ் வரவில்லை?" போன்ற கேள்விகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும்.

நான் முதல் 25 ஓவர்கள் பார்க்கவில்லை. காரணம், டென்ஷன் அதிகம். இலங்கை 274 அடித்ததும் எனக்கு நம்பிக்கை போய்விட்டது. ஒருவேளை இந்தியா உலக சாம்பியன் ஆகவேண்டுமென்றால் இத்தகைய இன்னிங்க்ஸ் தேவை.

நான் பார்க்காததற்கு இன்னொரு காரணம்...டாஸ்.

தோனி டாஸ் போட, சங்ககாரா "டெயில்" என்கிறார். விழுந்தது "ஹெட்" என்கிறார் ஆட்ட ரெஃப்பரி. தோனி சங்ககாராவுக்கு கை கொடுக்கிறார். ரவி சாஸ்திரியின் மைக் தோனியிடம் செல்ல விழைகிறது. ஆனால், குழப்பம். இருவரும் தான் தான் டாஸ் வென்றோம் என்கின்றனர். டாஸ் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, காரணம், உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் எவரும் இரண்டாவதாக பேட்டிங் செய்ய விருபப்படமாட்டார்கள். நடந்த 9 இறுதி ஆட்டத்தில், 2 முறை தான் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்கள் வென்றிருக்கிறார்கள். (இரண்டும் ஆஸ்திரேலியா என்று நினைக்கிறேன்). காரணம், ப்ரஷ்ஷர்...

சரி! தோனி டாஸ் போட்டார். சங்ககாரா கேட்டார். ஒருவேளை ரெஃப்பரிக்கு காது கேட்கவிலையென்றால், சங்ககாராவுக்கு தான் தெரிந்திருக்கும் தான் என்ன கேட்டோம் என்று. எதற்காக பொய் சொல்லவேண்டும் சங்கா? இதுவரை அவர் மேல் இருந்த மரியாதை எங்கு போனதோ தெரியவில்லை?
மற்றும், தோனி சண்டை போட்டிருக்க வேண்டும். ரஞ்சி கோப்பையில் இதே போன்ற பிரச்சினையின் பாதி நாள் ஆட்டம் தள்ளிப்போனது. தோனி இடத்தில் சங்ககாரா இருந்திருந்தால் சண்டை போட்டிருப்பார். தோனி சண்டை போடாதது வருத்தம் தந்தது.

ஆனால், விராத் கோலியின் விக்கெட் போனதும் தோனி வந்தது ஒரு விகையில் மிகப்பெரிய்ய ரிஸ்க். தோனி சரியான ஃபார்மில் இல்லை. ஆனால், இதை போன்ற சந்தர்ப்பங்கள் தோனிக்கு விருப்பம் தரக்கூடியவை. வேகமாக ரண்களை ஓடி ஓடி குவிக்க வேண்டும், பவுன்டரிகள் கிடைக்காது. ஓடி ஓடி உழைக்க வேண்டும். இது தோனி போன்ற கூல் பெர்ஸனாலிடிகளுக்கு அல்வா போன்றது. இது...ஒரு கேப்டனுக்கு அழகு சேர்க்கக்கூடியது.

ஒரு வேளை இந்தியா தோத்திருந்தால் இந்த டாஸ் பிரச்சினை பெரிய்ய பிரச்சினையாகியிருக்கும். அந்த வகையில் மேட்ச் ரெஃப்பரி கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பார்.

இதையெல்லாம் விட, இந்த கோப்பை சச்சினுக்கு முக்கியமானது. காரணம், என்னவெல்லாம் சாதனை இருக்கிறதோ, அத்தனை சாதனைகளையும் செய்தாகியிருந்தாலும், சச்சின் இருந்த டீம் உலகக்கோப்பையை வென்றதில்லை. ("Sachin Resume completed...") ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் சச்சினின் ஃபெர்பார்மன்ஸ் சூப்பராக இருந்தாலும், மற்ற வீரர்கள் சோபிக்காமல் போனதால் சச்சினுக்கு ஏமாற்றம். கடைசியில் சச்சின் விளையாட ஆரம்பித்த பிறகு பிறந்தவர்கள் (கண்டிப்பாக சச்சினின் ஆட்டத்தை பார்த்து வளார்ந்தவர்கள் + இம்பிரஸ் ஆனவர்கள்) எல்லோரும் சேர்ந்து சச்சினுக்கு கோப்பையை வாங்கி கொடுத்தது அழகு...மறக்காதீர்கள், இந்த உலகக்கோப்பையிசும் சச்சினின் ஃபெர்பார்மன்ஸ் சூப்பர்...

