Friday, January 19, 2007

50. மணி - ஒரு நண்பனின் கதையிது


நம்முடன் விளையாடி, உறவாடிய நண்பன் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அவன் பெயர் மணி. எங்கள் தெரு தான். எதிர் வீடு. 'வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி'யவன். என்னை விட ஓரிரு வயது மூத்தவன். எல்லோரையும் போலத்தான் இருந்தான். தந்தை சிறிய வயதிலேயே இறாந்து விட்டார். தாயும், அவன் அண்ணனுடனும் வாழ்ந்து வந்தான். சிறிய வயதில் அவன் வயதுக்குறிய வளார்ச்சி அவன் அறிவுக்கு இல்லை தான். ஆனால், மற்றவரை போல தான். "எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாம். என்ன நான் கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டவன்" என்று (இயக்குனர்) பாலா சொல்வார். அப்படித்தான் அவனும். பேச்சு கொஞ்சம் போல குழரி குழரி பேசுவான். அதனால் அவனுக்கு தெருவில் வைத்த பெயர் "புளுத்த வாயன்" (அந்த வலியெல்லாம் உணராத வயசு). அவனை அப்படி ஏதாவது சொன்னால் போதும் அவன் அம்மா சண்டைக்கு வந்துவிடுவார்கள். எங்களுடன் தான் விளையாடுவான். எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தான்.

பின், ஒருநாள் அவனுக்கு ஆறுதலாய் இருந்த ஒரே சீவனான அவன் தாயும் இறந்தார். அப்பொழுது அவனுக்கு கூட இருக்க வேண்டியவர் அவர் அண்ணன் மட்டுமே. ஆனால், அவர் அவனை கண்டுகொள்ளவில்லை. அவர் திருமணம் ஆகி அவனை நிர்கதியாய் விட்டுவிட்டு சென்றுவிட்டார். சொத்திலும் பங்கு கொடுக்கவில்லை போல் இருக்கிறது. பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்கும் தெரியவில்லை. காரணம், நானும் வேலை தேடி வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

அவன் தீவிர தி.மு.க. அனுதாபி. அவனை சீண்டவேண்டும் என்றால் கலைஞரை ஏதாவது சொன்னால் போதும். உடனே கோபம் வந்துவிடும். எங்கு இருந்தாலும் தேர்தல் என்றால் கட்டாயம் பூத்திற்கு வந்துவிடுவான். அவன் தான் பூத் ஏஜென்ட். அதனால், தேர்தலுக்கு அவனை கட்டாயம் தெருவில் பார்க்கலாம்.

கொஞ்ச நாள் பார்க்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ஊரில் இருந்து சென்னை செல்லும் இரயிலில் அவனை பார்த்தேன். கூட ஒரு 7-8 சிறுவர்களுடன் இரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இரயிலை சட்டையால் சுத்தப்படுத்தி பின் காசு கேட்பார்களே, அதுபோல. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை. பின் கொஞ்ச நேரம் கழித்து அவன் வேலையை தொடர போய்விட்டான். பின் தான் உறைத்தது அவன் மணி என்று. பொது இடத்தில் அவனிடம் பேச எனக்கும் வெட்கமாக இருந்தது (ம்ஹூம்...இதை சொல்ல மட்டும் வெட்கம் இல்லை இந்த ராஸ்கலுக்கு). பின் தான் அவனுக்கு உதவாதது வருத்தத்தை தந்தது. அவன் என்ன எதிர்பார்த்திருப்பான்? கொஞ்சம் போல பணம். அவனுக்கு கொடுக்காததை நினைத்து எனக்கு நானே வெட்கப்படவேண்டியிருந்தது.

அப்புறம் அவனை தெரு பக்கம் காணவில்லை. இந்த பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த பொழுது (என் நண்பர்களில் ஒருவன் சொன்னது, "எல்லா சண்டாளன்களும் ஒன்னா வர்ராங்க. ஊர் என்ன ஆகப்போகுதோ?"), நண்பர்களுடன் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்களெல்லாம் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்து நின்றான் மணி. மழிக்காத தாடியுடனும், தலைவிரிகோலமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சற்று நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல் வெறித்து பார்த்துவிட்டு பின் சென்றுவிட்டான். அவன் என்ன நினைத்திருப்பானோ? பின் அவனைப் பார்த்ததும் அங்கு நிசப்தம் நிலவியது. எங்கள் யாருக்கும் பேச்சே வரவில்லை. வெங்கி, "ஏண்டா! நம்ம கூட வெளயாடின ஒருத்தன இப்படி பாகுறப்போ நமக்கே பகீர்ன்னு இருக்குடா" என்றான். வெலவெலத்து போய்விட்டேன். உண்மை தான். என சொல்வது என்றே தெரியவில்லை.

4 comments:

  1. எனக்கும் கிட்டத்தட்ட இது மாதிரியான அனுபவம் உண்டு. உணர்வு புரிகிறது...

    ReplyDelete
  2. வாங்க சிந்தாநதி...உங்களுக்குமா??? :(

    ReplyDelete
  3. என் நண்பன் பாரி (மணியின் நண்பனும்) மின்னஞ்சலில் அனுப்பியது...

    Enda, avana trainla paarthappo.. help panna koochapatta athu ok. Unga theruvula friends-oda pakkumbothu...Enn amaithiyai irundheenga? Avanukku ethavathu kaasu kodukka vendiyathu dhane...

    Naan avana oru varushathukku munnadi paaththappa ellam avan avvalavu mosama illai... Avan ennai enga paththalum correcta en per solli kaasu ketpaan.Enna onnu trainla paththa mattum per sollama kasu ketpan...Naan onnavathu padikkumbothu avan 5th padichinu irundhan, enga annanoda class mate,appo schoola erpatta pazhakkam...Adhukku appuram avan ellar koodavum padichcchiruppan... adhu vera vishayam...(Idha sollumbothu enakku innonu ngabagam varutthu...enga annanoda padichcha innoruthan Govindaraj(tailor Balakrishnan son,corner house in your street) avanum en kooda padichchan...Adhe maathiri Parangusan ,avan enga akka kooda padichchavan...

    ReplyDelete