அப்புறம், இந்தியாவில் ஃபீல்டிங். ஃபீல்டிங் இப்படி இருந்தே 274. இல்லையென்றால்...? 300+

இதையெல்லாம் விட இந்த கோப்பை ஏன் சிறந்தது என்றால்...இதை போன்ற ஆட்டத்தில், முக்கியமாக, உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இரண்டவதாக பேட் செய்து வெற்றி பெருவது என்பது மிக மிக கடினம். ஆனானப்பட்ட மேற்கு இந்தியத்தீவே 1983-ல் 183 ரண்களை விரட்டாமல் தோற்றனர். 275 என்பது, கிட்டத்தட்ட பிரம்மாண்டமானது. 31/2 என்று கேள்விப்பட்டபோது ஒரு விருந்தில் இருந்தேன். மனது ஓடவில்லை. மனதை ஆக்கிரமித்தது தோனி போட்ட இரண்டாவது டாஸ்.

வீட்டிற்கு வந்ததும் 123/3 என்றதும் டிவி பார்க்க மனசு வரவில்லை. மற்ற சேனல்களில் எந்த சேனல் ஸ்கோரை போடுகிறதோ அந்த சேனல்களை பார்த்து கொண்டிருந்தேன். பின் ஒருவாரு மேட்ச் பார்க்க ஆயத்தமானேன். ஒவ்வொரு பந்தும் என் BP-யை எகிற வைத்தது.

சென்சுரியை நெருங்கும் கம்பீரை ஒவ்வொரு முறையும் தோனி சென்று ஆசுவாசப்படுத்தி, அவசரப்படாமல் ஆடுமாறு சொல்ல கம்பீரும் கொஞ்சம் நிதானமாக ஆடுகிறார். ஸ்கோர் 99ஆக இருந்தபோது கம்பீர் 50 ரண்கள். அவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 223. கிட்டத்தட்ட 124 ரண்கள் சேர்த்த போது அதில் கம்பீரின் பங்கு 47. எம்புட்டு பொறுமை. நடுவில் வந்த பல புல்டாஸ்களில் கூட சிங்கிள் தான் எடுத்தார்கள். இருந்தாலும் கடைசியில் கம்பீர் அவசரப்பட்டு அவுட் ஆக, தொடர்ச்சியாக அதற்கு பின் ஒரு எல்.பி.டபிள்யூ அப்பீல், தோனி மயிரிழையில் ரன் அவுட்டில் இருந்து 3வது அம்பையரால் தப்பிக்கிறார் என்று ஆட்டத்தின் டென்ஷன் கூடியது.

பவர்ப்ளே வந்தது ஆபத்பாந்தவனாக. இருந்தாலும் பவர்ப்ளேயின் முதல் ஓவரை 'Chucking' மலிங்கா வீச, முதல் 4 பந்துகளில் ரண் இல்லை. பின் அந்த ஓவரில் 3 ரண்கள். அடுத்த ஓவரில் கொஞ்சம் அடித்து, பின் மறுபடியும் மலிங்கா. ஒரு வழியாக பவுன்டரிகளா கண்டுபிடித்து, கடைசியில் வின்னிங் ஷாட்டாகா சிக்ஸர் அடித்தார் தோனி...Stand by-யில் போன உயிருக்கு உயிர் வந்தது.''

கடைசியாக, பாகிஸ்தானை தோற்கடித்ததை விட, இலங்கையை தோற்கடித்ததும் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். அங்கே உட்கார்ந்திருந்த ராஜ'ஃபக்'ஷேவை 'Fcuk'கியது மனதிற்கு கூடிதல் சந்தோஷம். கூப்பிட்டு வைத்து **** அனுப்பியதற்கு நிகர் வேறில்லை. அது ஒன்றே போதும் சந்தோஷத்திற்கு.
எந்த உலக்கோப்பை ஃபைனலும் இந்த மேட்ச் மாதிரி இருந்ததில்லை.

கிரிக்கெட் ஆகட்டும், கால்பந்து ஆகட்டும். பல முறை ஒரு பக்கசார்பு கொண்டதாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த மேட்ச், ஆரம்பத்தின் இந்தியாவிற்கு சாதகமாகவும் (இலங்கை 10 ஓவரில் 31 ரண்கள்/1, 45 ஒவரில் 211/5). பின் 46 - 50 ஓவர்களில் இலங்கை பக்கமும், இந்திய இன்னிங்க்ஸ்ஸில் 31/2 என்று இருந்தது, கம்பீர் + விராத் கோலி பார்ட்னர்ஷிப்பில் நிற்க ஆரம்பித்து, பின் தோனி கம்பீருடன் சேர்ந்ததும் நிலைத்தது. பின் கம்பீர் அவுட் ஆக, சில ட்ராமாக்கள்...பின் சிக்ஸர் அடித்து வென்றது, ஐஸ்கிரீம் மேல் செர்ரி பழம் வைத்தது போன்றது.


அப்புறம், வெகு சுலபமாக சிக்ஸர அடிக்க முடியுமா? தோனி அடித்த முதல் சிக்ஸை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் பார்க்கவும். 

இன்னொன்றை மறக்காதீர்கள். இந்தியா ஃபைனல் வந்தது சாதாரணமாக இல்லை. இங்கிலாந்துடன் மோசமான பௌலிங்கால் டை ஆகி, தென் ஆப்ரிக்காவிடம் ஆப்பு வாங்கி, கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை (டாஸ் தோற்றும்) அபாரமாக தோற்கடித்து, அரை இறுதியில் பாகிஸ்தானை வென்று, இறுதி ஆட்டத்தில் (டாஸ் பிரச்சினையில் தோற்று) ஆட்டத்தை வென்றிருக்கிறோம்.

மாறாக, இலங்கை வென்றது சின்ன சின்ன டீம்களை. மற்றும் கால் இறுதியில் ஸ்பின் ஆகும் பிட்சில் எப்படி பௌலிங் போடுவது என்றே தெரியாத இங்கிலாந்தை மற்றும் அரை இறுதியில் நியூஸிலாந்தை வென்று ஃபைனல் வந்தது இலங்கை.

ஆனால், இந்தியாவின் தலைவிதி? இலங்கையுடனான இதை போன்ற ஃபைனல்களில் 17 முறையில் வெறும் 7 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. மற்றும் 1996-ல் கேவலமாக தோற்று, ரசிகர்களின் கலாட்டாவினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, கல்கத்தாவில் இருந்து வெளியேறினோம். அதற்கு சரியான பழிவாங்கல் இது. அது மட்டும் அல்லாமல், இலங்கை என்றாலே வெறும் வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. இலங்கை என்பதை விட சிங்களர்கள் எனலாம். என்னை பொருத்த வரை 'சிங்கள நாய்கள்'.

மேட்ச் முடிந்ததும் சென்னை ஒரு ரவுன்ட் அடிக்க கிளம்பினேன். 3 மணிநேரம் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தால், எங்கும் கோப்பை வாங்கிய க்ளிப்புகளை காட்டவே மாட்டேன் என்கிறார்கள். (காரணம், ஐசிசியின் கட்டுப்பாடுகள்?)

இந்தியாவின் தவறுகள்:

* ஸ்ரீசாந்தை சேர்த்தது. அஸ்வின் என்னும் கனியிருக்க காய் எதர்கு? இந்தியாவின் முதல் ஆட்டமான பங்களாதேதுடன் ஆடி சொதப்பிய ஸ்ரீசாந்த் கடைசியில் முக்கியமான இறுதி ஆட்டத்தில் சேர்க்கப்பட்டது ஏன்? காரணம், பிட்ச் சீமர்களுக்கு ஸ்விங் ஆகும் என்ற நினைப்பால். அஸ்வின் இந்த பிட்சுக்கு ஒத்து வரலைன்னாலும், ஸ்ரீசாந்தைவிட தேவலை. அஸ்வினாவது ஓவருக்கு 5 ரண்களுக்கு மேல் கொடுக்கமாட்டான். சொத்தை பந்து போட்டு அதை பேட்ஸ்மென் பவுன்டரிக்கு அடித்தாலும், ஏதோ மெர்வின் டில்லான் போல முறைத்து சண்டை போடத்தான் ஸ்ரீசாந்த் லாயக்கு. மொத்தத்தில் வேஸ்ட். ஏதோ ப்ரவீன் குமாருக்கு அடிபட்டதால் உள்ளே வந்த ஸ்ரீசாந்த், கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தவேயில்லை.

* டாஸுக்கு சண்டை போடாதது.

* வழக்கமாக கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் விக்கெட் கீப்பிங் பன்னும் தோனி, சமரவீராவின் கேட்ச் என நினைத்து விக்கெட் முன்னால் வந்து பந்தை பிடித்து அப்பீல் செய்து அதுவும் இல்லாமல் போனது. பந்தை விட்டிருந்தால் அது ஸ்டம்ப் மேலேயாவது விழுந்திருக்கும்.

* பேட்டிங் பவர்ப்ளே நம்மால் கட்டுபடுத்த முடியாது என்றாலும், இந்த அளவுக்கு வாரி வழங்கியிருப்பது கவலை தரும் விஷயம்.

இலங்கையின் தவறுகள்:

* இலங்கை செய்த தவறு பிட்னஸ் இல்லாத முரளியை சேர்த்தது. அதுவும் அஜந்தா மென்டிஸை கழற்றி விட்டு. காரணம்? இது முரளிக்கு கடைசி மேட்ச். உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் மெக்ராத்துடையது. முரளி 68, மெக்ராத் 71. அந்த சாதனையை முறியடிக்கவும், முரளியின் சாதனைகளை அங்கீகரிக்கவும் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கருதுகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் இது தவறு. முரளியால் பந்தை ட்ரோகூட செய்யமுடியவில்லை. அதனால் பந்தை அவ்வளவாக சுழல வைக்கமுடியவில்லை.

* மேத்யூஸ் இல்லாமல் போனதாலும் முரளியை சேர்த்ததாலும் கிட்டத்தட்ட 4 மாற்றங்களை செய்ய வேண்டியதாக போய்விட்டது சங்ககாராவால். ஸ்ரீசாந்தை போலவே இலங்கையின் முதல் போட்டியில் மட்டும் விளையாடிய ரந்தீவ்(?) உள்ளேஎ கொண்டுவரப்பட்டார்.

* 30 ரண்கள் இருக்கும் போது கம்பீரின் கேட்சை குலசேகரா விட்டது, சங்ககாரா கம்பீரின் ஒரு ரன் அவுட்டை மிஸ் பன்னியது மற்றும் சில பீல்டிங் + ஓவர் த்ரோக்கள் இலங்கைக்கு ஆப்பு வைத்தது.

இருந்தாலும், இந்த வெற்றியை பதிவு செய்ய, சில படங்கள் கீழே...












Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
מחבר: சீனு @ 4/03/2011 05:17:00 AM
வகைகள் விளையாட்டு

5 கும்மாங்குத்துகள்...:

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

Sunday, April 3, 2011 at 6:13:00 AM GMT+5:30
கன்கொன் || Kangon said...

Get your facts straight.
It was Dhoni who lost the toss first time as well.
Don't act like a neutral guy, if you aren't really a neutral guy.
http://timesofindia.indiatimes.com/sports/cricket/cricket-world-cup-2011/news/Sangakkara-Dhoni-in-retaken-Cup-toss-controversy/articleshow/7851294.cms

Sunday, April 3, 2011 at 12:59:00 PM GMT+5:30
சீனு said...

சரிங்க நல்லவரே...

இதயும் படிங்க...

http://cricket-cricketnews.blogspot.com/2011/04/world-cup-toss-controversysangakara.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/dlpU+(Cricket+News)

Sunday, April 3, 2011 at 3:54:00 PM GMT+5:30
சீனு said...

//Don't act like a neutral guy, if you aren't really a neutral guy.//

மறந்திட்டேனே...நான் எங்கே நடுநிலையாளன் என்று சொன்னேன். நான் என் நாட்டுக்கு சப்போர்ட் பென்னுபவன்... ;)

Monday, April 4, 2011 at 12:38:00 AM GMT+5:30
Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Tuesday, July 31, 2012 at 4:34:00 PM GMT+5:30

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Related Posts with Thumbnails

Blog Design by Gisele Jaquenod | Distributed by Deluxe Templates

Blog Design Copied by சீனு ;) | காட்டிக் கொடுத்தவர்: கூகிள்